Lekha Books

A+ A A-

சிலையும் ராஜகுமாரியும் - Page 2

silayum rajakumariyum

1. தமாஷ் கோட்டை

து ஒரு மணல்வெளி. எவ்வளவோ பரப்பளவில் நீண்டு பரந்து கிடக்கும் அந்த மணல்காட்டின் எல்லைகளை மிகவும் சரியாகக் கண்டுபிடித்ததாகக் கூறக் கூடியவர்கள் அதிகம் இல்லை. வானத்தில் பயணம் செய்பவர்கள் பாலைவனத்தின் ஒரு எல்லை கடலில் போய் தொடுவதைப் பார்த்திருப்பார்கள். அதனால்தான் கடல் பின்வாங்கியபோது, வெளியே வந்த மணல் பரப்புதான் அது என்று நினைப்பதில் தவறே இல்லை.

வானத்தின் நீல நிறம் தெரியும் எல்லையற்ற வெண்மையில், ஆங்காங்கே தலையை நீட்டிக் கொண்டிருக்கும் கள்ளிச் செடிகள் மலர்களை விரிப்பதை நீக்கினால், எந்தவொரு தொந்தரவும் இல்லாத அந்தப் பரப்பிற்குக் குறுக்கே, கயிறு கட்டியதைப் போல போய்க் கொண்டிருக்கும் ஒரு கறுப்பு நிற சாலை இருக்கிறது. சாலையின் ஒரு பக்கத்தில் வெளி உலகமும் இன்னொரு பக்கத்தில் "ஃபன் போர்ட்" என்ற "தமாஷ் கோட்டை"யும் இருக்கிறது.

"தமாஷ் கோட்டை"யின் உரிமையாளர் ஒரு மார்வாடி குரூப். சரியாகக் கூறுவதாக இருந்தால் ஒரே ஒரு மார்வாடி. "தீருலால் அசோசியேட்ஸ்" என்று கூறும்போது, தீருலால் குடும்பம் என்றே அர்த்தம். இப்போதைய தீருலால்தான் இப்போது அதன் உரிமையாளர்.

தீருலால் குடும்பத்திற்கு பாலைவனத்தில் அந்த அளவிற்கு ஒரு இடம் எப்படிக் கிடைத்தது என்பதைப் பற்றிப் பல கதைகள் இருக்கின்றன. காதல் செயல்களில் ஈடுபடுவதற்காக வந்து, கடலில் பாதை இலக்கைத் தவறவிட்டு, காற்றிலும் புயலிலும் சிக்கிக் கொண்ட பரமேஸ்வரனையும் பார்வதியையும் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய ஒரு படகோட்டிக்கு, அதற்குக் கைம்மாறாகக் கடவுள் கடலை வற்ற வைத்து மணலாக ஆக்கி வரமாக அளித்தது தான் அந்தப் பாலைவனம் என்பதுதான் அதில் ஒரு கதை. அந்தப் படகோட்டி தீருலாலின் மூத்த முன்னோடியாக இருந்திருக்கலாம்.

அப்படியென்றால் பரமேஸ்வரன் தீருலாலின் தாத்தா வருவதற்கு முன்பே அதைச் செய்திருக்கலாமே என்று கேட்கும் சந்தேக மனிதர்களுக்காக இருக்கும் இன்னொரு கதை, புறம்போக்கு நிலத்தில், யாருடைய அனுமதியையும் எதிர்பார்க்காமல் கைப்பற்றி, காலப்போக்கில் அதைத் தன்னுடைய சொந்தப் பெயரில் எழுதி வைத்துக் கொண்ட இன்னொரு தைரியசாலியான தீருலாலின் அக்கிரமச் செயல்களுடன் தொடர்பு கொண்டு இருக்கிறது.

எது எப்படி இருந்தாலும் மிகவும் வயதான மனிதர்களின் நினைவுகளில்கூட "தமாஷ் கோட்டை" கடந்து போய்விட்ட நாகரீகங்களுடனும் ஏமாற்று வேலைகளுடனும் தங்கி நின்று கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

"சுற்றுலா பயணிகளின் சொர்க்கம்" என்று குறிப்பிடப்படும் அந்த கோட்டையில் எல்லா காலங்களிலும் சுற்றுலாப் பயணிகள், கல்விச் சுற்றுலா வரும் மாணவர்கள் ஆகியோரின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஆங்காங்கே சிறிய அளவில் பசுமையைப் பார்த்திருக்கும் கண்களுக்கு "கோட்டை" அளிக்கும் முதல் ஆச்சரியமே மரங்கள், இலைகள் ஆகியவற்றின் பச்சை நிறம்தான். அந்தப் பாலைவனத்தில் இந்த அளவிற்கு மரங்களையும் செடிகளையும் மலர்களையும் எப்படி நட்டு வளர்த்திருக்கிறார்கள் என்று கேள்வி கேட்காத ஒரு பயணி கூட அங்கு வந்ததில்லை. அதற்காக அதன் உரிமையாளர் செலவழிக்கும் பணத்தின் கணக்கைக் கேட்டு வாய் பிளந்து நிற்காதவர்களும் யாருமில்லை. எவ்வளவோ மைல்களுக்கு அப்பால் இருக்கும் கடலில் இருந்து குழாய் வழியாக நீரைக் கொண்டு வந்து சுத்திகரிக்கப்பட்ட பிறகு தான் அங்கு அது பயன்படுத்தப்படுகிறது. தினமும் லட்சக் கணக்கான ரூபாய் செலவழிக்கப்படும் ஒரு விஷயம் அது என்பதை நவீன அறிவியல் அறிஞர்கள் கூறி தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

மணல் காட்டிற்கு மத்தியில், அந்தத் தீவில் இருக்கும் ஒரே சொத்துகள் அந்த "தமாஷ் கோட்டை"யும், பிறகு தீருலால் குடும்பத்திற்குச் சொந்தமான பூர்வீக வீடும் மட்டும்தான். மீதி அனைத்தும், நாம் எல்லாரும் வந்து போகின்றவர்கள்தான். நமக்கெல்லாம் அங்கு எவ்வளவோ தமாஷ்கள் தோன்றலாம் என்றாலும், உரிமையாளரைப் பொறுத்தவரையில் அது சிறிதும் தமாஷ் அல்ல. அவருக்கு அது மிகவும் சீரியஸான வியாபாரம். நுழைவு டிக்கெட் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வீதம் வசூலில் மட்டுமே நல்ல தொகை கிடைக்கும். உள்ளே நுழைந்துவிட்டால், பத்து, இருபது, ஐம்பது, நூறு என்று ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கான டிக்கெட்டுகள் வேறு இருக்கின்றன. தனித்தனி ஆச்சரியங்களை அனுபவித்து தெரிந்து கொள்வதற்கு, செலவு செய்யத் தயார் பண்ணிக் கொண்டு ஒரு கோடி ரூபாய்களைக் கொண்டு போனால், ஒரு பைசாவைக்கூட திரும்பக் கொண்டு வர முடியாது என்பது எல்லாருக்கும் நன்கு தெரிந்திருக்கும் ஒரு உண்மையாகும்.

மரங்களில் பல ஜாதிகளைச் சேர்ந்த குரங்குகள், பல நிறங்களைக் கொண்ட ஓணான்கள், அணில்கள், கிளிகள் என்று ஆரம்பித்து வானத்தில் பறக்கும் புகை வண்டி வரை அந்தக் கோட்டைக்குள் இருக்கின்றன. பெரிய எருமைகளும் ஒட்டகங்களும் குதிரைகளும் இழுக்கும் வண்டிகளில் பயணம் செய்து நீங்கள் அந்தப் பிரதேசம் முழுவதையும் சுற்றிப் பார்க்கலாம். அவற்றைத் தவிர, வேறு எந்த வாகனங்களும் அதற்குள் நுழைய முடியாது. அப்படிப்பட்ட வண்டிகளில் நூறு பேர் வரை ஒன்றாகப் பயணம் செய்யக்கூடிய, யானை இழுக்கக்கூடிய வண்டி வரை இருக்கிறது. எருமை இழுக்கும் வண்டிகளில் ஒரே நேரத்தில் பத்து நபர்கள் வரை ஏறலாம். அவற்றில் கிராமத்து இசைக் கருவிகளின் இசையுடன், மண் வாசனை கொண்ட சில பாடல்களைப் பாடும் இளம் பெண்கள், உங்களுடைய உற்சாகத்திற்கு உஷ்ணமூட்டுவார்கள். பூ மரங்கள் மட்டும் இருக்கும் நடைபாதையும், காதலர்களுக்கென்றே இருக்கும் தனிப்பட்ட மூலையும், நவீனமான எதுவும் கிடைக்கக்கூடிய விசாலமான ஷாப்பிங் காம்ப்ளெக்ஸும் நீச்சல் குளங்களும், நான்கு அடிகள் எடுத்து வைத்தால் முகத்தின் மீது நீரைப் பீய்ச்சி அடிக்கும் "கோபக்கார பால"மும், வேறு பல வகைப்பட்ட அற்புதங்களை வெளிப்படுத்தும் சிலைகளும், குட்டிகளை மேலே ஏற்றிக் கொண்டு ஊர்ந்து கொண்டிருக்கும் பெரிய ஆமைகளும், பல வகையான விளையாட்டுகளையும் அறிந்து வைத்திருக்கும் டால்ஃபின் மீன்களும், பணமுள்ளவர்கள் தங்கி சந்தோஷப்படுவதற்காக இருக்கும் சொர்க்கத்திற்கு நிகரான காட்டேஜ்களும், சூதாட்ட விளையாட்டு நடக்கும் இடங்களும், குழந்தைகளை சந்தோஷப்படுத்துவதற்காக விளையாட்டுகள் காட்டும் தடியர்களும் கோமாளிகளும் மேஜிக் செய்பவர்களும், எலக்ட்ரானிக் அற்புதங்களைக் காட்டும் நீர் ஊற்றுகளும், ஐஸ் ஸ்கேட்டிங் உள்ளடக்கிய விளையாட்டுக் கிடங்கும், தெளிவான ஆகாயமும் சந்திர மண்டலமும், சாய்வான பெஞ்சுகளும் - எல்லாம் சேர்ந்து "கோட்டை"க்கு வரும் ஒரு ஆளை ஆச்சரியப்படச் செய்யக் கூடிய எல்லா விஷயங்களும் அங்கு இருந்தன.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

ஓநாய்

March 5, 2016

பழம்

பழம்

July 25, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel