
"சில நிமிடங்களில் இறக்கப் போகும் ஒருத்திக்கு என்ன கணவர்...! உங்களுடைய மடியில் கிடந்து நான் இறக்கப் போகிறேன்.''
"ஆனால், இறப்பதற்கு நான் விரும்பவில்லை. இந்த நாய்களுக்கு இதெல்லாம் எப்படி முடிந்தது? எல்லாரும் ஆண்மைத்தனம் சிறிதும் தொட்டுக்கூட பார்த்திராத பயந்த குணம் கொண்டவர்களாக இருந்தார்கள். கனவில்கூட நான் இப்படியெல்லாம் நடக்கும் என்று சிறிதும் நினைக்கவில்லை.'' விஸ்வம் ஒரு நீண்ட பெருமூச்சைவிட்டார்.
"என்னிடம் ஒரு துப்பாக்கி இருந்திருந்தால்...?''
"இறப்பதற்கு முன்பு என்னுடைய குழந்தைகளை ஒருமுறை பார்ப்பதற்கு முடிந்திருந்தால்...?'' கீழே பார்த்துக்கொண்டே சுசீலா சொன்னாள்: "இதோ.... அவர்கள் வந்துவிட்டார்கள். நாலா பக்கங்களிலும் இருந்து ஏறிக் கொண்டிருக்கிறார்கள்.''
ஒவ்வொரு நிமிடமும் ஏறிக் கொண்டிருந்த பல்லக்கின் உரத்த தாளம் இப்போது முற்றிலும் தாங்கிக் கொள்ள முடியாத வகையில் இருந்தது. மக்கள் கூட்டம் ஆரவாரம் எழுப்பியவாறு அருகில் வருவதைப் பார்த்ததும், தங்களுக்குக் கிடைக்கப் போவதை கைகளை நீட்டி வரவேற்பதைத் தவிர இருவருக்கும் வேறு எந்தவொரு வழியும் இல்லை. உயிர் இரண்டாக இருந்தாலும், ஒரே உடல் என்பதைப்போல
விஸ்வமும் சுசீலாவும் பாறையின் மறைவில் கட்டிப்பிடித்துக் கொண்டு கிடந்தார்கள். பாறையின்மீது கோபத்துடன் வந்து கொண்டிருந்தவர்களின் நிழல்கள் விழுந்து கொண்டிருந்தன.
சூரியனின் சிவப்பு நிறம் அடர்த்தியான மஞ்சள் நிறமாக ஆனது. இருள் எப்போதோ வந்துவிட்டிருந்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook