Lekha Books

A+ A A-

நெருப்பு - Page 6

neruppu

பகலில் படுத்து உறங்கிவிட்டு, இரவு நேரங்களில் படிப்பதுதான் அவனுடைய பழக்கம். இடையில் கண்விழித்தால், கீழே சமையலறைக்கு வந்து தன் தாயிடம் கல்லூரி ஹாஸ்டலில் சாப்பிட்ட உணவுக் பொருட்களை விளக்கி அவற்றைத் தயார் பண்ணித் தரச் சொல்லிச் சாப்பிடுவான். சில நேரங்களில் அவனே சமையல் பண்ணுவான். எல்லாவற்றையும் பார்த்து ரசித்துக் கொண்டு நின்றிருக்கும் சரளாவிடம் அவன் கூறுவான்:

“அண்ணி, இதை அறுத்துத் தாங்க... சீக்கிரம்.”

பிறகு சிறிது நேரத்திற்கு வினோத் வறுக்கும், பொரிக்கும், அரைக்கும் சத்தம்தான். வாயில் நீர் ஊறும் அளவிற்கு வாசனை அங்கு உண்டாகும்.

கோபி கூறுவான்: “எனக்கு இந்த உணவுப் பொருட்களெல்லாம் வேண்டாம். அம்மா, நீங்க தயாரிக்கிற வெண்டைக்காய் சாம்பாரும் பாவைக்காய் கூட்டும் எனக்குப் போதும்.”

ஆனால், வினோத்தின் சமையலை அங்கு சாப்பிடுவதற்கு ஆட்கள் இருக்கத்தான் செய்தார்கள். அன்னைக்கு அது மிகவும் பிடித்திருந்தது. சரளாவும் அதில் கொஞ்சத்தை எடுத்து சுவை பார்ப்பாள். வாசனையைப் போலவே ருசியும் இருந்தது.

“அண்ணி, என் சமையல் எப்படி இருக்கு?”

“வாசனையை உணர்ந்தப்போ நல்ல ருசி இருக்கும்ன்ற மாதிரி  இருந்தது.”

“சாப்பிட்டுப் பார்த்தப்போ, ருசியே கொஞ்சமும் இல்ல.... அப்படித்தானே?”

“ஆமா....”

“அப்படின்னா இனி வேண்டாம்ல?”

“அய்யோ... நான் சும்மா சொன்னேன். எனக்கு இன்னும் கொஞ்சம் தா.”

“வேண்டாம்... வேண்டாம்... எனக்கு வேற வாடிக்கையாளர்கள் இருக்காங்க. அப்படித்தானே அம்மா?”

அன்னை அதைக் கேட்டு சிரிப்பாள். தொடர்ந்து வினோத் விளையாட்டுக்காகத் தள்ளி வைத்த பாத்திரத்தை சரளாவை நோக்கி நீட்டுவான்.

“இவ்வளவு அருமையான உணவுப் பொருட்களையா நீ ஹாஸ்டல்ல இருக்குறப்போ சாப்பிடுறே?” - சரளா கேட்பாள்.

“அவனோட மெஸ் பில் அதிகமா இருக்குறதுல ஆச்சரியப்படுறதுக்கே இல்ல...” - கோபி கூறுவான்.

அவன் விளையாட்டுக்காக அதைக் கூறுவான். ஆனால், வினோத் அமைதியாக உட்கார்ந்திருப்பான். தன் அண்ணன் மீது அவனுக்குப் பாசத்துடன், பயமும் இருந்தது. அவனுக்குப் பத்து வயது நடக்கும்போது அவர்களின் தந்தை மரணத்தைத் தழுவி விட்டார். அப்போது இருபது வயதைக் கொண்ட அவனுடைய அண்ணன்தான் சவ அடக்கம் நடந்தபோது அழுது தளர்ந்து போயிருந்த அவனைத் தன் உடலோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன். அன்றிலிருந்து சொல்லப்போனால் அவன்தான் தம்பியைத் தாங்கிக் கொண்டிருந்தான். ப்ரீ டிகிரி படித்துக்கொண்டிருந்த அவன் தன்னுடைய படிப்பை நிறுத்திவிட்டு வயலில் இறங்கினான் - தன் தந்தையின் தொழிலைத் தொடரவேண்டும் என்ற எண்ணத்துடன். பொறியியல் வல்லுனராக ஆகவேண்டும் என்ற தன்னுடைய ஆசையைத் தம்பி மூலம் நிறைவேற்றிக் கொள்ள அவன் முயற்சித்தான். சேற்றின் மணத்திலும் முளைத்து வரும் நெல் வித்துகளின் உயிர்த்துடிப்பிலும் அவன் நிம்மதி அடைந்தான்.

தன்னுடைய இருபத்தாறாவது வயதில் அவன் திருமணம் செய்துகொண்டது உண்மையாகச் சொல்லப் போனால் அந்தப் பெரிய வீட்டில் பகல் முழுவதும் தனியாக இருக்கும் தன்னுடைய தாய்க்குத் துணையாக ஒரு பெண் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். மகனின் ஒவ்வொரு விஷயத்தையும் அந்தத் தாய் மிகவும் கவனத்துடன் பார்த்துக் கொண்டாள். காலையில் அவன் படுக்கையை விட்டு எழும்போது தேநீர் தயாரித்து மேஜைமீது கொண்டுபோய் வைப்பாள். அது முடிந்தவுடன் காலை உணவு தயாரிப்பதில் இறங்கிவிடுவாள். ஒன்பது மணிக்குக் காலை உணவு சாப்பிட்டு முடித்து அவன் வயலைத் தேடிப் புறப்பட்டுவிடுவான். மதிய உணவிற்காக ஒரு மணிக்கு வீட்டிற்கு வருவான். இதற்கிடையில் நல்ல ஆற்றுமீன் ஏதாவது கிடைத்தால், பணியாட்கள் மூலம் அவன் கொடுத்தனுப்புவான். மதிய உணவு சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரம் ஓய்வு- கீழே இருக்கும் அறையில்.

திருமணம் முடிந்த பிறகும் இதே மாதிரிதான் எல்லா காரியங்களும் தொடர்ந்து நடந்தன. மதிய நேரம் தூங்கி எழுகிறபோது, குடிப்பதற்கான நீரை கண்ணாடி டம்ளரில் ஊற்றி கட்டிலின் தலைப்பகுதியில் இருக்கும் ஸ்டூலின்மீது வைத்துவிட்டு சரளா மாடிக்குப் போவாள். ஆரம்பத்தில் கீழே மாமியாருடன் தான் அவள் இருப்பாள். ஒருநாள் அங்கு உட்கார்ந்து அவள் தூங்குவதைப் பார்த்து மாமியார்தான் சொன்னாள்:

“மகளே, போயி நீ படுத்துத் தூங்கு.”

அதற்குப் பிறகு மதிய நேரம் தூங்குவதற்காக அவள் மாடிக்குப் போய்விடுவாள். வார்னீஷ் பூசப்பட்ட மேற்கூரையின் ஒரு மூலையில் தொங்கவிடப்பட்டிருக்கும் பல நிறங்களைக் கொண்ட கண்ணாடி உருண்டைகளைப் பார்த்தவாறு அவள் தனியாகக் கட்டிலில் படுத்திருப்பாள். அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பாள். ப்ளவ்ஸின் கொக்கிகளை அவிழ்ப்பாள். சுதந்திரமாக்கப்பட்ட மார்பகங்களை அவளுடைய மெல்லிய விரல்கள் வருடும். விரல் நுனியில் மலரும் உணர்ச்சித் துளிகளின் ஆனந்தத்தில் சிக்குண்டு அவள் கண்களை மூடிப் படுத்திருப்பாள். மார்பகங்களில் திரண்டு நிற்கும் வியர்வைத் துளிகளை நெல் செடிகளின் வாசனையுடன் வயலிலிருந்து புறப்பட்டு வரும் காற்று மெதுவாகத் தன்னுடன் எடுத்துச் செல்லும். கோபி மேலே வந்தால் நன்றாக இருக்கும் என்று அவள் ஏங்குவாள். அவன் வரமாட்டான் என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும்.

அவன் மதிய நேரத்தின்போது எந்த நாளிலும் மாடிக்கு ஏறி வந்ததில்லை. தேவைப்படுகிற விஷயங்களெல்லாம் கீழேயேதான். நகரத்திற்குப் போகவேண்டுமென்றால் மாற்றி அணிய வேண்டிய ஆடைகள், பணம் எல்லாமே கீழ் அறையிலேயே இருக்கும். திருமணம் முடிந்த பிறகும் அவன் தனக்கென்று இருக்கும் ஒரு உலகத்தைத் தொடர்ந்து உண்டாக்கிக் கொண்டான். மதிய உறக்கம் முடிந்து அவன் போவது சரளாவிற்குத் தெரியாது. நிறைவேறாத உணர்ச்சிப் பெரு வெள்ளத்தின் நினைவுகளுடன் அவள் தன்னை மறந்து தூங்கிவிட்டிருப்பாள்.

இரவில் ஒரு சடங்கு என்பதைப்போல கோபி தன் மனைவியுடன் உடலுறவு கொண்டான். தன்னுடைய விருப்பங்களைப் பற்றி பேச அவனுக்குத் தயக்கமாக இருந்தது. தான் சொல்லாமலே தன் மனைவி அவற்றைப் புரிந்துகொள்ளவேண்டுமென்று அவன் நினைத்தான். அதனால், கோபி படுத்தால் அவள் தன்னுடைய ஆடைகளை அவிழ்க்க ஆரம்பித்துவிடுவாள். புடவைகளை அவிழ்த்து ஒரு நாற்காலியில் போடுவாள். தொடர்ந்து தன் கணவன் பக்கம் திரும்பி ப்ளவ்ஸையும் உள்ளாடைகளையும் அவிழ்ப்பாள். எல்லாம் ஒரு சடங்கைப்போல நடக்கும். கோபி அதைத்தான் விரும்பினான். எல்லாவற்றையும் கழற்றிப் போட்டுவிடடு, அவள் அவனுக்குப் பக்கத்தில் போய் படுப்பாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel