Lekha Books

A+ A A-

மண்டை ஓடு - Page 26

mandai-odu

நளினி மீண்டும் நடுங்கினாள். ஸ்ரீகுமார்! ஸ்ரீகுமார்! அவர் களுடைய மகன் பாலசந்திரன் ஆவேசத்துடன் தினமும் கூறக்கூடிய ஒரு பெயர் அது- ஸ்ரீகுமார்!

அடுத்த நாள் பாலசந்திரனை மாணவர்கள் தங்களுடைய தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் அவன் செய்த சொற்பொழிவு இது:

“பொதுமக்கள் போராட்டத்தின் முதல் தலைவரின் மண்டை ஓடு பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும் வீட்டில் பிறந்து, அதைப் பார்த்துப் பார்த்து வளர்ந்து, அதன் பல் இளிப்பில் இருந்து ஆவேசம் அடைந்த நான் என்னுடைய வாழ்க்கையை அந்த மிகப் பெரிய போராட்டத்திற்குச் சமர்ப்பிக்கிறேன். நசுக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்காக உயிரை அர்ப்பணம் செய்த ஸ்ரீகுமார் ஒருநாள் செய்த சொற்பொழிவை நான் திரும்பவும் கூறுகிறேன். கண்டமாரில் நடந்த பலாத்காரச் செயல்கள் இந்த சமூக அமைப்பின் அடித்தளத்தைப் பெயர்த்து எறிவதற்கான சக்தியைக் கொண்ட குழந்தைகளை உருவாக்கியிருக்கின்றன என்று நினைத்துக் கொள்கிறேன். அங்குமிங்குமாக சிதறிக் கிடக்கும் எலும்புத் துண்டுகளும் அங்குள்ள கல்லறைகளும் பிரம்மாண்டமாக வளர் கின்றன. அன்று இறந்தவர்கள் இறக்கவில்லை; இறக்கப் போவதும் இல்லை. இந்த மிகப் பெரிய கடலில் நாம் தலைவரைப் பின்பற்றி நடப்போம்!''

அதைத் தொடர்ந்து மாணவர்கள் நசுக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்குப் பின்னால் அணிதிரண்டு நின்றனர். முதல் வரிசையில் யார் தெரியுமா? அவர்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள். ஆனால், அவர்களை யாருக்கும் தெரியாது. அவர்களுக்கு இந்த உலகத்தில் யாருடனும் உறவு இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு தெரியாத உலகத்திலிருந்து வந்திருப்பவர்கள். ஒருவரையொருவர் இதற்கு முன்பு பார்த்திராதவர்கள்.

அவர்களுடைய தாயைப் பற்றியோ தந்தையைப் பற்றியோ கேட்க வேண்டாம். அக்கிரமத்தில் இருந்தும் அநீதிகளில் இருந்தும் அவர்கள் கிளம்பி வந்திருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் நோக்கங்கள் இருக்கின்றன. அதை அடையக்கூடிய வலிமையும் உற்சாகமும் இருக்கின்றன. பயம் என்பதே அவர்களுக்கு இல்லை. அவர்களுடைய எண்ணிக்கையோ? அது யாருக்கும் தெரியாது.

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள். அரசர்களின், சக்கரவர்த்திகளின் வரலாற்றை அல்ல- மனிதர்களின் வரலாற்றை! இந்த வீரர்கள் பிறந்தது எங்கே என்பதைப் பார்க்கலாம்... எத்தனை கண்டமார் கிராமங்கள் இருந்திருக்கின்றன! நினைவுபடுத்திப் பாருங்கள்... அதிர்ச்சி அடைய வேண்டாம். அது ஒரு உண்மை மட்டுமே.

ராஜசேகரனும் நளினியும் பாலசந்திரனின் சொற்பொழிவை வாசித்தார்கள். அந்த வரவேற்பறையில் இருந்து கொண்டுதான் வாசித்தார்கள். அப்போதும் அந்த இரண்டு மண்டை ஓடுகள் பற்களை இளித்துக் கொண்டிருந்தன. அவற்றின் பல் இளிப்பிற்குத் தெளிவான அர்த்தம் இருந்தது. நளினி பதைபதைப்புடன் கேட்டாள்:

“அந்த மண்டை ஓட்டை எதற்கு இங்கு கொண்டு வந்து வைத்தீர்கள்? மகனை பலி கொடுப்பதற்கா?''

செயலற்ற நிலையில் ராஜசேகரன் சொன்னான்:

“இது இப்படி வரும் என்று எனக்குத் தெரியுமா?''

அப்போது பாலசந்திரன் அங்கு வந்தான். அவன் சற்று அவசரத்தில் இருப்பதைப் போல தோன்றியது. சிறிது பேச வேண்டும் என்பதற்காக வந்திருந்தான். இனிமையாக சிரித்துக் கொண்டே அவன் சொன்னான்:

“அப்பா, நாளைக்கு நீங்க மூன்றாவதாக ஒரு மண்டை ஓட்டையும் இங்கே வைக்கலாம். அதற்கான ஆணியாக ஒரு இடுப்பு எலும்பு இருப்பது சிறப்பாக இருக்கும்.''

ராஜசேகரன் அதிர்ச்சியடைந்து உறைந்துபோய் நின்று கொண்டிருந்தான். வாய்விட்டு அழுதவாறு நளினி மகனை இறுக அணைத்துக் கொண்டாள்.

“என் தங்க மகனே!''

ராஜசேகரனின் பெரிய வாயிலிருந்து ஒரு அலறல் சத்தம் கிளம்கி வந்தது.

“நீயா?''

அமைதியான குரலில் பாலசந்திரன் சொன்னான்:

“ஆமாம்... அப்பா!''

ராஜசேகரன் பற்களைக் கடித்துக் கொண்டே தன்னுடைய ட்ரவுசர் பாக்கெட்டிற்குள் கையை நுழைத்துத் தேடினான். அவன் கத்தினான்.

“உன்னையும் உன்னுடைய அம்மாவையும் கொன்றுவிட்டு நானும் இறப்பேன்!''

அதை அந்த அளவிற்குத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் பாலசந்திரன் சொன்னான்:

“அதுவும் நல்லது... இருந்தாலும் எனக்குத் திருப்திதான். நான் சாவதை நீங்கள் பார்க்கிறீர்களே, அப்பா. இதோ... அப்பா... நீங்க அந்த சாளரத்தின் வழியே வெளியே பாருங்க...''

அப்போது கோஷங்களுடன் ஒரு ஊர்வலம் சாலையின் வழியாகப் போய்க் கொண்டிருந்தது. அதில் பிச்சைக்காரர்களும், எலும்பும் தோலுமாக பட்டினி கிடப்பவர்களும், மனித பிரகாசம் இல்லாமல் போனவர்களும்... இப்படி எல்லாரும் இருந்தார்கள். பாலசந்திரன் தொடர்ந்து சொன்னான்: “அந்த ஊர்வலம் இங்குதான் வருகிறது. பயப்பட வேண்டாம். எதற்கென்று தெரியுமா? இந்த இரண்டு மண்டை ஓடுகளையும் பார்த்து மரியாதை செலுத்துவதற்காக... இதை பத்திரப்படுத்திக் காப்பாற்றி வைத்ததற்காகவும், அதன் மூலம் மனிதர்கள்மீது செய்த அநீதிகளைப் பற்றி நேரடியாகத் தெரிந்து கொள்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கும் நன்றி. அந்த ஊர்வலத்தின் இடப்பக்க வரிசையில் முன்னால் நின்று கொண்டிருப்பவன், அப்பா... உங்களுடைய முதல் வெற்றிச் சின்னமான இந்த மண்டை ஓட்டின் சொந்தக்காரரின் மகன். அவன் தன்னுடைய தந்தையின் மண்டை ஓட்டைப் பார்ப்பதற்காக வருகிறான். இன்னொரு வரிசையில் முன்னால் நின்று கொண்டிருப்பது, அப்பா... கண்டமாரில் நீங்கள் செய்த பலாத்காரத்தில் பிறந்த ஒரு குழந்தை... அவனுக்கும் பின்னால் அப்படிப் பிறந்தவர்கள் நிறைய இருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் பல வருடங்களாகப் பிரிந்து போய் பிச்சை எடுத்துத் திரிந்த தந்தைகளும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்கள் இங்கு வந்து வணங்கிவிட்டுப் போகட்டும்.''

ராஜசேகரன் புலியைப் பார்ப்பதுபோல சீறியவாறு சொன்னான்:

“நாசமாப் போச்சு! அவர்களை வழியில் யாரும் தடுக்க வில்லையா?''

சிரித்துக் கொண்டே பாலசந்திரன் பதில் சொன்னான்:

“யாரும் அவர்களைத் தடுக்க மாட்டார்கள். அவர்களுக்குப் பின்னால், அப்பா... உங்களுடைய பட்டாளத்தைச் சேர்ந்தவர்களும் கோஷங்கள் போட்டுக் கொண்டு ஊர்வலமாக வந்து கொண்டிருக்கிறார்கள். அப்பா... பட்டாளக்காரர்களுக்குப் புரிந்து விட்டது- தாங்கள் இப்படிச் செய்து கொண்டிருப்பவை அனைத்தும் வேறு யாருடைய நலன்களையோ காப்பாற்றுவதற்காகத்தான் என்ற உண்மை. மாநிலத்தின் மேன்மையைக் காப்பாற்றுவதற்காக அல்ல என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டார்கள். அன்று... கண்டமாரில் வைத்தே அவர்களுக்கு அது தெரிந்துவிட்டதாம்...''

“நாசமாப் போச்சு! அவர்கள் இங்கே வருகிறார்கள்!''

ராஜசேகரன் அறைக்குள் பதுங்கியவாறு ஓடினான்.

“வரட்டும் அப்பா! வரட்டும். அவர்கள் பழிக்குப் பழி வாங்குபவர்கள். ஆனால், அவர்களால் மன்னிப்பு அளிக்க முடியும். அப்பா... நீங்க இவற்றையெல்லாம் செய்தது மாநிலத்திற்காக அல்ல... வேறு யாருடைய நலனையோ காப்பாற்றுவதற்காகத்தான் என்பதைப் புரிந்து கொள்வார்களா? அவர்கள் அந்த பலாத்காரத்தின் குழந்தை களாக இருந்தாலும், அவர்களுக்கு தங்களுடைய தந்தைகள் யார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தால்- இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், அப்பா யார் என்ற கேள்வியிலிருந்து விடுதலை பெற்று மன்னிப்பு அளிப்பார்கள்.''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel