Lekha Books

A+ A A-

வருவேன் நான் உனது... - Page 4

எங்க அம்மா இறந்த பிறகு அவங்க மேல வச்சிருந்த அன்பையும் சேர்த்து என் மேல வச்சு, என்னை ஒரு இளவரசி போல வளர்த்தார் எங்க அப்பா. என்கிட்ட எதையும் அன்பா, சாந்தமாத்தான் அப்பா பேசவார். எனக்காக எதையும் செய்யக்கூடிய இதயம் கொண்டவர் எங்க அப்பா. எனக்கு நல்ல கணவர் அமைஞ்சு, நான் நல்லபடியா வாழணுங்கறதுதான் அவருக்கு இலட்சியமா இருந்துச்சு. உங்களை அவர் தேர்ந்தெடுத்தப்புறம் கூடப் பல பேர்கிட்ட உங்களைப் பத்தி விசாரிச்சார். நீங்கதான் எனக்குன்னு அப்பா முடிவு பண்ணினதில் இருந்து, உங்களை எனக்கு ரொம்பப் புடிச்சிருச்சு. உங்களை முதல்ல போட்டோவுல பார்த்தப்பக் கூட என்னை எந்த உணர்வும் பாதிக்கலை. நீங்க, உங்க அம்மா, அப்பா கூடயும், நான் என் அப்பா கூடயும் வந்து ‘சம்பாரா’- ரெஸ்டாரண்ட்ல சந்திச்சு நம்ம கல்யாணம் பத்தி பேசினாங்கள்ல்ல? அப்பதான் உங்க அழகான உருவம் என்னை ‘டிஸ்டர்ப்’ பண்ணுச்சு. உங்க பேச்சுல இருந்து உங்க திறமைகளைப் புரிஞ்சுக்கிட்டேன். உங்க மேல அன்பும் மதிப்பும் உருவாயிருச்சு. நான் உங்க மேல என் உயிரையே வச்சிருக்கேன். ஐ லவ் யூ.”

அவளது கைவிரல்களை மென்மையாகப் பிடித்தான் ஏகாந்த். உள்ளமும் உடலும் சிலிர்த்துப் போன மிருதுளாவின் உணர்வுகளை, கிஃப்ட் பார்சல்கள் பிரித்துப் போடப்பட்டிருந்த பேப்பர் குவியல்கள் அருகே கிடந்த மிகச் சிறிய கிஃப்ட் பார்சல் கலைத்தது.

“என்னங்க இது, ஒரு கிஃப்ட் பார்சலைப் பிரிக்காமலே விட்டிருக்கோம்!” சொல்லியபடியே அதை எடுத்தாள். அதில் ஏகாந்த் என்று எழுதப்பட்டிருந்தது. ‘அனுப்பியவர் பெயர் இருக்குமே’ என்ற எண்ணத்தில் பின்பக்கம் திருப்பிப் பார்த்தாள். அனுப்பியவரின் பெயர் இல்லை. பார்சலைப் பிரித்தாள். அதனுள் இன்னொரு பார்சல் இருந்தது. மறுபடி பிரிக்க மறுபடியும் ஓர் பார்சல்.

“என்ன மிருதுளா, பிரிக்கப் பிரிக்க வெறும் பார்சலாவே வந்துட்டிருக்கு?!” ஏகாந்த் கேட்டான்.

“யாரோ விளையாட்டுக்கு இப்படிப் பண்ணி இருக்காங்க. கடைசிப் பார்சல் வரைக்கும் பிரிச்சுத்தான் பார்த்துரலாமே. எப்படியும் அனுப்பினவங்க பேர் கடைசியில இருக்கும்.” சொல்லிக் கொண்டே பிரித்தாள். கடைசியாக அதற்குள் மிகச் சிறிய சிவப்புக் கவர் இருந்தது. அந்தக் கவரினுள் ஒரு ஆடியோ ஸி.டி. இருந்தது. அதனுடன் ஒரு வெள்ளைப் பேப்பர் இருந்தது. அதில் எழுத்துக்கள் தெரிந்தன. அவ்வெழுத்துக்கள் கம்ப்யூட்டர் டைப் செய்யப்பட்டிருந்தன.

மிருதுளா படித்தாள்.

‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே... ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே...!’ அந்தப் பாடல் வரிகளைச் சுற்றிலும் சிகப்பு ரோஜாக்கள் வரையப்பட்டிருந்தன. கம்ப்யூட்டர் டைப் செய்யப்பட்டிருந்த எழுத்துக்கள் கூடச் சிகப்பு வண்ணத்தில் காணப்பட்டன. அதன் கீழே வேறு எதுவும் டைப் செய்யப்படவில்லை. கையெழுத்தும் இல்லை.

“இந்த ஸி.டி.யில என்ன இருக்குன்னு பார்த்துடலாம்.” மிருதுளா, அவளது ஆடியோ ப்ளேயரில் அந்த ஸிடியைப் போட்டு, ப்ளேயரை இயக்கினாள். சில வரிகள். வாத்திய இசை முடிந்தது ‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே’ என்ற பழைய பாடல் ஒலித்தது.

“என்னங்க இது... யாரோ இந்தப் பாட்டை ரெக்கார்ட் பண்ணி அனுப்பியிருக்காங்க?” என்று கேட்ட மிருதுளா, ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பண்ணிப் போட்டாள். மறுபடியும் அதே ‘வருவேன் நான் உனது’ பாடல் ஒலித்தது. மீண்டும் ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பண்ணிப் போட்டாள். அப்பொழுதும் கூட அந்தப் பாடல் மட்டும் திரும்பத் திரும்ப ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

“என்னங்க இது?! யாரோ இந்தப் பாட்டை ஸி.டி. முழுசும் ரெக்கார்ட் பண்ணி அனுப்பி இருக்காங்க! இது இருந்த கவரு சிகப்பு. உள்ளே இருக்கற எழுத்துக்களும் சிகப்புக் கலர்ல இருக்கு. இதில வரைஞ்சிருக்கற ரோஜாக்களும் சிகப்பு ரோஜாவா இருக்கு?!”

“உனக்குத்தானே பழைய பழைய பாடல்கள்னா பிடிக்கும். அதனால யாரோ விளையாட்டா இப்படி அனுப்பி இருக்காங்க. இதெல்லாம் உன் குறும்புக்கார ஃப்ரெண்ட்ஸாதான் இருக்கும்...”

“இது குறும்புக்காக வரைஞ்ச மாதிரி இல்லை. குரூரமான எண்ணங்களைக் குறிக்கற மாதிரி, எல்லாமே ரத்தக்கலர்ல சிகப்பா இருக்கு. அது மட்டும் இல்லை. என்னோட ஃப்ரெண்ட்ஸ் அனுப்பி இருந்தா என் பெயருக்குத்தானே அனுப்பி இருப்பாங்க? இது உங்களுக்கு வந்த கிஃப்ட் பார்சல்...”

“என்ன?... எனக்கா?”

“ஆமா.” கிஃப்ட் பார்சலின் மேல் கவரை ஏகாந்த்திடம் காண்பித்தாள் மிருதுளா.

படித்துப் பார்த்தான் ஏகாந்த்.

“எனக்கு யார் இபப்டி எழுதி அனுப்பி இருப்பாங்க? இந்தப் பாட்டே எனக்குத் தெரியாது...”

“இந்தப் பாட்டு பழைய இசை அமைப்பாளர் டி.ஆர். பாப்பா இசை அமைச்ச பாட்டு. ரொம்ப நல்ல பாட்டு. அர்த்தமுள்ள பாட்டு. அர்த்தத்தோடதான் யாரோ உங்களுக்கு அனுப்பி இருக்காங்க...” கூறிய மிருதுளாவின் பார்வை ஏகாந்த்தை ஊடுருவியது.

“என்ன அர்த்தமோ... எனக்கு ஒண்ணும் புரியலை மிருது.”

“எனக்குப் புரியுதுங்க. உங்களுக்காக, உங்களைப் பத்தி நல்லா தெரிஞ்சவங்க, உங்களுக்கு வேண்டியவங்கதான் அனுப்பியிருக்காங்க...”

“எனக்கு வேண்டியவங்களா இருந்தா நிச்சயமா இந்த ஸி.டி.யெல்லாம் அனுப்பி இருக்க மாட்டாங்க. ஏன்னா... ஏதோ ரேடியோவுல போடற பாட்டு... தானா என் காதில் விழுந்தா ரசிப்பேனே தவிர, ஆடியோ ஸி.டி. வாங்கறதோ, ரெக்கார்ட் பண்ற பழக்கமோ எனக்கு கிடையாது.”

“நம்ப ரெண்டு பேருக்குள்ளயும் எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது. ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்கணும். திறந்த புத்தகமா இருக்கணும். நம்ம இரண்டு பேருக்கும் இடையில ஒரு காற்றுக் கூட ரகசியமா வீசக் கூடாது. என் மேல நீங்க வச்சிருக்கற அன்பு உண்மையான அன்பா இருக்கணும்... இதுதான் ரொம்ப முக்கியம். இப்ப சொல்லுங்க. இதுக்கு முன்னால யாரையாவது காதலிச்சிருக்கீங்களா? நீங்க உண்மையைச் சொல்லணும். எதுவா இருந்தாலும் நான் ஏத்துப்பேன். கடந்த காலத்தைக் கடந்த காலமாகவே நினைச்சுப்பேன். அதை நினைச்சு உங்களை வெறுத்துட மாட்டேன். உங்க அத்தை பொண்ணு வருணாவை நீங்க விரும்பலையா?”

“நிச்சயமா நீ நினைக்கற மாதிரி வருணாவையோ, வேற யாரையுமோ நான் காதலிக்கலை. வருணாவோட அப்பா திடீர்னு ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். அவர் இறந்ததுக்கப்புறம் எங்க அப்பாதான் எங்க அத்தைக்கும், வருணாவுக்கும் அடைக்கலம் குடுத்தாரு. ஏறக்குறையப் பத்து வருஷம் எங்க வீட்டுலதான் அகல்யா அத்தையும், வருணாவும் இருந்தாங்க. சின்ன வயசுல இருந்தே ஒரே வீட்ல வளர்ந்ததுனால பொண்ணு’ங்கற ஆசை வரலை. அன்பு மட்டும்தான். காலேஜ்ல படிக்கும்போது அழகான பொண்ணுங்களை ரசிக்கறது...

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel