உண்ணி என்ற சிறுவன்
- Details
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 7940

உடம்பில் ஆடை எதுவும் அணியவே இல்லையே! அய்யய்யோ, என்ன வெட்கக்கேடு! உண்மையிலேயே கஷ்டமான விஷயம்தான். உண்ணி வழியிலேயே நின்றிருந்தான். கடைகளில் இருந்த ஆட்கள் எல்லோரும் அவனையே பார்த்தார்கள். அவனைப் பார்த்து அவர்கள் சிரித்தார்கள். இங்கிருந்து உடனே எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடவேண்டும் என்று நினைத்தான் அவன். ஆனால், கால்கள் அசைந்தால்தானே! மனதில் வருத்தமும் குற்ற மனப்பான்மையும் உண்டானது. இதயம் வெடித்து விடும்போல் இருந்தது. அழுகை கிளம்பிக் கொண்டிருந்தது. ஆனால், அதன் ஒலி வெளியே கேட்கவில்லை.