Lekha Books

A+ A A-

அந்த நாள் ஞாபகம் - Page 20

Antha Naal Gnabagam

அந்தக் காலத்தில் நான் கனவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணாக இருந்தேன். நாவலில் வரும் கதாபாத்திரங்களை உயிருள்ள வர்களைப்போலவே நினைப்பேன். ப்ரின்ஸ் வால்கோவ்ஸ்கியை (அந்த நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம்) எனக்குப் பிடிக்கவே பிடிக் காது. அலக்ஸியை நான் வெறுப்புடன் பார்ப்பேன். கிழவனான இக்மனேவ் மேல் பரிதாபம் கொள்வேன். ஆதரவே இல்லாமல் நிர்க்க தியாக நின்று கொண்டிருக்கும் நெல்லியை இதயம் முழுக்க அன்புடன் நான் பார்ப்பேன். நஸ்தாஷாவிடம் எனக்கு அன்பு என்ற ஒன்றே பிறக் கவில்லை.

இவ்வளவு விஷயங்களையும் நான் தாஸ்தாயெவ்ஸ்கியிடம் சொன்னேன்.

“எனக்கு அவங்க யாரையும் ஞாபகத்துலயே இல்ல. நீ சொல்ற நாவலோட கதை என்னன்றதைகூட மறந்துட்டேன்”- தாஸ்தாயெவ்ஸ்கி சொன்னார்.

“இல்ல. நிச்சயமா இருக்க முடியாது.”- நான் உரத்த குரலில் சொன்னேன்.

“என்ன வெட்கக்கேடு! கதை சொல்லிக்கிட்டு இருந்த இவான் பெட்ரோவிச்சை நான் முழு மனதுடன் விரும்பினேன். அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதனை வேண்டாம்னு சொல்லிட்டு நஸ்தாஷா எப்படி கெட்டவனான அலக்ஸியைத் தேர்ந்தெடுத்தாள்? இதற்காக நான் எந்த அளவிற்குக் கவலைப்பட்டேன் தெரியுமா? "அவளுக்கு எது கிடைக்க வேண்டுமோ அது கிடைத்திருக்கிறது' என்று அந்த நாவலை நான் படிச்ச காலத்துல நினைச்சேன். சொந்தத் தந்தையின் பாசத்தை அவள் நிராகரித்தாள். இவான் பெட்ரோவிச் உண்மையில் நீங்கதான்றதை நான் கண்டுபிடிச்சேன். நிராகரிக்கப்பட்ட தன்னுடைய காதலைத்தான் தாஸ்தாயெவ்ஸ்கி ஒரு நாவலா எழுதியிருக்கார்னு நான் அப்பவே நினைச்சேன். நீங்க அந்த நாவலை மறந்துட்டீங்களா? அப்படின்னா இன்னொரு தடவை படிங்க...”

நான் சொன்ன விஷயங்கள் அவரிடம் ஒருவித மாற்றத்தை உண்டாக் கின. நேரம் கிடைக்கிறபோது, தான் மீண்டும் அந்தப் புத்தகத்தைக் கட்டாயம் படிப்பதாக என்னிடம் சொன்னார்.

“நான் ஒரு விஷயத்தைச் சொல்லட்டுமா? நான் உங்களை ஆரம்பத்துல பார்த்தப்போ என்னைப் பார்த்து நீங்க கேட்டீங்க- நான் எப்போதாவது யாரையாவது காதலிச்சிருக்கேனான்னு. ரத்தமும் சதையும் உள்ள ஒரு மனிதனுடன் நான் இதுவரை காதல் உறவு கொண்டதில்லைன்னு அன்னைக்குப் பதில் சொன்னேன். ஆனால், பதினஞ்சு வயசுல படிச்ச புத்தகத்துல இருந்த ஒரு கதாபாத்திரத்தை காதலிச்சேன்னு நான் சொன்னேன். அப்ப நீங்க கேட்டீங்க- அது எந்தப் புத்தகம்னு. நான் உடனடியா அப்ப விஷயத்தை மாத்திட்டேன். அந்தப் புத்தகம் நீங்க எழுதினதுன்றதுனால, அதை நாம சொன்னா நல்லா இருக்காதுன்னு நானே வேணும்னு மறைச்சேன். இலக்கிய உலகில் பணியாற்ற வந்திருக்கிற ஒரு இளம் பெண்ணின் மனசுல இருக்குற விஷயங்களை அவளைக் கொண்டே சொல்ல வைக்கலாம்னு நினைச்சு நீங்க கேள்வி கேட்க, நான் பதில் சொல்லியிருந்தா நிச்சயம் நீங்க என்னைத் தப்பா நினைச்சிருப்பீங்க. ஆனா, நான் அப்பக்கூட சுதந்திரமான ஒரு பெண்ணா நிற்கத்தான் விரும்பினேன்...

"மரண வீடு' படிச்சிட்டு நான் எந்த அளவுக்கு கண்ணீர் விட்டு அழு தேன் தெரியுமா? சைபீரியன் சிறையில் வருஷக்கணக்கா அடைஞ்சு கிடந்த தாஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றிப் படிச்சப்போ, என் மனசுல அந்த மனிதர்மீது பரிதாபம்தான் தோணுச்சு. மனசுல அலைமோதின அந்த உணர்வுகள் கொஞ்சம்கூட குறையாமத்தான் உங்களுக்கு உதவ நான் முதல் தடவையா இங்கே காலடி எடுத்து வச்சேன். உங்களுக்கு உதவ நான் ரொம்பவும் ஆர்வமா இருந்தேன். சின்ன வயசுல இருந்து நான் மனசுல வழிபட்ட ஒரு எழுத்தாளரின் கஷ்டத்தை ஓரளவுக்கு நம்மால் குறைக்க முடியாதா என்று மனப்பூர்வமாக எண்ணினேன். வேறு யாரையும் நியமிக்காமல் சுருக்கெழுத்து எழுதுறதுக்கு என்னை ஆல்கின் தேர்வு செய்தப்போ, நான் கடவுளுக்குத் திரும்பத் திரும்ப நன்றி சொன்னேன்.”

"மரண வீடு' நூலைப் பற்றி நான் சொன்ன விஷயம் அவரைக் கவலை யில் மூழ்கச் செய்துவிட்டது என்பது தெரிந்ததும், நான் பேச்சை வேறு திசைக்கு மாற்றினேன்.

“உங்களுக்குத் தெரியுமா? உங்களோட மனைவியாக என்னைத் தேர்வு செய்ததே விதிதான். பதினாறு வயசு முதல் என்னை "நெடோச்கா நெஸ்வனோவா' ன்னு(தாஸ்தாயெவ்ஸ்கியின் முழுமையடையாத ஒரு நாவலின் பெயர்) என்னைப் பலரும் கூப்பிடுறது உண்டு. தாஸ்தாயெவ்ஸ்கி யின் நூல்களுடன் எனக்கு இருக்கும் ஈடுபாட்டை இப்படி அழைச்சு என்னைக் கேலி பண்ணுவாங்க. நீங்ககூட என்னை "நெடோச்கா'ன்னு செல்லமா கூப்பிடலாம்.” நான் சொன்னேன்.

“இல்ல...” அவர் பதில் சொன்னார்.

“என்னுடைய நெடோச்கா அனுபவிச்ச தொல்லைகளும், துயரங் களும் எவ்வளவு தெரியுமா? நீ எப்பவும் சந்தோஷமான பெண்ணாக இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன். நான் உன்னை "ஆன்யா'ன்னு கூப்பிடுறேன். அப்படி உன்னை அழைக்கிறதைத்தான் நான் விரும்புறேன். "ஆன்யா' என்ற பெயரை எப்பவும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.”

மறுநாள் மாலையில் கேள்வி கேட்க ஆரம்பித்தது நான். தாஸ்தாயெவ்ஸ்கியிடம் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டுமென்று நினைத்தேன். ஆனால், நாணம் காரணமாக அவரிடம் அந்தக் கேள்வி யைக் கேட்கும் தைரியம் எனக்கு வரவில்லை. எப்போது அவருக்கு என்மீது முதல் தடவையாகக் காதல் தோன்றியது என்றும்; எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டானது என்றும் அவரிடம் கேட்க நினைத்தேன். முதலில் இந்தக் கேள்வியைக் கேட்க நான் தயங்கினாலும், பின்னர் எப்படியோ அவரிடம் கேள்வி யைக் கேட்டே விட்டேன்.

அவர் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு எனக்கே பெரிய நிராசை தோன்றுகிற விதத்தில் அவர் என்ன பதில் சொன்னார் தெரி யுமா? முதல் வாரத்தில் அவர் என் முகத்தைப் பார்க்கவேயில்லையாம்.

“பார்க்கவே இல்லையா? என்ன சொல்றீங்க?” நான் கேட்டேன்.

“யாருடனாவது நீ முதல் தடவையா பழக நேரிடுகிறபோது, கொஞ்ச நாட்களாகத்தான் அந்த மனிதரோடு பழகறேன்னு வச்சுக்கோ, அப்ப நீ அவரோட முகத்தை தீவிரமா பார்ப்பியா என்ன? நிச்சயமா இருக்க வாய்ப்பே இல்ல. நான் பொதுவாக யாரோட முகத்தையும் அப்படிப் பார்க்க மாட்டேன். அதைப்போலத்தான் உன்னையும் நான் பார்க்கல. நான் உன்னோட முகத்தைப் பார்த்துப் பேசினாக்கூட, நீ போயிட்டேன்னு வச்சுக்கோ... உன் உருவமே என் ஞாபகத்துல இருக்காது. உன்னைப் பற்றி யாராவது விசாரிச்சாங்கன்னா உன்னோட உடலமைப்பு இப் படின்ற மாதிரியெல்லாம் என்னால விவரிக்க முடியாது. அக்டோபர் கடைசியிலதான் நான் உன்னோட ஈர விழிகளையும், பிரகாசம் ததும்பும் புன்னகையையும் பார்க்குறேன். ஆமா... அதற்குப் பிறகு உன் முகம் எனக்கு விருப்பமான ஒண்ணாயிடுச்சு.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel