Lekha Books

A+ A A-

அந்த நாள் ஞாபகம் - Page 22

Antha Naal Gnabagam

ஆத்மார்த்தமான அந்த வார்த்தைகள் தாஸ்தாயெவ்ஸ்கியிடமிருந்து வந்து விழுந்ததை நான் சிறிதுகூட விரும்பவில்லை. நான் பலமாக அதை எதிர்த்தேன். “இங்க பாருங்க... நீங்க எல்லாத்தையுமே ஆச்சரியம் கலந்து அதிசயமா பாக்குறீங்க. நம்ம ரெண்டு பேருக்குமிடையே எந்த வித்தியாசத்தையும் நான் பார்க்கல. நாம ஒருவரையொருவர் மனப்பூர்வ மாகக் காதலிச்சா- உண்மையான அன்புடன் இருந்தா... நம்மைப் பொறுத்தவரை நாம ரெண்டு பேருமே நெருங்கிய நண்பர்களாக இருப்போம். விளக்கங்கள் தேவையில்லாத சந்தோஷத்தை நாம் அனு பவிக்கலாம். நான் இன்னொரு விஷயத்துக்குக்கூட பயப்படுறேன். இந்த அளவுக்கு அறிவாளியான, புகழ்பெற்ற, மிகப்பெரிய திறமைசாலியான ஒரு எழுத்தாளர் தலைக்குள் எதுவுமே இல்லாத ஒரு சாதாரண பெண்ணுடன் எப்படி வாழ்கிறார்? உங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கு றப்போ, என்னோட கல்வியைப் பற்றி சொல்றதுக்கு என்ன இருக்கு? ஒரு வெள்ளி மெடல் வாங்கி பட்டம் பெற்றிருக்கேன். அவ்வளவுதான். அதை வச்சு உங்க கையைப் பிடிச்சு வாழ்க்கையில் நடக்குற அளவுக்கு எனக்கு என்ன தகுதி இருக்கு? உங்களின் எண்ணங்களைப் புரிஞ்சுக்கிற அளவுக்கு என்னால முடியாமப்போய், அதனால நீங்க மனதால் வெறுக்க ஆரம்பிச்சிடுவீங்களோன்னு எனக்கு ஒருவிதத்துல பயமா இருக்கு. சொல்லப்போனா நம்ம ரெண்டு பேருக்குமிடையே இருக்குற இந்த இடைவெளியை நினைச்சாத்தான்...”

தாஸ்தாயெவ்ஸ்கி என்னைப் புகழோ புகழ் என்று புகழ்ந்து என் மனதில் இருந்த அந்த அபிப்ராயத்தை மாற்ற முயற்சித்தார். என்னை முழுமையாகத் தன்மீது நம்பிக்கை கொள்ள வைக்க பலவிதத்திலும் முயன்றார். அதற்குப் பிறகு நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லும் விதமாக- எப்படி என்னை அவர் திருமணம் செய்துகொள்ளத் தீர் மானித்தார் என்பதைச் சொன்னார்:

“நான் திருமணம் செய்து கொள்ளணும்ன்ற முடிவை ரொம்பவும் கஷ்டப்பட்டுத்தான் எடுத்தேன். இளமையின் மகத்துவத்தை அனுபவிக்க முடியாதவனும், அழகற்றவனுமான ஒரு மனிதன் ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்பதுன்றது விரும் பக் கூடிய செயல்தானா? கேலிக்குரிய ஒண்ணா அது இருக்காதா? நான் என் மன விருப்பத்தை உன்கிட்ட சொன்ன பிறகு, நீ அதை நிராகரிச் சுட்டேன்னு வச்சுக்கோ... அதை என்னால் தாங்கிக்க முடியுமா? அதற் குப் பிறகு உன் கண்களால் என்னை எப்படி நல்ல மனிதன்னு நினைச் சுப் பார்க்க முடியும்? இன்னொரு ஆளை நீ காதலிக்கிறதா ஒருவேளை என்னைப் பார்த்துச் சொல்லலாம். அப்படி நீ சொல்ற பதில் நம்ம ரெண்டு பேருக்குமிடையே ஒருவித இடைவெளியையும், வெறுமை உணர்வையும் உண்டாக்கும். இதுவரை நம்ம ரெண்டு பேருக்கும் மத்தியில் நிலவிக்கிட்டிருந்த நட்பு இருந்த இடம் தெரியாமல் போக, அந்த ஒரே ஒரு பதில் போதும். நான் கஷ்டப்பட்டுக்கிட்டிருந்த நாட் களில் நான் பார்த்த இதயப்பூர்வமான ஒரு நல்ல தோழியை எப்படி நான் இழக்க முடியும்? திரும்பத் திரும்பச் சொல்றேன்- நான் அந்த அளவுக்கு தனி மனிதனா- விரக்தியடைந்து வாழ்ந்துக்கிட்டு இருந்த காலமது. அப்படிப்பட்ட நிலையில எனக்கு அதைத் தாங்குற மன சக்தி கிடையவே கிடையாது. ஒரு நாவலுக்கான கதை அப்படீன்னு திருமண விஷயத்தை உன்கிட்ட சொல்லி, உன்னோட மனசை அறிய வாய்ப்பு இருக்குதான்னு பார்க்கலாம்னு நினைச்சேன். சொல்லப்போனா... அந் தக் கதையை உன்கிட்ட சொல்வதன் மூலம் உன் மனசைப் பரிசோதனை செய்ய நினைச்சேன். அதன்மூலம் நீ இந்தக் காதலை நிராகரிக்கிறேன் றதை நான் தெரிஞ்சுக்கிட்டேன்னு வச்சுக்கோ... அந்த ஏமாற்றத்தை ஓரளவுக்கு எளிதா என்னால ஏத்துக்க முடியும். காரணம்- நாம அப்போ பேசிக்கிட்டு இருந்தது நாவல்ல வர்ற கதாபாத்திரங்களைப் பற்றித் தானே தவிர, நம்மைப் பற்றி இல்லையே!”

அவர் அந்த நாவலின் கதையை என்னிடம் விவரித்தபோது, என் மனதில் இருந்த தவறான எண்ணங்களையும் அன்னா கார்வின் க்ருக்வோவ்ஸ்கயா மேல் நான் கொண்ட பொறாமையைப் பற்றியும் அவரிடம் மனம் திறந்து சொன்னேன்.

நான் சொன்னதைக் கேட்ட தாஸ்தாயெவ்ஸ்கி தெளிவான குரலில் சொன்னார்: “உனக்கே தெரியாமல் உன்னோட சம்மதத்தை நான் வாங்கிட்டேன்னு அதற்கு அர்த்தம். அந்த நேரத்துல நான் மனசுல எழுதின அந்த நாவல்தான் நான் இதுவரை எழுதிய என் படைப்பு களிலேயே மிகப் பெரிய வெற்றின்னு நான் சொல்வேன். காரணம்- அதோட பலன் என்னன்னு அப்பவே எனக்குத் தெரிஞ்சிடுச்சு. நான் எது எனக்குக் கிடைக்கணும்னு மனப்பூர்வமா ஆசைப்பட்டேனோ, அது எனக்குக் கிடைச்சிருச்சு.”

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel