Lekha Books

A+ A A-

முள் மேல் மனசு - Page 10

Mull mal manasu

குணத்தைக் கொண்டு கிடைக்கிறது. கண் போன போக்கிலே கால் போகக் கூடாது. மனுஷனுக்கு சுயக் கட்டுப்பாடு வேணும். அடங்காம தறி கெட்டு ஓடற குதிரையைக் கடிவாளம் போட்டு அடக்கற மாதிரி மதிகெட்டு ஓடப் பார்க்கற மனசைக் கட்டுப்படுத்தணும். அப்பதான் வெளில இருக்கற எந்தக் கெட்ட விஷயங்களும் உன் மனசுக்குள்ள ஆதிக்கம் செலுத்த முடியாது. வேற எதனாலயும் மனசு பாதிக்காது. உன் உள் உணர்வு சுதந்திரமாயிடும். இப்படி ஒரு உறுதியான நிலைக்கு வந்துட்டா நீ என்னைக்கும் நல்லா வாழ முடியும். ரத்தத்துல இளமை இருக்கும்போது சித்தம் தடுமாறக் கூடாது. பச்சையா பேச வேண்டாமேன்னு பார்க்கறேன். புரியும்னு நினைக்கிறேன்.”

“புரியுது ஸார்”.... மதனின் குரல் கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல் ஒலித்தது. தொடர்ந்து மெதுவாகப் பேசினான்.

“ஸார் நான் கேட்டது...”

“ஸாரி மதன். உங்க அப்பாவுக்கு நான் பட்ட நன்றிக் கடனுக்காக ஆரம்ப காலத்துல உனக்கு பணம் குடுத்து உதவி செஞ்சேன். நீயும் உழைச்சு முன்னுக்கு வந்தே. ஆனா, நீ சம்பாதிச்ச பணமே உனக்கு சில கெட்ட பழக்கங்களையும் சேர்த்திருக்கு. மனுஷனா பிறந்து வாழ்வது ஒரு முறைதான். இன்னார் நல்லா வாழ்ந்தார்ன்னு வரும் தலைமுறை பெருமையா பேசணுமே தவிர ‘இப்படி வீழ்ந்துட்டாரே’ன்னு இழிவா பேசிடக் கூடாது. உன்னைப் பத்தி நான் கேள்விப் பட்ட தகவல்கள் மோசமானவை. உன் எதிர்காலத்தை நாசமாக்குபவை. பசுவுக்கு புல் வாங்கிப் போட்டு வளர்க்கலாம். ஆனா பாம்புக்குப் பால் வார்க்க நான் தயாரா இல்லை. ஸோ, என்கிட்ட பணத்தை எதிர்பார்க்காதே.”

உறுதியான குரலில் மறுப்பு கூறினார் நாகரத்தினம்.

எதுவும் பேசாமல் இருந்த மதனைப் பார்த்த அவர், “என் மேல கோபம் வருதில்ல மதன்? அதைப் பத்தி நான் கவலைப்படலை... ஒரு பள்ளத்துக்குள்ள சரிஞ்சு விழுந்துக்கிட்டிருக்கிற உன்னை இன்னும் படு குழிக்குள்ள தள்ளறதுக்கு நானே உடந்தையா இருக்க விரும்பலை. ப்ளீஸ் புரிஞ்சுக்க.”

குரலில் இருந்த கடுமையைக் குறைத்து தன்மையாய் பேசினார்.

 “சரி ஸார். நான் கிளம்புகிறேன்.”

“எடுத்த எடுப்பிலேயே சீரியஸா பேச ஆரம்பிச்சுட்டதால உன் மனைவியைப் பத்திக் கூட நலன் விசாரிக்கலை. நல்லா இருக்காளா?”

“அவ நல்லா இருக்கா ஸார்.”

“ஏதாவது சந்தோஷமான சமாச்சாரம் உண்டா?”

“இல்லை ஸார்.”

“ஓ! பேமிலி ப்ளானிங்கா? ஒரு நாளைக்கு அவளையும் கூப்பிட்டுக்கிட்டு வாயேன்.”

“சரி ஸார். நான் கிளம்புகிறேன்.”

“எடுத்த எடுப்பிலேயே சீரியஸா பேச ஆரம்பிச்சுட்டதால உன் மனைவியைப் பத்திக் கூட நலன் விசாரிக்கலை. நல்லா இருக்காளா?”

“அவ நல்லா இருக்கா ஸார்.”

 “ஏதாவது சந்தோஷமான சமாச்சாரம் உண்டா?”

“இல்லை ஸார்.”

“ஓ! பேமிலி ப்ளானிங்கா? ஒரு நாளைக்கு அவளையும் கூப்பிட்டுக்கிட்டு வாயேன்.”

“சரி ஸார். நான் கிளம்புகிறேன்” பணம் கிடைக்காத ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசுவதற்கு மிகுந்த சிரமப்பட்டான் மதன்.

“போயிட்டு வா மதன். நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்.”

“சரி ஸார்.”

தளர்வான நடை நடந்து வெளியே நிறுத்தி இருந்த தன் காருக்குள் அமர்ந்தான். காரைக் கிளப்பினான்.

“யாருங்க வந்துட்டுப் போறது?” கோயிலுக்குப் போயிருந்த நாகரத்தினத்தின் மனைவி சரோஜா, பிரசாதத்தை அவரது கையில் கொடுத்தபடியே கேட்டார்.

“எம்.டி.பி.ன்னு பிரஸ் வச்சிருக்கான்ல மதன் அவன்தான். அவன் வந்ததால என் ப்ரோக்ராம் தள்ளிப் போயிடுச்சி....”

“நல்ல பையனாச்சேங்க. சும்மா உங்களைப் பார்க்க வந்தானா?”

 “நல்ல பையனா இருந்தான்ங்கறதெல்லாம் சம்பாதிச்சு நாலு காசு சேர்க்கறவரைக்கும்தான். லட்ச லட்சமா சம்பாதிக்க ஆரம்பிச்சப்புறம் லட்சியத்தைக் கோட்டை விட்டுட்டான். கூடவே, லட்சங்களையும் விட்டுட்டான்...”

“ஏங்க, என்ன ஆச்சர்யம்?”

“ஆடம்பரமான வாழ்க்கை. அநாவசியமான செலவுகள். மது மயக்கம். அது தரும் மாதுக்களின் பழக்கம். இதெல்லாம் சேர்ந்துட்டா பண முடக்கம் கழுத்தை நெரிக்கும் தானே?”

“அந்த மதன் இவ்வளவு மறிட்டடானா?”

“குடிப்பழக்கம் அதிகமாக இல்லையாம். அதாவது வீட்ல உட்கார்ந்து குடிக்கற அளவுக்கு. பிற பெண்களின் தகாத நட்பினால் வந்த மோகமும் அடிக்கடி வெளிநாடு போற ஆர்வமும் அவனுக்கு வெறி ஆகிப் போச்சாம். எல்லா தகவல்களும் என் காதுக்கு எட்டிக் கிட்டேதான் இருக்கு...”

“சுட்டிக்காட்டி புத்திமதி சொல்லி இருக்கலாமே?”

“ம்... ம்... ஒரு லெக்சரே அடிச்சாச்சு. அவன் இங்கே வந்தது அறிவுரை கேட்க இல்லை. அறிவு மழுங்கிப் போனதுனால ஏற்பட்ட கடனை அடக்க பணம் கேட்டு வந்தான். அதெல்லாம் முடியவே முடியாதுன்னு சொல்லி அனுப்பிச்சுட்டேன்...”

“த்சு. பாவங்க. அவங்க அப்பா செஞ்ச உதவியினால தான் நாம இந்த அளவுக்கு முன்னேறி இருக்கோம்னு அடிக்கடி சொல்லுவீங்களே?”

“அவங்க அப்பாவோட சொத்தையெல்லாம் அவர் கூடப் பிறந்தவங்க நயவஞ்சகமா சுரண்டிட்டாங்க கடைசி காலத்துல. இந்த மதன் பாவம்... தனியா தவிச்சுக்கிட்டிருந்தான். நான்தான் பணம் குடுத்து ப்ரிண்டிங் ப்ரஸ் ஆரம்பிக்கச் சொன்னேன். சின்னதா ஆரம்பிச்ச பிரஸ் இவனோட உழைப்பால ஆப்செட் அளவுக்கு வளர்ந்துச்சு. வளரும்போதுதான் ஜாக்கிரதையா இருக்கணும். இவன் ஜாலியா இருந்தான். கஜானா காலியாயிடுச்சி. கடனும் ஜாஸ்தியா ஆயிடுச்சி. அவங்கப்பா எனக்கு உதவி செஞ்ச நன்றிக் கடனை அவனுக்கு பணம் குடுத்து அப்போ தீர்த்துட்டேன். இனிமேலும் அவனுக்குப் பணம் குடுத்தா அது அவனுக்கு நாம செய்யற உதவியா இருக்காது. பணத்தோட அருமையே தெரியாம அவன் நிலைமை இன்னும் மோசமாயிடும்.”

“நீங்க அனுபவசாலி. உங்களுக்குத் தெரியாததா? யாரையோ பார்க்கணும்னீங்களே, கிளம்பலியா?”

 “மணி ஒண்ணாச்சு. லஞ்ச் டைம்ல அங்கே போக வேண்டாம்னு பார்க்கறேன். சாப்பிட்டுட்டு ரெண்டு மணிக்கு கிளம்பறேன்.”

“சரிங்க. நான் போய் எடுத்து வைக்கறேன்.”

காரை மெதுவாக ஓட்டிக் கொண்டிருந்த மதனின் இதயத்தில் திகில் பரவியது. ‘பிரபாகர்க்கு என்ன பதில் சொல்றது? செக் குடுக்காம எதுவுமே பேச முடியாதே அந்த ஆள்கிட்ட? சொஸைட்டியில பெரிய ப்ரிண்ட்ர்ன்னு பிரபலமாயாச்சு. இமேஜை உருவாக்கியாச்சு. ப்ரிண்ட்டிங் லைன்ல இருக்கற அத்தனை பேரும் என்னை ஒரு ஹீரோவா மதிச்சிட்டிருக்காங்க. பைனான்ஸ்ல நான் ஜீரோன்னு தெரிஞ்சுட்டா...? சொகுசான வாழ்க்கைக்கு அடிமையாகிட்ட நான் இனி என்ன செய்வேன்? ரெண்டு காரையும் விக்க முடியாது. லோன் முடியலை. வீட்டு லோன் இன்னும் மூணு வருஷம் கட்டணும். எல்லா லோனையும் ரெண்டு மாசமா காட்டாம வேற வச்சிருக்கேன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel