
அல்ஸா மால் காம்ப்ளெக்ஸ் வளாகத்தில் தன் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றான் சுதாகர். அவனுக்குள் கோப எரிமலை வெடித்துக் கொண்டிருந்தது.
'இந்த சரிதா என்னை என்ன 'கேனப்பயல்'ன்னு நினைச்சுக்கிட்டிருக்காளா? பணம் கொண்டு வந்து தரேன்னு சொல்லி ரெண்டு தடவை ஏமாத்திட்டா. ஒரு பொம்பளைக்கு இவ்ளவு 'தில்' இருந்தா... எனக்கு எவ்ளவு இருக்கும்?' தன் மொபைலை எடுத்தான். சரிதாவின் நம்பர்களை அழுத்தினான்.
''ஹலோ...'' மறுமுனையில் சரிதாவின் குரல்.
''என்ன? கிளம்பியாச்சா?''
''வர்றதுக்குள்ள என்ன அவசரம்? வந்துடறேன்...''
''பணத்தோடன்னு சொல்லு...''
''ஆமா... ஆமா...'' சரிதா, மொபைலில் தொடர்பைத் துண்டித்தாள்.
'இவ மட்டும் இன்னிக்கு பணத்தோட வரலைன்னா... என்ன பண்றேன் பாரு...?'
முப்பது நிமிடங்களில் சரிதா அங்கே வந்தாள். ஒரு பெரிய பையை அவனிடம் கொடுத்தாள். அந்தப் பை நிறைய... கற்றை கற்றையாகப் பணமும் நிறைய நகைகளும் இருந்தன.
''நீ கேட்டதை நான் குடுத்துட்டேன். நான் கேட்டது?...''
''காரியத்துல குறியாத்தான் இருக்க?''
''சூடு கண்ட பூனை நான். சும்மா விடுவேனா?''
சுதாகர், தன்னிடம் இருந்த ஒரு சிறிய பையை அவனிடம் கொடுத்தான்.
''எல்லாம் இருக்கா?''
''வேணும்ன்னா பார்த்துக்க...''
''கொஞ்சம் வெயிட் பண்ணு. இதோ வந்துடறேன்'' என்ற சரிதா, அங்கே இருந்த டாய்லெட்டிற்கு சென்றாள். சுதாகர் கொடுத்த பையைப் பிரித்தாள். அதனுள் சரிதா, அவனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும், சரிதா அவனுக்கு எழுதிய கடிதங்களும் இருந்தன.
அவற்றை பைக்குள்ளேயே வைத்துவிட்டு, பையுடன் அங்கிருந்து வெளியேறி சுதாகர் இருந்த இடத்திற்குப் போனாள்.
''நீ கிளம்பலாம்... இனி என்னோட வாழ்க்கையில நீ குறுக்கே வரக்கூடாது. என்னோட மொபைல் நம்பரை அழிச்சுடு...''
''அழிக்கலைன்னா?!''
''என்னோட நம்பரை மாத்திடுவேன்...''
''செம க்ரிமினல் அறிவு உனக்கு...''
''உனக்கா? எனக்கா? சரி... சரி... இனி உன்னோட எனக்கென்ன பேச்சு?'' சரிதா அங்கிருந்து வெளியேறினாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook