வெற்று முரசு
- Details
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 7352

எமெல்யான் ஒரு கூலித் தொழிலாளி. அவன் ஒரு முதலாளியிடம் வேலை பார்த்தான். ஒருநாள் ஒரு மைதானம் வழியே அவன் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தபோது, அவனுக்கு முன்னால் ஒரு தவளை குதித்துப் போய்க் கொண்டிருந்தது. அதன் மீது தன் கால் பட்டுவிடாமல் பார்த்துக் கொள்வதற்குள் அவனுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. அப்போது திடீரென்று அவனுக்குப் பின்னாலிருந்து அவனை யாரோ அழைத்தார்கள்.