Lekha Books

A+ A A-

சிலையும் ராஜகுமாரியும்

silayum rajakumariyum

சுராவின் முன்னுரை

1945-ஆம் ஆண்டில் ஆலப்புழை மாவட்டத்தைச் சேர்ந்த முதுகுளத்தில் பிறந்த பி.பத்மராஜன் (P.Padmarajan) மலையாளத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். அவருடைய சிறந்த புதினங்கள் பல திரைப்படங்களாக வடிவமெடுத்திருக்கின்றன. பத்மராஜனின் முதல் நாவலான ‘நட்சத்திரங்களே காவ’லுக்கு 1972-ஆம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. பரதன் இயக்கிய முதல் படமான ‘பிரயாண’த்திற்கு திரைக்கதை எழுதியவர் பத்மராஜன்தான்.

1979-ஆம் ஆண்டில் பத்மராஜன் ‘பெருவழியம்பலம்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ஓரிடத்தொரு பயில்வான், கள்ளன் பவித்ரன், கூடெவிடெ?, திங்களாழ்ச்ச நல்ல திவசம், நமுக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள், தேசாடனக்கிளி கரயாரில்ல, அரப்பட்ட கெட்டிய கிராமத்தில், தூவானத் தும்பிகள், மூணாம் பக்கம், அபரன், இன்னலெ, ஞான் கந்தர்வன் ஆகிய திரைப்படங்களை பத்மராஜன் இயக்கினார். அனைத்துப் படங்களும் மிகச் சிறந்த படங்களே.

 இவை தவிர, தகர, சத்ரத்தில் ஒரு ராத்ரி போன்ற 18 திரைப்படங்களுக்கு பத்மராஜன் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். பல குறிப்பிடத்தக்க பரிசுகள் இவரைத் தேடி வந்திருக்கின்றன.

 ‘சிலையும் ராஜகுமாரியும்’ (Silaiyum Rajakumariyum) புதினத்தைப் படிக்கும்போது இப்படியும் ஒரு கதாபாத்திரத்தை வைத்து கதை எழுத முடியுமா என்ற வியப்பு அனைவரின் மனதிலும் ஏற்படும். நான் இதை மொழி பெயர்த்ததற்குக் காரணமும் அதுதான். 1991-ஆம் ஆண்டில் மரணத்தைத் தழுவிய பத்மராஜன் இன்றும் மக்களின் உள்ளங்களில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அதற்குக் காரணம், இத்தகைய சிறந்த இலக்கியப் படைப்புகளே.

 இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

 அன்புடன், 

சுரா(Sura)

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel