
தொடர்ந்து அந்தச் செடி மண்ணுக்குள்ளிலிருந்து வெளியே வரும்வரை, அவன் தன்னுடைய சரீரத்தை பின்னோக்கி இழுத்து வைத்துக்கொண்டிருந்தான். பிடுங்கிய செடியை தரையில் மிகவும் கவனமாக, தன்னைச் சுற்றி தான் ஏற்கெனவே பிடுங்கி வைத்திருந்த செடிகளின் குவியலுடன் சேர்த்து வைத்தான். தானியக் கதிர்களுக்கு இடையே அவனுடைய பார்வை ஓடியது. ட்ஜிமோ, ஃபிலிமோன், ந்குய்யானா, முத்தம்காட்டி, டான்டேன், முத்தாம்பி- எல்லாரும் அருகிலேயே இருந்தார்கள். மாதலா அவர்களையே பார்த்தான். ஒரு நீண்ட பெரு மூச்சை வீட்டுக்கொண்டே, அவன் தன் வேலையில் மீண்டும் ஈடுபட்டான்.
தன்னுடைய வினோதமான மீனுக்கு மேலே, பசுமையான கடலின் மேற்பரப்பை ஒரு மென்மையான தென்றல் வருடிக் கொண்டு சென்றது. அது உண்டாக்கிய மென்மையான கலைகள் உடைந்து, தணிந்து நகர்ந்து, மீண்டும் உடைந்து, கடல் சிப்பிகளின் ரகசியத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தன.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook