ஜானு சொன்ன கதை
- Details
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 10617

கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி ஒரு நாள் மத்தியான நேரத்துல நான் சொன்னேன்- என் கதையை எழுதுங்க; படிக்கிறவங்க படிச்சாங்கன்னா அழாம இருக்க மாட்டாங்க. அந்த அளவுக்கு என் கதையில துக்கம் இருக்குன்னு. அப்போ மாதவிக்குட்டி அம்மா சொன்னாங்க, “ஜானு, உன் கதையை நீயே எழுது. அதை பேப்பர் நடத்துறவங்க வாங்கிக்கிட்டாங்கன்னா அதுக்குக் கிடைக்கிற பணத்தை உனக்கு நான் தர்றேன்”னு. எனக்கு கதை எழுதத் தெரியுமா என்ன?