Lekha Books

A+ A A-

என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 21

en thathavukku oru yanai irunthathu

அதாவது, பிரியாணி, பத்தரியும் மாமிசமும், நெய்சோறு, பரோட்டா, இஷ்டு, சாம்பார், அவியல், பாயசம் இப்படி பல உலகத்திலுள்ள எல்லா சாப்பாட்டு விஷயங்களையும் செய்யத் தெரிஞ்சவளா அவள் இருக்கணும். இதுக்கு மேல வேற சில விஷயங்களும் தெரிஞ்சு வச்சிருக்கணும். வேலி கட்ட, மண் சுமக்க, செடிகளுக்கும் மரக்கன்றுக்கும் தேவையான உரம் போட... இது எல்லாத்தையும்கூட தெரிஞ்சு வச்சிருக்கணும். இப்படிப்பட்ட எல்லா விஷயங்களையும் தெரிஞ்ச ஒரு பெண்ணைக் கண்டு பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி எங்க வாப்பாவும் உம்மாவும் சொல்லிட்டாங்க!”

இவ்வளவையும் கேட்டபிறகு, குஞ்ஞுபாத்தும்மாவின் மனதில் நிஸார் அஹமது மேலும் பயங்கரமான ஒரு மனிதனாகத் தெரிந்தான். அவன்மீது அவளுக்குக் கோபம் உண்டானது. ஆயிஷா மீதும்தான். அண்ணன் அதைச் சொன்னான்... இதைச் சொன்னான்னு... பெரிய அண்ணன்!

ஆயிஷா தொடர்ந்தாள்:

“என் அண்ணனைப்போல ஒரு ஆளை... கேக்குறியா? ஒருநாள் ராத்திரி அண்ணன் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து என்னவோ படிச்சிக்கிட்டு இருக்காரு. அவரோட கை மேஜையோட ட்ராயர் பக்கத்துல இருந்ததை நான் கவனிக்கல. அது தெரியாம நான் ட்ராயரை வேகமாக அடைச்சிட்டேன். அவ்வளவுதான்... என்னவோ நொறுங்குற மாதிரி இருந்துச்சு. என்னன்னு பார்த்தா... எனக்கு மயக்கமே வந்திடும்போல இருந்துச்சு. என் அண்ணனோட இடது கை சுண்டுவிரல் சிதைஞ்சு போயிருந்துச்சு...”

இதைக் கேட்டதும் குஞ்ஞுபாத்தும்மா ஒரு மாதிரி உடம்பை சிலிர்த்துக் கொண்டாள். அவள் சொன்னாள்:

“பிறகு...?”

ஆயிஷா சொன்னாள்:

“அண்ணன் அசையவே இல்ல. மீசையை வெட்டுற சின்ன கத்திரியை என்னை எடுத்துட்டு வரச்சொன்னாரு. நான் கத்திரியைக் கொண்டு போனேன். அந்தக் கத்திரியாலே அண்ணன் சிதைஞ்சு போன விரலை வெட்டி எடுத்தாரு...” இவ்வளவையும் சொன்ன ஆயிஷா கூறினாள்:

“நான் போறேன்... நான் இருக்கிற இடத்துக்கு வர்றியா?”

குஞ்ஞுபாத்தும்மாவின் காதில் அது விழவே இல்லை. அவள் சிலை என நின்றிருந்தாள்.

ஆயிஷா மீண்டும் கேட்டாள்:

“வர்றியா?”

“எங்கே.”

“கள்ள புத்தூஸே... எங்க வீட்டுக்கு...”

“நான் உம்மாக்கிட்ட கேட்டுட்டு வர்றேன்.”

அவள் வீட்டுக்குப் போய் தன் தாயிடம் சொன்னாள்.

“உம்மா... அங்கே இருக்குறவங்க முஸ்லிம்கள்தான். நான் அங்கே போய் வரட்டா?”

“போடி...” -அவளின் தாய் சொன்னாள்:

“முஸ்லிமாம் முஸ்லிம்... அவங்க காஃப்ரிகள்...”

“இல்ல உம்மா...” அவள் சொன்னாள்: “முஸ்லிம்கள்தான்... அங்கே பாருங்க. அங்கே இருக்குற ஆயிஷா நம்ம புளியமரத்துக்குக் கீழே நின்னுக்கிட்டு இருக்கா...”

குஞ்ஞுபாத்தும்மாவின் தாய் பார்த்தாள். புடவை உடுத்தியிருக்கிறாள். காது குத்தவில்லை.

அவளின் தாய் சொன்னாள்:

“மைதீனே... அவங்க முஸ்லிமா?”

“ஆமா உம்மா... மெதுவா சொல்லுங்க. அவங்க வீட்டுக்கு நான் போயிட்டு வரட்டா?”

“நீ நம்ம வீட்டைவிட்டு இப்போ வெளியே போறதா இருந்தா, நீ என் மகளே இல்ல... அதோட போயிட வேண்டியதுதான்...”

குஞ்ஞபாத்தும்மா வெளியே சென்று ஆயிஷாவிடம் சொன்னாள்:

“நான் நாளைக்கு வர்றேன்...”

“இன்னைக்கு என்ன?”

குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“கொஞ்சம் வேலை இருக்கு. தண்ணி எடுக்கணும். நான் நாளைக்கு வர்றப்போ, பழுத்த புளியம்பழம் கொண்டு வர்றேன்...”

ஆயிஷா போனாள்.

அன்று இரவு நீண்ட நேரமாகியும் குஞ்ஞுபாத்தும்மாவிற்கு தூக்கமே வரவில்லை. ஆயிஷாவின் அண்ணனை வர வைக்கக் கூடாது என்று அவள் ஏற்கெனவே கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கிறாள். இப்போது அதை மாற்றி அவள் எப்படிச் சொல்ல முடியும்?

கடைசியில் அவள் மனதில் வேதனையுடன் தொழுதாள்:

“என்னைப் படைச்ச கடவுளே... துட்டாப்பியோட அண்ணன்...”

8

ள்ள சாட்சி சொல்ல மாட்டேன்

பெரிய ஆண் யானையை சொந்தத்தில் வைத்திருந்த யானை மக்காரின் செல்ல மகளான குஞ்ஞுதாச்சும்மா தீர்க்கமான குரலில் சொன்னாள்:

“அவங்க முஸ்லிம்கள் இல்ல. யானை மக்காரோட செல்ல மகளான நான் சொல்றேன்... அவங்க முஸ்லிம்கள் இல்ல...”

குஞ்ஞுபாத்தும்மா தன் தந்தையின் முகத்தைப் பார்ப்பாள். அவர் எதுவுமே பேச மாட்டார்.

அவளின் தாய் தொடர்வாள்:

“க்யாமம் நெருங்கிடுச்சுன்றதுக்கான அடையாளம் தெரியுதா?”

உலகம் முடியப் போவதற்கான அடையாளம்தான் ஆயிஷாவும் அவளின் தந்தையும் தாயும்!

“அந்தப் பொம்பளை தலையில் பூ வச்சிருக்கா- பூ!”

ஆயிஷாவின் தாய் கூந்தலில் பூ சூடியிருக்கிறாள். அது இஸ்லாமிற்குப் பொருந்துமா?

“பிறகு... அந்தப் பெண்ணைப் பார்த்தியா? முடியை ரெண்டு வால் மாதிரி ஆக்கி தோள் வழியா நெஞ்சுல படுற மாதிரி போட்டிருக்கா!”

ஆயிஷா தன் தலை முடியால் பல ஜால வித்தைகளும் செய்வாள். அவள் பெரிய கிறுக்கி என்றுதான் சொல்ல வேண்டும். ஓடுவாள். குதிப்பாள். நடனமாடுவாள். பாட்டு பாடுவாள். ஒருநாள் தாமரைக் குளத்தின் அருகில் நின்று அவள் பக்திவயப்பட்டு ஒரு பாட்டு பாடினாள். அவள் தெய்வத்திடம் என்னவோ வேண்டிக்கொண்டி ருக்கிறாள் என்றுதான் குஞ்ஞுபாத்தும்மா நினைத்தாள். அதற்குப் பிறகு அவள் நினைத்தாள்- அந்தப் பாட்டு ஏதாவது “பைத்” ஆக இருக்கும். இல்லாவிட்டால் “கெஸ்” ஆக இருக்கும் என்று. அது எந்த வகைப்பாட்டு என்பதை அவளால் புரிந்துகொள்ளவே முடிய வில்லை. அவளும் பக்தியுடன் தன்னுடைய இரண்டு கைகளையும் மேல் நோக்கி உயர்த்தினாள். “ஆமீன்!” என்று வாய்திறந்து சொல்லவும் செய்தாள். ஆயிஷா சிரிக்கவில்லை. இருமுவதைப் போல என்னவோ செய்தாள். ஆனால், அவள் சிரிப்பை அடக்குவதற்காகத்தான் அப்படிச் செய்கிறாள் என்பதைப் பின்னர்தான் குஞ்ஞுபாத்தும்மாவுக்கே புரிந்தது. அவள் கேட்டாள்:

“நீ என்ன செய்றே?”

ஆயிஷா சொன்னாள்:

“என்கிட்ட இதற்கெல்லாம் அர்த்தம் கேட்காதே. நான் ஒண்ணுமே தெரியாதவள். அந்த மகான் வர்றப்போ நீயே கேட்டுக்கோ. அவர்தான் இது எல்லாத்துக்குக் காரணம். இது என்ன மொழின்னு யாராலும் கண்டுபிடிக்க முடியாது. எங்க காலேஜ்ல பெண்கள் ஊர்வலம் வர்றப்போ உரத்த குரல்ல பாடுறதுக்காக அவர் உண்டாக்குனதுதான் இது. நாங்க காலேஜ்ல ஊர்வலம் போறப்போ இதைப் பாடவும் செய்தோம்...”

“துட்டாப்பி, நீ பாடினப்போ நான் “ஆமீன்” சொன்னேன்!”

“நான் பார்த்தேன்...”

“அப்படி நான் செஞ்சது தப்பா?”

 

“கள்ள புத்தூஸே... அது நல்லதுதான்... கெட்டது ஒண்ணும் கிடையாது!”

“அப்படின்னா இன்னொரு முறை பாடு. கேட்க நல்லா இருக்கு!”

“அப்படின்னா பக்தியோட நீ இருக்கணும். மனசுல இருக்குற எல்லா எண்ணங்களையும் ஒரு மூலையில இறக்கி வைக்கணும். மனசு சுத்தமா இருக்கணும். ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வச்சுக்கோ. கொடிகளைக் கைகள்ல பிடிச்சுக்கிட்டு காலேஜ் பெண்கள் நடந்து போற ஒரு பெரிய ஊர்வலத்தில் அவங்க- அதாவது நாங்க- கம்பீரமா பாடிக்கிட்டுப் போறதை மனசுல கற்பனை பண்ணிப்பாரு...”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel