
“அய்யோ!’’ - ரது அக்கா என்னிடமிருந்து விலக முயற்சித்தாள்: “அம்மா வர்றாங்க... விடு...’’
“வரட்டும்...’’ - நான் மேலும் கீழுமாக மூச்சுவிட்டேன்.
“விடு... விடு... சாயங்காலம்...’’ - அவள் என் காதுகளில் முணுமுணுத்தாள்: “சாயங்காலம் நான் வர்றேன்...’’
ஒரு அடி விழுந்ததைப்போல எனக்கு இருந்தது. இதை எந்தச் சமயத்திலும் நான் எதிர்பார்க்கவில்லை.
திருநீற்றின் சக்தியைப் பற்றி திடீரென்று நான் நினைத்துப் பார்த்தேன்.
“வருவீங்களா?’’ - நான் ஒரு கனவில் நடப்பவனைப் போல் கேட்டேன்.
“ம்...’’ - அவளுடைய மூச்சின் வெப்பம் என்னுடைய உதடுகளில் வந்து மோதியது.
என் கைகள் விலகின. பிடியை விட்டவாறு நான் கேட்டேன்.
“எங்கே வருவீங்க?’’
ரது அக்கா கட்டிலில் இருந்து வேகமாக எழுந்து சாளரத்தின் அருகில் போய் நின்றாள். ரவிக்கையையும் முண்டையும் சரி செய்துவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். தொடர்ந்து வெளியே கையைக் காட்டினாள்: “அங்கே...’’
அங்கே முன்பு எப்போதோ ஒருமுறை விடைபெற்றுப் பிரிந்து சென்ற நிலாவைக் கனவு கண்டு கொண்டு நின்றிருக்கும் அமைதியான பலா மரத்தின் நிழலில், இரண்டு ஜோடிக் கொடிகளைப் போல நாங்கள் படுத்திருந்தோம்.
சாயங்காலம் எப்போதோ கடந்து போயிருக்க வேண்டும். இருட்டு மரங்கள் அனைத்தையும் பிரேதங்களாக மாற்றி விட்டிருந்தது. வயன மலர்களும் குடகப் பாலை மலர்களும் சேர்ந்து உண்டாக்கிய மயக்கத்தைத் தரும் வாசனை காற்றைக் குளிப்பாட்டியது. பனி பெய்ய ஆரம்பித்திருந்தது. பாம்புப் புற்று இருக்கும் பகுதியில் இருந்து, வயதான பாம்புகளின் மேல்தோலில் இருந்து வரும் வெறுப்பைத் தரும் வாசனை வந்து கொண்டிருந்தது. சாயங்கால வேளையில் பாம்புகள் இரை தேடி ஊர்ந்து கொண்டிருக்க வேண்டும்.
பலா மரம் முழுமையான தியானத்தில் மூழ்கியவாறு நின்றிருந்தது.
“அதோ ஒரு பாம்பு...’’ - ரது அக்கா சொன்னாள். உண்மைதானோ என்னவோ? எனினும் நான் அதை கவனிக்கவில்லை.
“பாம்பு அதன் வழியே போய்விடும்.’’
நான் அவளுடைய முடிக்காட்டிற்குள் கூறினேன்.
“எனக்கு பாம்பென்றால் பயம்’’ - அவள் சொன்னாள்.
“எனக்கு பயமே இல்லை...’’
“அது எப்படி? கடிக்காதா?’’ - ஒரு சிறு குழந்தை கேட்பதைப்போல எனக்குத் தோன்றியது.
“இல்லை...’’
“பிறகு?’’
“அதன் புற்றுக்குப்போய்விடும்.’’
“அது எங்கே இருக்கு?’’ - அவள் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தாள். தொடர்ந்து பேசக்கூடிய ஒரு ஆசையுடன் அவள் இருப்பதாக எனக்குத் தோன்றியது.
“இதோ இருக்கே...’’
ரது அக்கா சத்தத்தைக் தாழ்த்திக் கொண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்: “எல்லாம் தெரியும்.’’ பிறகு அவள் என் காதுகளில் முத்தமிட்டாள். “என் திருடன்!’’
மெல்லிய காற்று வீசியது.
பாலைப் பூக்கள் எங்கோ தூரத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த பயணிகளைப்போல வேகமாக வந்து அவளுடைய அவிழ்ந்து கிடந்த கூந்தலுக்கு மத்தியில் ஓய்வு எடுத்தன.
“இங்கே இப்படியே படுத்துத் தூங்கணும்’’ - நான் சொன்னேன்.
“தூங்கிவிட்டால்...?’’
“அப்படித் தூங்கிட்டோம்னா, பொழுது விடிஞ்ச பிறகும் நம்ம - ரெண்டு பேரையும் யாராலயும் பார்க்க முடியாது. குடக பாலைப் பூக்கள் வந்து மூடிவிட்டுடும்.’’
“அப்படித் தூங்கினா மட்டும் போதுமா?’’ - என்னை கிச்சுக் கிச்சு மூட்டியவாறு ரது அக்கா கேட்டாள்.
அவள் என்னுடைய வெட்கத்தைப் பற்றிக் கூறுகிறாள் என்று எனக்குத் தோன்றியது. அதனால் நான் பதில் எதுவும் கூறவில்லை.
என் இயலாமையை கிண்டல் பண்ணுவதைப்போல பலா மரத்தின் கிளையில் உட்கார்ந்திருந்த, பனியில் நனைந்த ஒரு ஆந்தை பல தடவை அர்த்தத்துடன் ஓசை உண்டாக்கியது. பிறகு தன் சிறகைக் குடைந்த அது அங்கிருந்து பறந்து சென்றுவிட்டது. பனித்துளிகள் சிறது சிறிதாக எங்கள்மீது விழுந்து கொண்டிருந்தன.
“என்ன பொறாமை!’’ - ரது ஆந்தையை மனதில் வைத்து சொன்னாள்.
ஏரிக்கு வடக்கில் இருக்கும் முஸ்லிம் பள்ளிவாசலில் இருந்து நேரத்தை அறிவிக்கும் பாங்கு ஓசை எழுந்து பேரமைதியில் அடக்கமானது. தவளைகளைப் பிடிப்பதற்காக நடந்து திரியும் பறையச் சிறுவர்களின் பெட்ரோமாக்ஸ் விளக்கின் வெளிச்சக் கீற்றுகள் குளத்திற்கு மேலே வட்டங்களை உண்டாக்கின.
“பப்பு, நாளைக்கு உன் வெட்கம் மாறிடும்.’’ - அவள் முணுமுணுத்தாள்.
நான்கு பக்கங்களிலும் இருந்து ஏராளமான வெட்டுக் கிளிகள் ஒன்றாகச் சேர்ந்து குலுங்கிக் குலுங்கிச் சிரித்தன. எங்களுக்கும் மரங்களுக்கும் மேலே, இரவு மேகங்கள் ஓசை உண்டாக்கியவாறு கடந்து சென்றன.
“இன்றைக்கும் வெட்கமா?’’ - மறுநாள் இரவில் அவள் கேட்டாள்.
நான் பதில் கூறவில்லை. எனக்குள் ஒரு குற்ற உணர்வு உண்டானது.
ரது அக்கா அப்படி நடந்து கொண்டதற்காக இப்போது குற்றம் கூற முடியாது. நான் இப்போதும் ஒரு சிறுவன்தான். முழு ஆளாக மாற இன்னும் எவ்வளவோ தூரத்தைக் கடக்க வேண்டியிருக்கிறது.
“மகனே, நான் உன்னுடைய கூச்சத்தை மாற்றுவேன். பார்த்துக்கோ...’’ அவள் என்னுடைய முதுகில் தன் கைவிரல்களால் வருடியவாறு சொன்னாள். அவளுடைய விரல்கள் ஆடைகளுக்குள் நுழைந்து, என்னுடைய உடம்பெங்கும் இன்ப அதிர்வுகளை விதைத்தன.
அந்த மார்பில் முகத்தை வைத்துக் கொண்டு, சதையின் மென்மைத் தன்மையையும், குளிர்ச்சியையும் சுகத்தையும் அனுபவித்துக் கொண்டு படுத்திருப்பது என்பது சந்தோஷம் தரக்கூடிய ஒரு விஷயம்தான். நான் முகத்தை அங்கு மறைத்து வைத்தேன். அவளுடைய மூச்சுகள். தலை முடிகளுக்கு நடுவில் வெப்பத்தைப் பரப்பியவாறு ஓடிக் கொண்டிருந்தன.
“துணியை அவிழ்த்துப் போடு’’ - அவள் தூக்கத்தின் சாயல் கொண்ட குரலில் கெஞ்சினாள்.
“ஊஹூம்...’’
“ஏன்?’’
“என்னால முடியாது’’ - மிகவும் உறுதியான குரலில் நான் உண்மையைச் சொன்னேன். அவவ் அருகில் இருக்கும்போது ஒரு ஆணைப்போல நடப்பதற்கு என்னால் முடியவே முடியாது. இன்றும் நேற்று இரவு நடந்ததைப்போலத்தான் முடியும். எவ்வளவு நாட்கள் கழித்து என்னுடைய வெட்கம் முழுமையாக மாறும் என்று என்னாலேயே கூற முடியாது.
ஒரு ஆணாக மாற வேண்டும் என்று நினைக்கிறேன். தைரியமான ஒரு ஆணாக...
ஆனால், சிறுவனாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
மரங்களுக்கு மத்தியில் ஒரு வெளிறிப்போன சந்திரன் தூங்கியவாறு நின்றிருந்தது. பனியைச் சுமந்து கொண்டிருந்த காற்று உடம்பைத் துளைத்துக் கொண்டு நுழைந்தது.
“ஆடையை அவிழ்த்தால் என்ன? கூச்சமா?’’
நான் எதுவும் பேசவில்லை.
“இந்தா... என்னைப் பாரு. ஒரு பெண்ணாக இருந்து கொண்டு...’’ அவள் என்னைக் குற்றம் சுமத்துவதைப்போல சொன்னாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook