
“எனக்கு வெட்கம் இல்ல...’’ - நானும் மேலும் தாழ்ந்த குரலில் சொன்னேன். கூறியது பொய் என்று எனக்கே உறுதியாகத் தெரிந்தது.
“பிறகு என்ன?’’ - ரதி கேட்டாள்.
என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. உண்மையைச் சொன்னால், அவளே சிரிப்பாள் என்பது மட்டும் உண்மை.
தயங்கித் தயங்கி நான் கூறினேன்.
“எனக்கு... எனக்கு...’’
“ம்... சொல்லு...’’ - அவள் என்னுடைய தலையை மேலும் அழுத்திப் பிடித்தாள்.
“எனக்கு... எனக்கு குளிராக இருக்கும் ரது அக்கா.’’
ஒரு குலுங்கல் சிரிப்பு என் உடலைக் குலுக்கியது.
என்னுடைய பகல்கள் உயிர்ப்பற்றதாக இருந்தன. வீட்டில் யாராவது அதை கவனிக்கிறார்களா என்றுகூட எனக்கு சந்தேகமாக இருந்தது. அந்த அளவிற்கு வித்தியாசமான சம்பவங்கள் எனக்கு நடந்தன. பெரும்பாலும் அறைக்குள்ளேயே கண்களை மூடிக்கொண்டு நான் படுத்திருந்தேன். யாரிடமும் பேசுவதற்கு எனக்கு ஆர்வம் உண்டாகவில்லை.
சாயங்காலம் நெருங்கி வரும்போது இதயம் புத்துணர்ச்சியுடன் எழுந்தது. தொடர்ந்து வார்த்தையால் விவரிக்க முடியாத ஒருவிதமான குழப்பநிலை.... ஒவ்வொரு நாளும் முடியும்போதும் சாயங்கால நேரத்தின் பதைபதைப்பு அதிகமாகிக் கொண்டேயிருந்தது.
சாயங்கால வேளைகள் பித்துப் பிடிக்கச் செய்தன.
காலை நேரங்கள் மனதில் வெறுப்பை உண்டாக்கின.
பல நேரங்களில் தோன்றிய ஒரு சந்தேகம் எனக்குள் இருந்தது. என்னுடைய இடத்தில் வேறு எந்த ஆண் இருந்தாலும், அவள் இந்த மாதிரிதானே நடந்து கொண்டிருப்பாள்? அவளுடைய தாகம் எந்த ஒரு ஆணையும் அள்ளிக் குடிக்கக்கூடிய அளவிற்கு ஆழமானதாயிற்றே!
ஒருநாள் நான் அதைக் கேட்டுவிடவும் செய்தேன்.
“ரது அக்கா, உங்களோட கணவர் இருந்திருந்தா, என்னை...’’
“என்னை...?’’
“என்னை...?’’ - எனக்கு வார்த்தைகள் வரவில்லை.
“விரும்பியிருப்பேனான்னு கேட்கிறே... அப்படித்தானே?’’
“ம்...’’
அவள் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை.
ஒரு பனித்துளி எங்கிருந்தோ வந்து என் முதுகில் விழுந்தது.
“விரும்பியிருப்பேன்...’’
அவளுடைய குரலில் இருந்த உறுதியும் அதில் கலந்திருந்த உண்மைத்தன்மையும் என்னுடைய நாக்கை முழுமையாக அடக்கி விட்டன. அதற்குமேல் எதுவும் கேட்கத் தோன்றவில்லை.
“ரது அக்கா, உங்க கணவரை உங்களுக்குப் பிடிக்கும்ல?’’ - நான் கேட்டேன்.
“இல்லை...’’ - அவள் சொன்னாள். தொடர்ந்து என்னுடைய தலைமுடிகளுக்கு நடுவில் தன் விரல்களை ஓடவிட்டு, நீண்டநேரம் என்னவோ சிந்தனையில் அவள் மூழ்கியவாறு படுத்திருந்தாள்.
“என்ன காரணம்?’’
“அவர் எனக்குப் பொருத்தமானவர் இல்லை’’ - அவள் சொன்னாள்: “ஒரு வகையான காட்டு மிராண்டி...’’
மிகவும் குறைவான நாட்களே அவர்கள் ஒன்று சேர்ந்து இருந்திருக்கிறார்கள். இதற்கிடையில் இந்த அளவிற்கு வெறுப்பை அந்த மனிதர் எப்படி சம்பாதித்தார் என்று நான் ஆச்சரியப்பட்டேன். அதுவும் ரதியைப் போன்ற - பிரபஞ்சம் முழுவதையும் காதலிக்கத் தயாராக இருக்கும் ஒரு பெண்ணிடமிருந்து...
“முதல் நாளன்றே எனக்கு அந்த ஆள்மீது வெறுப்பு வந்து விட்டது...’’ - ரதி சொன்னாள். மங்கலான நிலவு வெளிச்சத்தில் அவளுடைய கண்களின் ஓரங்களில் தெரிந்த பிரகாசத்தை நான் பார்த்தேன்.
“ஒரு குஸ்திக்காரன்.’’
“ரது அக்கா, உங்க கணவர் குடிப்பாரா?’’
“நிறைய...’’ - அவள் சொன்னாள்: “முதல் இரவிலேயே நிறைய குடித்திருந்தார்’’ - அந்த இளம்பெண் முதலிரவைப் பற்றிய நினைவுகளை வெளியிடுவதை நான் ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தேன்.
“போனவுடன் அவர் என்னிடம் வித்தைகளைக் காட்ட ஆரம்பித்தார். தன்னுடைய பலத்தை எனக்குக் காட்ட நினைத்தார்.’’
“எப்படிக் காட்டுவார்?’’
“ஓ... அதை எப்படிச் சொல்வது? ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து ஒரு கோதாவுல இறங்கியிருக்காங்கன்னு வச்சுக்கோ. பெண் குஸ்தி போடணும்னு தேவையில்லை. ஆண் தன்னோட பலத்தை அவளுக்குக் காட்டணும். எப்படி இருக்கும்?’’
“அப்போ வேறு எதுவும் நடக்கலையா?’’ - தயங்கித் தயங்கி அந்தக் கேள்வியை என்னால் கேட்க முடிந்தது.
“நடக்கலை...’’ - அவள் சொன்னாள்: பெரும்பாலும் எல்லா நாட்களிலும் அதேதான் நடந்தது. சிலவேளைகளில் என்னுடைய கையைப் பிடித்து திருகுவார். நான் அழுவது வரை அப்படியே பிடித்துக் கொண்டிருப்பார். ஒருமுறை என் கழுத்தைப் பிடித்துக் கையிடுக்கில் வைத்து அழுத்தினார்.’’
நான் அவளுடைய கண்களைத் துடைத்து விட்டேன். அவள் ஒரு சிறு குழந்தையைப்போலத் தேம்பித் தேம்பி அழுதாள்.
அவளுடைய வயது திடீரென்று குறைந்து விட்டதைப்போல இருந்தது. இப்போது அவளுக்கு என்னைவிட எவ்வளவோ வயது குறைந்து விட்டது. கவலைகளை மனம் திறந்து கூறி நிம்மதி அடையும் ஒரு காதலியும், அவற்றை அக்கறையுடன் கேட்டு ஆறுதல் கூறும் ஒரு காதலனுமாக நாங்கள் இருப்பதாக எனக்குத் தோன்றியது.
“அவர் போவது வரையில் எனக்கு பயமாவே இருந்தது’’ - ரதி சொன்னாள்: “இனியும் வருவார் என்பதை நினைக்கிறப்போ எனக்கு ரொம்பவும் பயமா இருக்கு.’’
அந்த இளம்பெண்ணின் இக்கட்டான நிலைமையை என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. இளமைக்கே உரிய தாகங்கள், பசி... எல்லாவற்றுடனும் படுக்கையறைக்குள் நடந்து செல்லும் பெண்... அவளை ஏற்றுக் கொண்ட ஆணுக்கு உடல்நலக்குறைவு எதுவும் இல்லை. அவலட்சணமான தோற்றம் உள்ளவரும் இல்லை. ஆனால், ஒருவகைப்பட்ட மன ரீதியான குறை அந்த மனிதரை பாதித்துவிட்டிருக்கிறது.
"அவர் வராமல் இருக்க வேண்டும் என்பதுதான் என்னோட ஆசை"- அவள் சொன்னாள்.
"வராமல் இருந்தால்...?"
"நாம இப்படியே இருந்துவிடலாம்."
"என்னைப் பிடிச்சிருக்கா?"- நான் திடீரென்று கேட்டேன்.
அவள் உடனடியாக பதில் கூறவில்லை. ஒரு தாங்க முடியாத அழுகை அவளுடைய தொண்டைக்குள் இருந்து கொண்டு மூச்சுவிட முடியாமல் இருப்பதைப் போலத் தோன்றியது. சத்தங்கள் இல்லாத அழுகைக்குரல் அவளுடைய உடலின் அடி ஆழத்திலிருந்து மேலே கிளம்பி வருவதைப்போல இருந்தது. அவள் அதை மறைப்பதற்காக என்னுடைய உடலை இறுக அழுத்தி என்னுடைய கழுத்தைக் கடித்தாள். கால்கள் என்னை இறுக முறுக்கின. பைத்தியம் பிடித்ததைப் போல ஒரு வெறி அந்த இளம்பெண்ணை பாதித்ததைப் போல இருந்தது. அதிலிருந்து தப்பிப்பதற்காக அவள் முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
மேலும் கீழும் மூச்சு விடுவதற்கிடையில் அவள் முனகினாள்: "என் ராஜா... என் ராஜா..."
தொடர்ந்து ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல், ஒரு நிமிடம் கடந்து விட்டால் ஏதோவொன்றை இழந்து விடுவோமோ என்று பயந்ததைப் போல அவள் என்னுடைய உதடுகளில் அழுத்தி முத்தமிட்டாள்.
நான் அழுதேன்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook