Lekha Books

A+ A A-

நெருப்பு - Page 9

neruppu

சரளா மூச்சுவிடாமல் உட்கார்ந்திருந்தாள். அவன் சோப்புப் போட்டுக்கொண்டிருந்தான். கைகளில், நெஞ்சில், கால்களுக்கு நடுவில். இறுதியாக முகத்திலும் தலையிலும் சோப்பு தேய்த்துவிட்டு, அவன் திரும்பவும் நீந்தினான். மல்லாக்கப் படுத்து நீந்தியதால், அவன் அப்போதும் சரளாவைப் பார்க்கவில்லை. மல்லாக்கப் படுத்தவாறு குதிக்கும்போது நீருக்கு மேலே தெரிந்த முழங்கால்கள் அழகாக இருந்தன.

கரைக்கு வந்து எழுந்து நின்றபோதுதான் சரளா மேலேயிருக்கும் படியில் உட்கார்ந்து தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவன் அடுத்த நிமிடம் நீருக்குள் குதித்தான். கழுத்து வரை நீரில் நின்றுகொண்டு அவன் கேட்டான்:

“அண்ணி, நீங்க எப்போ வந்தீங்க?”

“கொஞ்ச நேரமாச்சு...”

வினோத்தின் முகம் வெட்கத்தால் சிவந்தது.

“ஏன் என்கிட்ட சொல்லல?”

“ஏன் சொல்லணும்?”

“அண்ணி நீங்க போங்க. நான் குளிச்சிட்டு வர்றேன்...” - அவன் கெஞ்கிற குரலில் சோன்னான்.

“நீ குளிச்சிட்டு வா. நான் இங்கேதான் இருப்பேன்.”

“அண்ணி, ப்ளீஸ்... நீங்க போங்க. நான் குளிச்சிட்டு வர்றேன்.”

வினோத்தின் சிரிப்பும், சங்கடமும் ஒரே நேரத்தில் வந்தன.

சரளாவின் மனதிலும் கண்களிலும் குறும்புத்தனம் தெரிந்தன. அவள் கேட்டாள்: “எனக்கு நீச்சல் கற்றுத் தர்றியா?”

“ம்...” - அவன் விளையாட்டுக்காகச் சொன்னான்: “தண்ணியில குதிங்க.”

சரளா எழுந்து படிகளில் இறங்க ஆரம்பித்தாள். அண்ணி இதுவரை உண்மையாகவே நீந்துவதைப் பற்றித்தான் பேசியிருக்கிறாள் என்பதை அவன் புரிந்துகொண்டான். அவன் வேகமாக நீரிலிருந்து வெளியே வந்து இடுப்பில் கையை வைத்துக்கொண்டு குளக்கரையில் இருந்த ஆடைகள் மாற்றும் அறைக்கு ஓடினான். சரளா சிரித்துக்கொண்டே படிகளில் இறங்கினாள்.

இப்போது அவை ஒவ்வொன்றையும் நினைத்து நினைத்து சரளா சிரித்தாள். வினோத் பக்கத்து அறையில்தான் இருக்கிறான் என்ற நினைப்பு அவளுக்குச் சந்தோஷத்தைத் தந்தது. ஒரு ஈர்ப்பு வளையத்திற்குள் சிக்கிக் கொண்டதைப்போல அவள் அறையை விட்டு வெளியேறி நடந்தாள். வினோத்தின் அறை மூடியிருக்கவில்லை. அவள் வாசலில் நின்றவாறு இடுப்பில் கையை வைத்துக் கொண்டு உள்ளே பார்த்தாள்.

வினோத் படுக்கையில் மல்லாக்கப் படுத்திருந்தாள். திறக்கப்பட்ட புத்தகத்தை மார்பில் கவிழ்த்து வைத்திருந்தான். படித்துக் கொண்டிருக்கும் பொழுதே பாவம்... தூங்கிவிட்டிருக்கிறான். அவள் உள்ளே நுழைவதற்காகக் காலை எடுத்து வைத்தாள். அடுத்த நிமிடம் முன் வைத்த காலை பின்னால் இழுத்துக்கொண்டாள்.

நேற்றுவரை இல்லாமலிருந்த ஒரு சுவர் அவர்கள் இருவருக்குமிடையில் உயர்ந்து நின்றது. பண்பாடு, மனக்கட்டுப்பாடு ஆகியவற்றைத் தாண்ட முடியாத சுவர்... நேற்றுவரை வினோத்தின் அறைக்குள் நுழைய அவளுக்கு எந்தவொரு பிரச்சினையும் இருந்ததில்லை. அவளுடைய திருமணம் முடிந்த காலத்தில் வினோத் அரைக்கால் சட்டை அணிந்து நடந்து திரிந்தான். அவளுடைய கண்களுக்கு முன்னால் அவன் வளர்ந்ததும் வேட்டி அணிய ஆரம்பித்ததும் நடந்தன. கல்லூரியில் சேர்ந்தபோது அவன் பேண்ட் அணிய ஆரம்பித்தான். தன்னுடைய சொந்த தம்பியிடம் நடந்து கொள்வதைப்போல அவள் அவனிடம் நடப்பாள். ஆனால், நேற்று குளத்தின் படித்துறையில் அவளிடம் மாறுதல் உண்டாகி விட்டது.

முன்னாலிருக்கும் சுவர் எந்த அளவிற்குப் பலம் கொண்டதாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு அதை உடைத்து எறிவதற்கு இச்சை சக்திக்குப் பலம் இருந்தது. அவள் உள்ளே நுழைந்தாள். ஒரு ஆணின் உடலை முதல் தடவையாகப் பார்க்கும் ஆர்வத்துடன், அவள் வினோத்தின் உடம்பைப் பார்த்தாள். மார்பிலும் கை இடுக்கிலும் சிறிதாக வளர்ந்திருக்கும் ரோமங்கள்.... முகத்தில் மெல்லியதாக மீசை... வயிற்றின் மீது வைத்துப் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை அவள் எடுத்து வைத்தாள். வினோத் தன் பாதி கண்களைத் திறந்தான்.

“அண்ணியா? என்னை நாலு மணிக்கு எழுப்புங்க. தெரியுதா? தேநீர் உண்டாக்கிட்டு...”

அதைச் சொல்லிவிட்டு அவன் திரும்பிப் படுத்தான். அது அவன் பொதுவாகச் செய்ய கூடியதுதான். குறிப்பாகத் தேர்வு நேரத்தில் பகலில் தூங்கும்போது. அவன் அப்போதும் சிறு குழந்தையைப் போலவே இருந்தான். நடக்கப் போகும் விஷயங்களைப் பற்றிய எந்தவித அறிவும் இல்லாமல் அவன் சாந்தமாகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.

ஆஸ்ரமத்தின் சாளரத்தின் கையை வைத்து ஞானானந்தன் போன வெற்றிடத்தையே பார்த்துக் கொண்டு, ஒரு விசும்பலுடன் சரளா நினைத்துப் பார்த்தாள். துயரத்தின் ஆரம்பம் அதுதான்.

அவள், தூங்கிக் கொண்டிருந்த வினோத்தின் இடுப்பில் தன் கையை வைத்தாள். அவன் திடுக்கிட்டு எழுந்து மல்லாந்து படுத்தான். சரளாவின் முகத்தில் புரிந்துகொள்ள முடியாத ஒரு உணர்ச்சி வெளிப்பாடு இருந்தது. அது அவனைப் பதைபதைப்புக்குள்ளாக்கியது. அவன் கேட்டான்:

“என்ன அண்ணி?”

சரளா எதுவும் சொல்லாமல் படுக்கையில் அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள். அவளுடைய தொண்டை வறண்டு போயிருந்தது. அவளுடைய கைகள் வினோத்தின் இடுப்பில்தான் இப்போதும் இருந்தது.

அங்கிருந்து அது வயிற்றின் வழியாகப் பயணித்தது. மார்பில் இருந்த ரோமங்களை அவளுடைய விரல்கள் வருடின.

“அண்ணி என்ன செய்றீங்க?”

ரோமங்களைத் தொட்டதால் அவனுடைய மார்பு உணர்ச்சி வசப்பட்டிருப்பதை அவளால் உணர முடிந்தது.

“என்ன செய்றீங்க?” - அவன் மீண்டும் கேட்டான். அவனுடைய குரல் அதிர்ச்சியாலும் உந்தப்பட்ட உள்ளுணர்வாலும் அடைத்து விட்டிருந்தது. மார்பில் வருடிக்கொண்டிருந்த வளையல்கள் அணிந்த சதைப்பிடிப்பான கையை அவன் பிடித்தான். வேறு இடத்தில் அதை நீக்கி வைப்பதற்காகத்தான் அவன் பிடித்தான். அந்த நிமிடத்தில் அழகான ஒரு முகம் அவனுடைய முகத்தை நோக்கித் தாழ்ந்து வந்தது. அவன் என்ன செய்வதென்று தெரியாமல் செயலற்றவனாகிவிட்டான்.

அழகான ஒரு பெண்ணின் உடல் அவனுக்கு முன்னால் நிர்வாணமாகிக் கொண்டிருந்தது. படிப்படியாகப் புடவை அவிழ்ந்து படுக்கையிலும் தரையிலுமாக விழுந்தது. ப்ளவ்ஸ் என்ற சிறைக்குள்ளிருந்து வெளியே குதித்த மார்பகங்கள் உணர்ச்சி வசப்பட்டு இறுகிப் போயிருந்தன. வினோத் பெண்ணுடம்பில் புதிய அர்த்தங்களை கண்டான்.

வெளியே நிழல் சாயத் தொடங்கியது. வடக்கு திசையிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றில் இலஞ்சிப்பூவின் வாசனை இருந்தது. வினோத் சொன்னான்:

“அண்ணி எழுந்து புடவையை உடுத்துங்க.”

அவனுடைய கழுத்தைச் சுற்றியிருந்த தன் கைகளை எடுக்காமல், களைப்புடன் சரளா சொன்னாள்:

“ம்... ம்....”

“கோபி அண்ணன் வரவேண்டிய நேரமாச்சுல்ல! எழுந்திரிங்க.”

அவள் அடுத்த நிமிடம் எழுந்து உட்கார்ந்தாள். வெளியே பார்த்தாள். வெயில் அப்போதும் கடுமையாகத் தகித்துக் கொண்டிருந்தது. நேரம் அப்படியொண்ணும் அதிகம் ஆகவில்லை. கீழேயிருந்து எந்தச் சத்தமும் கேட்கவில்லை.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel