Lekha Books

A+ A A-

கிழவனும் கடலும் - Page 32

Kizhavanum kadalum

அது எல்லா விஷயங்களையும் தவறாக ஆக்குகின்றன.” அவன் பேச்சை நிறுத்தினான். இப்போது மீனைப் பார்ப்பதற்கு அவன் விரும்பவில்லை. ரத்தம் வழிந்ததாலும், நீரில் நீண்ட நேரம் கிடந்ததாலும் அவனுக்கு கண்ணாடியின் பின்பகுதியில் பூசப்பட்டிருக்கும் வெள்ளி நிறம் வந்து சேர்ந்திருந்தது. உடலில் இருந்த கோடுகள் அப்போதும் தெளிவாகத் தெரிந்தன.

“மீனே. நான் அந்த அளவிற்கு தூரத்திற்குப் போயிருக்கக் கூடாது.” அவன் சொன்னான்: “எனக்கும் நல்லது நடக்கவில்லை. உனக்கும் நல்லது நடக்கவில்லை. என்னை மன்னித்து விடு, மீனே.”

“இனி... கத்தி கட்டப்பட்டிருப்பதைப் பார்த்து, கட்டு அறுந்து போய் விட்டதா என்பதைப் பார்.” அவன் தனக்குத் தானே கூறிக் கொண்டான்: “அதற்குப் பிறகு கையைச் சரி பண்ணி வை. ஏனென்றால், இனியும் சில வருவதற்கு இருக்கிறது...”

“கத்தியைத் தீட்டுவதற்கு ஒரு கல் இருந்தால்...” துடுப்பின் கைப்பிடியில் இருந்த கட்டைக் கூர்ந்து ஆராய்ந்து பார்த்துவிட்டு கிழவன் சொன்னான்: “நான் ஒரு கல்லைக் கொண்டு வந்திருக்க வேண்டும்...”

“நீ ஏராளமான சாமான்களை உன்னுடன் கொண்டு வந்திருக்க வேண்டும்.” அவன் நினைத்தான்: “ஆனால், நீ எதையும் கொண்டு வரவில்லையே!”

“கிழவா, உன்னிடம் என்னவெல்லாம் இல்லை என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரமில்லை இது. இங்கு இருக்கும் பொருட்களை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்.”

“நீ எனக்கு தாராளமாக நல்ல அறிவுரைகளைக் கூறுகிறாய்.” அவன் உரத்த குரலில் சொன்னான்: “அறிவுரைகளால் நான் வெறுப்படைந்து போய் இருக்கிறேன்.”

அவன் சுக்கானை கைக்கு கீழே அழுத்திப் பிடித்தான். படகு முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்க, இரு கைகளையும் நீருக்குள் மூழ்க வைத்தான்.

“கடைசியாக வந்த சுறா மீன் எந்த அளவிற்கு கொண்டு போனது என்ற விஷயம் கடவுளுக்குத் தெரியும்.” அவன் சொன்னான்: “ஆனால், படகின் எடை முன்பைவிட மிகவும் குறைந்து போய்விட்டது.” மீனின் உடலின் பகுதிகள் கிழிந்து தாறுமாறாக்கப்பட்ட கீழ்ப்பகுதியைப் பற்றி சிந்திப்பதற்கு அவன் விரும்பவில்லை. சுறா மீனின் ஒவ்வொரு குதித்தலிலும் தாவலிலும் மாமிசம் கடித்து எடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் இதற்குள் எல்லா சுறா மீன்களுக்காகவும் கடலின் தேசிய பாதை அளவிற்கு விசாலமான ஒரு ரத்தத்தாலான பாதை போடப்பட்டிருக்கிறது என்பதும் கிழவனுக்குத் தெரியும்.

“ஒருவனுக்கு குளிர் காலத்திற்கு முழுமையாகப் போதும் என்று கூறக் கூடிய அளவிற்கு அந்த மீன் இருந்தது.” கிழவன் நினைத்தான்: “இனி அதைப் பற்றி சிந்திக்க வேண்டாம். வெறுமனே ஓய்வெடுத்துக் கொண்டிரு. அவனிடம் எஞ்சியிருக்கும் மாமிசத்தை பத்திரமாக பாதுகாக்கக் கூடிய வகையில் கைகளைச் சரி பண்ணிவை. கடல் நீரில் கலந்திருக்கும். ரத்தத்தின் வாசனையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது என் கைகளில் இருக்கும் வாசனை எந்த அளவிற்கு மிகவும் சாதாரணம் என்பது மட்டுமல்ல- கைகளிலிருந்து அப்படியொன்றும் ரத்தம் அதிகமாக வெளியேறவில்லை- குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி காயம் எதுவும் இல்லை என்பதுதான் உண்மை. ரத்தம் வெளியே வந்தது- இடது கையை மரத்துப் போகும் தன்மையிலிருந்து காப்பாற்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது.”

“இப்போது நான் எதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பது?” அவன் நினைத்தான். “எதுவும் இல்லை. அடுத்த சுறா மீன்களின் வருகைக்காக காத்திருப்பதைத் தவிர, வேறு எதுவும் சிந்திப்பதற்கு இல்லை. இது ஒரு கனவாக இருந்திருக்கக் கூடாதா என்று நான் மனதில் நினைக்கிறேன். ஆனால், யாருக்குத் தெரியும்? எல்லா விஷயங்களும் நல்ல முறையில் முடிந்தன என்று வரலாம்.”

தொடர்ந்து தனியாக இருந்த ஒரு கரண்டியைப் போன்ற மூக்கைக் கொண்ட சுறா மீன் வந்தது. நீர்த்தொட்டிக்குள் தலையை நுழைப்பதற்கு வரக் கூடிய ஒரு பன்றியைப்போல அவனுடைய வரவு இருந்தது- உங்களுடைய தலையை நுழைக்கக் கூடிய அளவிற்கு அவ்வளவு பெரிய வாய் பன்றிக்கு இருக்கும்பட்சம் மீனைத் தாக்குவதற்கு கிழவன் அவனுக்கு நேரம் தந்தான். பிறகு துடுப்பில் கட்டப்பட்டிருந்த கத்தியை அவனுடைய மூளைக்குள் குத்தி இறக்கினான். ஆனால், சுறாமீன் பின்னோக்கி திடீரென்று திரும்பி உருண்டு புரண்டு விலகிச் சென்றது. கத்தியின் வாய்ப் பகுதி அறுந்துவிட்டது.

கிழவன் படகைக் கட்டுப்படுத்துவதில் மூழ்கினான். அந்த பெரிய சுறா மீன் நீருக்குள் மூழ்குவதை அவன் பார்க்கக்கூட இல்லை. முதலில் அவன் தன்னுடைய முழு உருவத்தையும் வெளியே காட்டினான். பிறகு அந்த உருவம் சிறியதாகவும், இறுதியில் ஒரு துகளைப் போலவும் தெரிந்தது. அந்த காட்சி கிழவனை எப்போதும் ரசிக்கச் செய்து கொண்டிருந்தது. ஆனால், இப்போது அவன் அந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை.

“என் கையில் பாய்மரம் இருக்கிறது.” அவன் சொன்னான்: “ஆனால், அதனால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. இரண்டு துடுப்புகளும் சுக்கானும் சிறிய கொம்பும் என்னிடம் இருக்கின்றன.”

“இப்போது அவை என்னை கீழே விழச் செய்திருக்கின்றன.” அவன் நினைத்தான்: “சுறா மீன்களை அடித்துக் கொல்ல முடியாத அளவிற்கு வயதான மனிதனாக நான் ஆகிவிட்டேன். எனினும் துடுப்புகளும் சிறிய கொம்பும் சுக்கானும் இருக்கும் காலம்வரை நான் முயற்சித்துக் கொண்டே இருப்பேன்.”

கிழவன் மீண்டும் கைகளை நீரில் நனைத்தான். மதிய நேரம் தாண்டி நீண்ட நேரமாகி விட்டிருந்தது. கடலையும் வானத்தையும் தவிர, அவன் வேறு எதையும் பார்க்கவில்லை. வானத்தில் முன்பைவிட காற்று அதிகமாக இருந்தது. சீக்கிரமே கரையைப் பார்க்க முடியும் என்று கிழவன் நினைத்தான்.

“கிழவா, நீ மிகவும் தளர்ந்து போய்விட்டாய்.” அவன் சொன்னான்: “உள்ளுக்குள் நீ களைத்துப் போனவன்தான்.”

சூரியனின் அஸ்தமனத்திற்குச் சிறிது முன்பு வரை சுறா மீன்கள் மீண்டும் மீனைத் தாக்கவில்லை.

தவிட்டு நிறத்தைக் கொண்ட சிறகுகள் முன்னோக்கி வந்து கொண்டிருப்பதை கிழவன் பார்த்தான். மீன் நீரில் உண்மையாகவே உண்டாக்கி விட்டிருந்த பரவலான ரத்தப் பாதையின் வழியாகத்தான் அவற்றின் பயணம் நடந்து கொண்டிருந்தது. ஆனால், அவற்றின் நோக்கம் ரத்த வாசனை அல்ல. ஒன்றாகச் சேர்ந்து நீந்தியவாறு படகைத் தேடி அவை வந்து கொண்டிருந்தன.

கிழவன் சுக்கானை அழுத்திக்கொண்டு, காற்றுப் பாயின் கயிறைக் கட்டி, சிறிய கழியை எடுப்பதற்காக பாய்மரத்தை நோக்கி கையை நீட்டினான். இரண்டரை அடி நீளத்தில் அறுத்தெடுக்கப்பட்ட, ஒடிந்துபோன துடுப்பின் கைப்பிடியே அது. கைப்பிடியின் வளையத்தின் மூலம் ஒரு கையால் மட்டுமே அதை பலன் கிடைக்கிற வகையில் பயன்படுத்த அவனால் முடியும். சுறா மீன்கள் வருவதைப் பார்த்துக்கொண்டே அவன் தன் வலது கையை அதில் இறுக பிடித்தான். அவை இரண்டுமே “கவானோ” இனத்தைச் சேர்ந்தவையே.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel