Lekha Books

A+ A A-

முள் மேல் மனசு - Page 2

Mull mal manasu

“அதெல்லாம் உன்னோட பர்ஸனல் மேட்டரா இருக்கலாம். ஆனா... என் தங்கச்சி சம்பந்தப்பட்ட மேட்டர் என்னோட மேட்டராச்சே? அதனாலதான் உன் மனைவியோட உயிரை எடுக்கணும்னு துடிக்கிறேன். அவளை இழந்துட்டு நீ துடிக்கிறதை நான் பார்க்கணும்.”

இவர்கள் பேசுவதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தான் பைக்கில் உட்கார்ந்திருந்த மோகன். மதனைப் பார்ப்பதற்காக அவனுடைய பிரஸ்சுக்குப் போய்க் கொண்டிருந்தவன், மதனின் காரைப் பார்த்ததும் நிறத்தினான். நிறுத்தியவன், கணேஷும் மதனும் சண்டை போட்டதையும் மதனின் மனைவியைக் கொல்லப் போவதாக கணேஷ் மிரட்டியதையும் கவனித்தபடி மதனுக்காகக் காத்திருந்தான்.

அவர்களது வாக்குவாதம் ஓய்வது போல இல்லை என்றதும் குரல் கொடுத்தான்.

“எக்ஸ்க்யூஸ் மீ”

கணேஷும் மதனும் திரும்பினார்கள்.

“மதன் ஸார், உங்களைப் பார்க்கத்தான் போய்க்கிட்டிருக்கேன். க்ளையன்ட் மீட்டிங் இருக்கறதாகவும் அது முடிஞ்சதும் என் கூட பேசறதாகவும் சொன்னீங்க...”

 “மோகன், நீ போய் பிரஸ்ல இரு. இதோ இப்ப வந்துடறேன்.”

“சரிங்க ஸார்.” மோகன் பைக்கைக் கிளப்பினான். ‘மதனிடம் இத்தனைக் கோபமாக பேசும் அந்த மனிதன் யார்? கொலை கிலை என்கிறானே பயங்கரமான ஆளா இருக்கான். மதனுக்கும், அந்த ஆளுக்கும் என்ன சம்பந்தம்?’ அடுக்கடுக்காய் சந்தேகங்கள் கிளம்ப, வண்டியை ஓட்டிச் சென்றான்.

“கணேஷ், முக்கியமான மீட்டிங் இருக்கு. நான் போணும். ப்ளீஸ் என்னை விட்டுடு.”

“உன்னை விட்டுடுவேன். ஆனா உன் பொண்டாட்டியை உயிரோட நடமாடவிட மாட்டேன். ஞாபகம் வச்சுக்க.” கடுமையா மிரட்டிய கணேஷ் ஒதுங்கிக் கொள்ள, மதன் காரைக் கிளப்பினான்.

2

டாட்ஸ் அப்பளக் கம்பெனி நிறுவனத்திருடன் நடத்திய மீட்டிங் முடிந்தது. தனக்கே அவர்களது அட்டைப் பெட்டி பிரிண்ட் அவர்களது அட்டைப் பெட்டி பிரிண்ட் அடிக்கும் ஆர்டர்கள் கிடைத்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க இயலாத மனநிலைக்கு ஆளாகி இருந்தான் மதன். அவனுடைய மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது கணேஷின் மிரட்டல். அதன் எதிரொலியாக அம்ருதாவின் நினைவும் கூடவே தோன்றியது.

காதலிக்கும்போது காதல் மயக்கத்தில் வாக்குக் கொடுத்த தன்னையே நொந்து கொண்டான். அவளை ஏமாற்றுவது தவறு என்று தெரிந்தும் அந்தத் தவறை செய்தான். அம்ருதாவை விட பல மடங்கு அழகாகவும், இளமை செழிப்புடனும் காணப்பட்ட பத்மினியைக் கண்டதும் மனம் மாறினான். திருமணத்தினால் மட்டுமே பத்தினியை அடைய முடியும் என்ற நிலையில் அவளை மணந்தான். அதன் பின்பும் அவனது மலர் விட்டு மலர் தாவும் வண்டின் குணம் மாறவில்லை. உல்லாசமாக ஊர் சுற்றுவதும் அந்நியப் பெண்களுடன் சல்லாபமாக இருப்பதும் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருந்தது. இதற்காக ஏராளமான பணத்தைச் செலவு செய்தான். பத்மினிக்கு இலை மறைவுக் காயாக மதனுடைய லீலைகள் தெரிந்தும் மெளனம் காத்தாள்.

வெளிப்படையாக எதையும் கேட்டு, அவன் முரண்டு பிடித்து “ஆமா, நான் அப்படித்தான்” என்று சொல்லிவிட்டால்? இப்போது இருக்கும் கொஞ்சம் பயமும், உறுத்தலும் இல்லாமல் போய் விடுமே’ என்ற எச்சரிக்கை உணர்வில் தன் வாய்க்கு மெளனப் பூட்டு போட்டாள். பெற்றோரை இழந்து அவள், மதன் மட்டுமே தன் உலகமாக எண்ணி வாழ்ந்தாள். அமைதியான நதி என்னும் வாழ்வில் நிம்மதி எனும் ஓடத்தை ஓட்டினாள். அதைக் கவிழ்த்துவதற்கு ஒரு புயல் உருவாகுவதை அறியாத பேதையாய் இருந்தாள்.

காலையில் ஜாக்கிங் போவதற்காக ட்ராக்-சூட்டுடன் வெளியில் வந்தான் மதன். காம்பவுண்ட் கேட்டில் மாட்டி இருந்த தபால் பெட்டியில் ஒரு கடிதம் வெளியே தெரியும்படி செருகப்பட்டிருந்தது. கவர் இல்லாமல் கடிதம் மட்டுமே இருந்ததால் வியப்படைந்த மதன், கடிதத்தைப் பிரித்தான். படித்தான்.

கிறுக்கலான எழுத்துக்கள் காணப்பட்டன. முயற்சி செய்து படித்தான். ‘உன் உயிர் உன் மனைவியிடம், உன் மனைவியின் உயிர் என் கையில்,’ இவ்விதம் எழுதி இருந்தது.

“இது அந்த கணோஷோட வேலையாத்தான் இருக்கும்... கிறுக்கன்... நேத்துதானே நேர்ல என்னை மிரட்டினான்? அதுக்குள்ள இப்படி ஒரு மொட்டை மிரட்டல் கடிதம் தேவையா?’ அசட்டையாக இருப்பது போல தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டாலும் உள்ளுக்குள் உருவாகிய பயம் இதயத்தை மெள்ளப் பிறாண்டியது.

‘நிம்மதியா இருக்க விட மாட்டானா?’ சிந்தனை அவனது காலைப் பொழுதின் உற்சாகத்தினைக் குறைத்தது. வழக்கமாய் உற்சாகமாக ஓடுபவன் தளர்ந்த நடை நடந்தான். நீண்ட தூரம் கலக்கத்தில் இருந்து மாறவில்லை.

“என்னங்க இன்னிக்கு இவ்வளவு நேரமா ஜாகிங் போயிட்டீங்க? ஆபீசுக்கு கரெக்ட் டைமுக்கு போணும்னு சொல்வீங்களே...?”

“அ... அ... அது வந்து ஒண்ணுமில்ல பத்மினி. இன்னிக்கு என்னவோ ஒரு மூடு கொஞ்சம் அதிக தூரம் போயிட்டேன். இன்னிக்கு நடந்துதான் போனேன். ஜாக்கிங் பண்ணலை.”

“ஆச்சர்யமாத்தான் இருக்கு. சரி, சரி ஹீட்டர் போட்டுட்டேன். குளிச்சுட்டு வாங்க. லஞ்ச் எடுத்து வைக்கவா? வெளியில சாப்பிட்டுக்கறிங்களா?”

“ம்...? இன்னிக்கு வெளியில போற வேலை எதுவும் இல்லை. வீட்ல இருந்தே லஞ்ச் எடுத்துட்டுப் போறேன்.”

“சரிங்க. குளிச்சுட்டு வாங்க. நான் போய் டிபன் ரெடி பண்றேன்.”

புடவை முந்தானையை இடுப்பில் செருகியபடி சமையலறைக்குள் நுழைந்தாள் பத்மினி.

குளித்து முடித்து டைனிங் டேபிளுக்கு வந்தான் மதன். எதுவும் பேசாமல் மெளனமாக சாப்பிட்டான். தினமும் காலை டிபனை ரசித்து, ருசித்து சாப்பிடுபவன், அன்று ஏனோதானோ என்று சாப்பிட்டு முடித்தான்.

“நான் கிளம்பறேன்மா” தன்னுடைய ப்ரீஃப் கேஸை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

“என்னங்க இது. லஞ்ச எடுத்து வச்சத்தை மறந்து போய் விட்டுட்டு போறீங்க. இந்தாங்க” அவனிடம் எடுத்துக் கொடுத்தாள்.

“ஸாரிம்மா, மறந்துட்டேன்.”

“இன்னிக்கு என்னமோ நீங்க வித்தியாசமா இருக்கீங்க. உடம்புக்கு ஏதாவது பண்ணுதா?”

“சேச்ச... அதெல்லாம் ஒண்ணும் இல்ல. சரி, நீ வந்து வாசல் கதவைப் பூட்டிக்க. வெளி கேட்டுக்கு செக்யூரிட்டி இருக்கான். இருந்தாலும் கவனமா இரு. செக்யூரிட்டி மூர்த்தி ராத்திரி ரெண்டு மணி ஆனா நல்ல குறட்டை விட்டுத் தூங்கிடறான். ரிமோட் ஏரியாவுல வீட்டைக் கட்டிட்டு இது வேற பெரிய பிரச்சினையா இருக்கு. ”

 “அட, என்னங்க நீங்க! ஆபீஸ் முடிஞ்சு அமைதியா வீட்ல வந்து ரெஸ்ட் எடுக்கணும்னுதானே இவ்வளவு தூரம் தள்ளி வந்து வீட்டைக் கட்டினீங்க? இப்ப என்னடான்னா இப்படி அலுத்துக்கறீங்க?”

“கொஞ்ச நாளா பேப்பர்ல திருட்டு, கொள்ளை பத்தின செய்திகள்தான் நிறைய வருது. நாம ஜாக்கிரதையா இருந்துக்கிட்டா நல்லதுதானே?”

“சரிங்க. நீங்க புறப்படுங்க.”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel