
ரதீசன், ஒரு சுருட்டைப் புகைத்தவாறு அமர்ந்திருந்தான். யாரோ கதவை பலமாக தட்டினார்கள். ரதீசன் எழுந்து போய் கதவைத் திறந்தான். அன்று குணவதியை விலைக்கு வாங்கிய ஆள் நின்றிருந்தான்.
அந்த மனிதனின் முகததில் சிவப்பு வண்ணத்தில் வட்ட வட்டமாக தழும்புகள் இருந்தன. கைகளில் சிவப்பு நிறத்தில் சின்னச் சின்ன புண்கள் இருந்தன. பயங்கரமான ஒரு தொற்று நோய் அந்த ஆளுக்கு இருப்பது பார்க்கும்போதே தெரிந்தது.
ரதீசன் கேட்டான்.
‘‘என்ன... சிளம்பியாச்சா!’’ அவன் சொன்னான்.
‘‘ஆமா... நான் தந்த பணத்தைத் திருப்பித் தா.’’
‘‘ஏன் என்ன நடந்துச்சு?’’
‘‘அவள் என்கிட்ட ஒழுங்கா நடக்க மாட்டேங்குறா. என்கிட்ட சண்டை போடுறா.’’
‘‘வாங்க நானும் வர்றேன்.’’
‘‘வேண்டாம். நான் புறப்படறேன். என் பணத்தைத் தா.’’
‘‘நீங்க சொல்றது உண்மைதான்னு நான் எப்படி நம்புறது?’’
‘‘சரிதான்... என்கிட்ட நீ சண்டை போடலாம்னு பார்க்குறியா?’’ உன்னை மாதிரி ஆளுங்களை நான் நிறைய பார்த்திருக்கேன். இந்தப் பூச்சாண்டி வேலையெல்லாம் வேற எங்கேயாவது வச்சுக்கோ. இப்போ என் பணம் எனக்கு வந்தாகணும்.’’
‘‘நான் தர மாட்டேன். நீங்க கேக்குறதும் முறையில்லை.’’
‘‘அவள் என்னைக் கண்டபடி பேசுறா. நான் ஒரு வார்த்தை கூட பேசல. எனக்கு கோபம் கூட வரல. அவள் ஒரு குடும்பப் பெண்ணுன்னு சொல்றா. நான் அவக்கிட்ட நெருங்கக்கூட இல்ல. என் பணத்தை ஒழுங்கா கொடுத்திடு...’’
‘‘தர மாட்டேன்.’’
‘‘நான் உன்னை ஒரு வழி பண்ணிடுவேன்.’’
‘‘இப்போ என் கூட வாங்க. நான் அவள்கிட்ட ஒரு வார்த்தை கேக்குறேன். நீங்க சொல்றது உண்மைதானான்னு நான் தெரிஞ்சிக்கணும்.’’
‘‘தாராளமா...’’
பயங்கர கோபத்துடன் ரதீசன் அவளுடைய அறைக்குள் நுழைந்தான். அவனுக்குப் பின்னால் அந்த ஆள் நின்றிருந்தான். அவள் சிங்கத்தைப் பார்த்த மானைப் போல் நின்றிருந்தாள்.
‘‘குணவதி...’’
‘‘என்ன?’’
‘‘நீ...’’
‘‘நான் நீங்க சொன்னதை ஒரு நாளும் மீறினது இல்ல. நீங்க சொன்னபடியெல்லாம் நடந்திருக்கிறேன். எப்பவாவது மாட்டேன்னு சொல்லியிருக்கேனா?’’
‘‘அது இருக்கட்டும். இப்போ எதுக்கு இந்த ஆளு சொன்னபடி நீ நடக்கல?’’
‘‘ரதீசன்... எதிர்காலத்தை நீ நினைச்சு பார்க்குறதே இல்லியா? இந்தப் பிச்சைக் காசுக்காக... எது வேணும்னாலும் நடக்கட்டும்னு நினைச்சா எப்படி? நான் ஒரேயடியா அழிஞ்சு நாசமாப் போகட்டும்னு நினைச்சா நல்லதா?... இப்படி நடந்தா அதுதான் நடக்கும்.’’
‘‘வாயை டு. நீ இவரை கண்டபடி பேசி ஏன் வெளியே அனுப்பினே?’’
‘‘அது உங்களுக்குத் தெரிஞ்சு என்ன பிரயோஜனம்? நான் உங்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கேன். நீங்க சொன்னபடியெல்லாம் நடக்குறேன்னு. பெண் நிச்சயமா தான் தந்த வாக்குறுதியை எந்தக் காலத்திலும் மீற மாட்டா...’’
அவள் விரல்களைத் கோர்த்து, கையைத் தலையில் வைத்தவாறு தொடர்ந்தாள்.
‘‘இதுவே எனக்கு சுமைதான்.’’
‘‘எது?’’
‘‘என்னோட அழகு...’’
‘‘சரி... எல்லாம் ஒழுங்கா நடக்கட்டும்...’’
குணவதியின் கண்களில் இருந்து கண்ணீர் அரும்பி கன்னத்தில் வழிந்து கொண்டிருந்தது. அவள் பற்களைக் கடித்துக் கொண்டு தொடர்ந்தாள்.
‘‘சரி... சரி... நான் பார்த்துக்குறேன். நீங்க போகலாம்.’’
‘‘அந்த இரவு பயங்கரமான ஒன்றாக இருந்தது. அதைப் போன்ற இருளடைந்து போன ஒரு இரவை அவள் இதற்கு முன்பு பார்த்ததேயில்லை. ஆகாயம் அடர்த்தியான இருட்டு நிறத்தில் இருந்தது. அவ்வப்போது வானத்தை மூடிக் கொண்டிருந்த கரு மேகங்களைத் தாண்டி இடி இடித்தது. தூரத்தில் - அனேகமாக சுடுகாடாக இருக்க வேண்டும். குள்ள நரிகள் ஊளையிட்டுக் கொண்டிருந்தன. அறைக்குள் படு நிசப்தம் நிலவிக் கொண்டிருந்தது. ’’
அவளுடைய மென்மையான மெத்தையை இனி யாரும் தொட முடியாது என்கிற அளவிற்கு தீட்டுப் பட்டுவிட்டது என்றாலும், இவ்வுண்மையை உலகில் உள்ள யாரும் அறிந்திருக்கவில்லை. அன்று முதல் அவளின் முல்லைக் கொடியில் இருந்து விழுந்த மலர்கள் யாருக்குமே பிரயோஜனமில்லாமல் வெறுமனே தரையில் கிடக்க ஆரம்பித்தன. அவற்றின் நறுமணம் கிருமிகள் நிறைந்த நரகத்தில் போய் வீச வேண்டும்.
அவளுடைய அறையில் இருந்து குரல் கேட்டது.
‘‘கடவுளே!’’
அது அவள் குரல்தான். மீண்டும் அவள் பேசுவது கேட்டது.
‘‘எனக்கு ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்திருச்சு...’’
காம வேட்கை கொண்ட பேச்சுக்கு மத்தியில், சரசங்களுக்கு மத்தியில், அவளின் குரல் மூன்றாவது தடவையாகக் கேட்டது.
‘‘நீங்க ஒரு பெரிய உதவியைச் செஞ்சீங்க. குணவதி ஒரு அழகான பெண்ணாக இருந்தா. அதுனால அவ நரக வேதனையை அனுபவிச்சா. அந்த நரகத்துல இருந்து நீங்க தான் அவளைக் கரையேத்தி விட்டீட்ஙக. அவள் அதுல இருந்து தப்பிச்சிட்டா...’’
அந்த ஜன்னலுக்குப் பக்கத்தில் அனேக நாட்களுக்குப் பிறகு வினயன் மீண்டும் காட்சியளித்தான்.
‘‘அப்போ குணவதி...’’
‘‘என்னை இனிமேல் நீங்க தொட நான் அனுமதிக்க மாட்டேன்.’’
‘‘நீ தேவடியாதானே?’’
‘‘ஆமா... நான் தேவடியாதான்.’’
‘‘ஒரு நரகத்தைப் போல அதை நீ வெறுத்தேல்ல?’’
‘‘நான் பழிக்குப் பழி வாங்கப் போறேன்.’’
‘‘பழிக்குப் பழியா? ரதீசனையா?’’
‘‘ரதீசனை இல்ல... ஆண்கள் உலகத்தை. நான் வாங்குற உலகம் முடியிற வரைக்கும் பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்துகிட்டேயிருக்கும்.’’
குணவதி பிசாசு சிளீப்பதைப் போல் உரத்த குரலில் சிரித்தாள். அவள் தொடர்ந்து சொன்னாள்.
‘‘காம வெறி பிடித்த அரக்கர்களை நான் பழிக்குப் பழி வாங்குறேன். அவர்களும் அவர்களோட பரம்பரையும் தொடர்ந்து அதை அனுபவிக்கட்டும்.’’
‘‘என்ன பைத்தியக்காரத்தனமா பேசுற நீ?’’ - வினயன் கேட்டான். அந்த இருட்டில் அவளுடைய முகத்தை அவனால் சரிவரப் பார்க்க முடியவில்லை.
‘‘நான் சொல்றது புரியலியா? தேவடியான்ற ஒருத்தி சாதாரணமானவ இல்ல. அவளோட வாழ்க்கையின் லட்சியம் என்னன்னு தெரியுமா? அயோக்கியர்களைத் தண்டிக்கிறதுக்குள்ளே கடவுளால படைக்கப்பட்டவதான் அவ. அவகிட்ட உலகம் அடிக்கடி சொல்லுற வெட்கம், மானம் எதுவுமே கிடையாது. தீராத நோய்கள்தான் அவளோட ஆயுதம். அவள் ஒரு அவதாரம்னு கூட சொல்லலாம். தண்டிக்கப்பட வேண்டியவர்களை அவள் நிச்சயமா தண்டிப்பா.’’
‘‘சரி அது இருக்கட்டும். காதல் வயப்பட்ட நீ...’’
‘‘வாழ்க்கையோட லட்சியம் என்னன்னு தெரியாம நான் இருந்தேன். எதுக்காக நான் கடவுளால் படைக்கப்பட்டிருக்கேன்றதையே இப்பத்தான் உணர்றேன்.’’
‘‘நீ என்னோட மனைவிதானே!’’
‘‘நான் பின்னாடி அதுக்கு இன்னொரு ஆளை கல்யாணம் பண்ணிட்டேன்.’’
‘‘வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிற இதயத்தைக் கொண்ட காதலன் நான்.’’
‘‘தேவடியா மேல உங்களுக்குக் காதல் இருக்கா என்ன?’’
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook