Lekha Books

A+ A A-

மண்டை ஓடு - Page 11

mandai-odu

குறைவான கால அளவிலேயே கவுமுதி ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டாள். பிரைவேட் செகரட்டரி தன்னை கவனிக்க ஆரம்பித்திருக்கிறார் என்பதே அது. அவர் போவது, வருவது எல்லாமே அவளைத் தாண்டித்தான். அந்தப் பேராசிரியரின் மனைவியுடன் உற்சாகத்துடன் பேசிக் கொண்டு நின்றிருந்தபோதுகூட அவர் அவளையே பார்த்துக் கொண்டுதானிருந்தார்.

ஹிரண்மயி போனால் போதும் என்றிருந்தது கவுமுதிக்கு. தனியாக இருந்தால் நல்லது என்று அவள் நினைத்தாள். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருப்பதை ஹிரண்மயி பார்த்திருப்பாளா? பார்த்திருந்தால் அவள் ஊர் முழுக்க அதைக் கூறி விடுவாள்.

ஹிரண்மயியை அவளுடைய கணவர் அழைத்தார். கவுமுதி தனியாகிவிட்டாள். கவுமுதியின் கணவர் சற்று தூரத்தில் நின்றுகொண்டு ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பிரைவேட் செகரட்டரி கவுமுதியின் அருகில் வந்தார். அவர் மெதுவான குரலில் சொன்னார்:

“இதுவரை அறிமுகமாகாமல் இருந்ததற்காக வருத்தப்படுகிறேன்.''

என்ன கூறுவது என்று தெரியாமல் அந்தப் பெண் தடுமாறி னாள். எனினும், ஏதாவது கூறாமல் இருக்க முடியுமா? அவளுடைய நாணமும் பதைபதைப்பும் கலந்த புன்னகை அரும்பிய உதடுகளின் வழியாக இப்படி ஒரு வார்த்தை வெளியே வந்தது:

“எனக்கும் வருத்தம் இருக்கு.''

பிரைவேட் செகரட்டரி சொன்னார்:

“அவர் எப்போதும் எனக்கு மனைவி இல்லையா என்று கேட்பார்.''

பிரைவேட் செகரட்டரி பிற விஷயங்களை விசாரிப்பதற்காகச் சென்றார். அந்த உரையாடலை யாராவது பார்த்தார்களா என்று கவுமுதி நான்கு பக்கங்களிலும் பார்த்தாள். பலரும் பார்த்தார்கள்.

அந்தப் பக்கத்தில் பட்டாள பேண்ட் இசை ஆரம்பமானது. பிரதம அமைச்சர் இறங்கி வந்தார். விருந்தாளிகள் அவரவர்களுடைய இருக்கைகளில் இருந்து எழுந்து நின்றார்கள். ஒவ்வொருவருடனும் அவர் கை குலுக்கினார். அந்தக் கூட்டத்தில் அறிமுகமில்லாமல் இருந்தவர்களை அவருக்கு பிரைவேட் செகரட்டரி அறிமுகப்படுத்தி வைத்தார்.

பிரதம அமைச்சர் தன்னையே கூர்ந்து கவனித்ததைப் போல கவுமுதிக்குத் தோன்றியது. அவருடைய பிரகாசமான பெரிய கண்களின் ஏரியில் ஒரு மோகம் கிடந்து சிரித்துக் கொண்டிருந்தது. கவுமுதியின் இதயத்தின் அடித்தளத்திலும் ஏதோ சில விஷயங்கள் தோன்றிப் புரண்டு கொண்டிருந்தன. கையைக் குலுக்கியபோது அவர் தன்னுடைய கைகளை பலமாக அழுத்தியதைப் போல கவுமுதி உணர்ந்தாள். வேறு யாருடைய கையையும் அவ்வளவு நேரம் அவர் தன்னுடைய கையில் வைத்துக் கொண்டிருக்கவில்லை.

பிரைவேட் செகரட்டரி அறிமுகப்படுத்தியதிலும் ஒரு தனி அக்கறை வெளிப்பட்டது.

கவுமுதியின் உடல் முழுவதிலும் சிலிர்ப்பு உண்டானது. ஒரு இன்ப அதிர்வு நரம்புகளில் பயணித்தது. அது ஒரு அனுபவமாக இருந்தது.

அப்பாவிப் பெண்! இந்த சமூகச் சூழ்நிலையில், வாழ்க்கைப் போட்டி கையாளும் ஒரு தந்திரமே அது. அவளைக் குறை கூற வேண்டியதில்லை. கணவருக்குப் பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்பது அவளுடைய விருப்பம். அதற்காக அவள் பாடுபடுகிறாள். அந்த வகையில் உயர்வதற்கான ஒரு வழியாக அது இருக்கிறது.

6

ந்த வகையில் தலைநகரத்தின் முக்கியமான மையங்களில் பெரிய போட்டிகள் நடந்து கொண்டிருந்தன. இன்று வெற்றி பெற்றவன் நாளை வெளியே வீசியெறியப்படுவான். இன்று தோற்றுப் பின்னால் விட்டெறியப்பட்டவன் நாளை உயரத்திற்கு வருவான்.

அந்தச் சூழ்நிலையில் ஒரு முக்கியமான பதவிக்கு காலி இடம் உண்டாகியிருக்கிறது- உணவுப் பொருட்களின் விநியோகத்திற்கான தலைவர். சீனியர் அதிகாரிகள் பலரும் அதற்காக முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பதவி எல்லாரும் விரும்பக் கூடிய ஒன்றாக இருந்தது. கோடிக்கணக்கில் பணம் கொடுத்துப் பெற வேண்டிய பதவி அது. பதவி தரும் அதிகாரமும் மிகப் பெரியது. மாநிலத்தின் மிகப் பெரிய நபர்கள் முழுவதும் அந்தப் பதவியின் கருணைக்கு அடிமைப் பட்டவர்கள். உணவுப் பொருட்களை உற்பத்தி செய்பவர்களும் வியாபாரம் செய்பவர்களும் அந்தப் பதவியில் இருப்பவர்களுக்குக் கீழே வருவார்கள்.

அந்தப் பதவியில் முன்பு அமர்ந்திருந்த மனிதர் அந்த இடத்தில் இருந்து திடீரென்று என்ன காரணத்திற்காக மாற்றப்பட்டார்? இந்தக் கேள்வி எல்லாருடைய நாக்கின் நுனியிலும் தொங்கி நின்றது. காரணம்- யாருக்கும் தெரியாத ஒன்றாக இருந்தது. அவர் ஆட்சித் தலைவரின் மிகவும் பணிவான அடிமையாக இருந்தார்... ஆனால், செல்வம் நிலையானதா?

மாநிலத்தில் ஒரு பேஷ்கார். அவருடைய தோட்டத்தை அவர் விற்று விட்டாராம். வேறு சில சொத்துகளையும் விற்கப் போகிறாராம். திடீரென்று விற்பதற்கு விசேஷமான காரணம் என்னவென்று தெரியவில்லை. வங்கிகளில் நல்ல சேமிப்பை வைத்திருக்கும் மனிதர், பணத்தை உண்டாக்கிக் கொண்டும் இருக்கிறார். ஒரு டிப்பார்ட்மெண்ட்டின் மேலதிகாரியும் பணத்தை வசூல் செய்து கொண்டிருக்கிறார். மொத்தத்தில் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஒரு போட்டி நடக்கிறது. விநியோக கமிஷனராக வரப் போவது யார்?

வேறு சிலரும் முயற்சி செய்ய ஆரம்பித்தார்கள். அந்த வகையில் திடீரென்று பணம் தயார் பண்ண முடியாதவர்களும் இருந்தார்கள். ஆனால், பெரிய அளவில் நண்பர்கள் வட்டாரமும் அறிமுகங்களும் இருப்பதை வைத்துக் கொண்டு செல்வாக்கைப் பயன்படுத்த அவர்களால் முடியும். ஒரு சீனியர் அதிகாரி விடுமுறை எடுத்து டில்லிக்குச் சென்றார். இன்னும் சில அதிகாரிகளின் மனைவிகள் வெளிப்படையாக பிரைவேட் செகரட்டரியைப் போய் பார்க்கி றார்கள்.

எது எப்படி இருந்தாலும் அந்தக் காட்சியில் பிரைவேட் செகரட்டரியின் பதவி மிகவும் உயர்ந்து தெரிந்தது. வெளியில் இருந்தும் சில பெரிய மனிதர்கள் தலைநகரத்திற்கு வந்தார்கள்.

கவுமுதியின் கணவரும், அந்தப் பதவியை விரும்பியதில் தவறு இருக்கிறதா? சிவில் லிஸ்ட்டை எடுத்து வைத்து அவர் சீனியாரிட்டி யைக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். முன்பு இருந்த அமைச்சர்கள் அவருக்கு அளித்திருக்கும் நற்சான்றிதழ்கள் ஒவ்வொன்றையும் எடுத்துப் பார்த்தார். ஒரு நினைவுப் பரிசை தயார் பண்ணிக் கொடுத்தால் என்ன? ஆனால், அப்படிப்பட்ட நினைவுப் பரிசை விருப்பமில்லாதவன் கொடுத்தால் தண்டணைக்குரியதாக ஆகிவிடும். எது வேண்டுமானாலும் வரட்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு அவர் அதை தயார் பண்ணினார்.

கவுமுதி சம்பவங்களின் வளர்ச்சிகளைப் பற்றி தினந்தோறும் விசாரிப்பாள். நடக்கும் என்று அவள் உறுதியாக நம்பினாள். அவருடைய முயற்சி போதாது என்று அவள் குற்றம் சொன்னாள். பிரதம அமைச்சரைச் சந்தித்து சொன்னால், அவர் மறுக்க மாட்டார் என்று அவள் நம்பிக் கொண்டிருந்தாள்.

அவர் சொன்னார்:

“அதையெல்லாம் முடிவு செய்வது பிரைவேட் செகரட்டரி தான்.''

“எனினும், நமக்கு கிடைக்கும்.''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel