Lekha Books

A+ A A-

மனைவியின் மகன் - Page 30

manaiviyin magan

வாசல் வழியாக கறுத்து தடித்த ஒரு மனிதன் உள்ளே நுழைந்தான். அந்த மனிதனின் கறுப்பான தாடி கத்தரிக்கப்பட்டிருந்தது. அவனுடைய சிவப்பான பெரிய கண்களைப் பார்த்தால் கட்டாயம் யாரும் பயந்து விடுவார்கள். ஜானகி அம்மாவின் முகத்தைப் பார்த்தவாறு அவன் கட்டிலுக்கு அருகில் சென்றான். பத்மநாபப் பிள்ளை பயத்தில் அதிர்ந்து போய் குனிந்தவாறு நின்றிருந்தார். பேசுவதற்குக் கூட அவரால் முடியவில்லை. கோபன் எழுந்து தள்ளி நின்றான். வந்த மனிதன் கட்டிலுக்கு அருகில் சென்று சிறிது நேரம் பார்த்தவாறு நின்றான். அந்தச் சிவந்த கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவனுடைய தலை தாழ்ந்தது. ஜானகி அம்மாவின் முகத்தை அந்த மனிதனின் முகம் நெருங்கியது. ஆனால், அந்த முகங்கள் ஒரு முத்தத்தில் ஒன்று சேரவில்லை. அதற்கு முன்பே ஏதோ ஞாபகம் வந்ததைப் போல, யாரோ பிடித்து இழுப்பதைப் போல திடீரென்று அந்த ஆளின் தலை உயர்ந்தது.

ஒருவேளை தன்மீது அவளுக்கு விருப்பமில்லை என்பதை அந்த மனிதன் நினைத்திருக்கலாம். ஒரு குற்றம் செய்தாகிவிட்டது! இன்னொரு குற்றம் வேண்டாம் என்று நினைத்திருக்கலாம். என்ன காரணமோ, அவன் படுவேகமாக ஒரு கோழையைப் போல திடீரென்று மறைந்து போனான்.

ஜானகி அம்மாவின் கண்கள் திறந்ததையும், அடுத்த கணமே அது மூடியதையும் கோபன் பார்த்தான்.

‘‘அம்மா... என் அம்மா.’’

முண்டை இழுத்துக் கட்டிக் கொண்டு தூக்கத்திலிருந்து எழுந்து லலிதா அங்கே வந்தாள். அவளும் ஜானகி அம்மாவை அழைத்தாள்.

‘‘எல்லாமே போச்சு! கடைசியில அவ எதையும் சொல்லாமலே போயிட்டாளே!’’ பத்மநாபப் பிள்ளை மெதுவான குரலில் முணுமுணுத்தார்.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

பேய்

May 28, 2018

பசி

பசி

May 7, 2014

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel