Lekha Books

A+ A A-

முள் மேல் மனசு - Page 23

Mull mal manasu

“அவனோட பைக் மேல ஒரு லாரி மோதி அந்த ஸ்பாட்லயே இறந்துட்டானாம். இதுக்கான ரிக்கார்ட்ஸ் எல்லாம் செக் பண்ணிட்டேன்.”

“அப்போ நீங்க இந்தக் கடிதங்களை எழுதினதாக சந்தேகப்பட்ட நபர், குற்றவாளி இல்லைன்னு சொல்றீங்களா?”

“ஆமா யாதவ். குற்றவாளி அவன் இல்லை. உங்களோட ரிப்போர்ட்டுக்கு நன்றி. தேவைப்பட்டா மறுபடியும் கூப்பிடறேன்.”

“ஓ.கே. இன்ஸ்பெக்டர். விஷ் யூ ஆல் த பெஸ்ட்” விடை பெற்று, தன் பைக்கில் ஏறி அமர்ந்த யாதவ், பைக்கிற்கு உதை கொடுத்துக் கிளம்பினார்.

16

தனின் பக்கத்து பங்களா பாலு, ரகுநாத்தைக் கண்டதும் டீச்சரைப் பார்த்த எல்.கே.ஜி. பையனாய் மருண்டான்.

“மிஸ்டர் பாலு, தொழில் போட்டி, பொறாமை காரணமா... மதனைக் கொலை செய்ய திட்டம் போட்டு, காருக்குள்ள குண்டுகள் வைக்க ஏற்பாடு பண்ணி இருக்கீங்க. அந்த கார்ல மதன் ஏறிப் போவான்னு எதிர்பார்த்தீங்க. ஆனா அவனோட மனைவி ஏறிப் போயிருக்காங்க. உண்மைகளை சொல்லிட்டா உங்களுக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது.”

“சொல்லிடறேன் இன்ஸ்பெக்டர். நான் மதனைக் கொலை செய்ய திட்டம் போட்டது உண்மை. அதுக்காக ஒரு ஆளை ஏற்பாடு பண்ணினதும் உண்மை. ஆனா அந்த திட்டத்தை நான் ஆரம்பிக்கவே இல்லை. காருக்குள்ள குண்டுகள் வெடிக்க ஏற்பாடு செஞ்சது நான் இல்லை. அதுக்கும் எனக்கும் ஒரு துளி சம்பந்தமும் கிடையாது இன்ஸ்பெக்டர். பொறாமை உணர்வுல அவனைக் கொலை செய்யணும்னு திட்டம் போட்டதுக்கே எனக்கு தண்டனைக் கிடைச்சுடுச்சு. ஒரே ஒரு நாள் ராத்திரி... மதனோட பங்களா காம்பவுண்டுக்குள்ள போய், அவன் பங்களாவுக்குள்ள முன் பக்கமா நுழையறது எப்பிடி, பின்பக்க வாசலுக்கு வழி எப்படின்னு தெரிஞ்சுக்கறதுக்காக போனேன்.”

“எதுக்காக?”

“நான் ஏற்பாடு செஞ்ச ஆளுக்கு அடையாளம் காட்டறதுக்கு. ஆரம்பத்துல இருந்தே எங்க ரெண்டு பேருக்கும் பகை இருந்ததுனால அவன் வீட்டுக்குள்ள நான் போனது கிடையாது. அதனாலதான் ஒரு நாள் ராத்திரி சுவர் ஏறிக் குதிச்சு போனேன். இதைத் தவிர நான் வேறு எதுவுமே செய்யலை இன்ஸ்பெக்டர். ப்ராமிஸ். என்னை நம்புங்க...” பயத்தில் அவனது உடம்பு முழுக்க நடுங்கியது.

அவன் பேசியதை எல்லாம் ரகுநாத்தின் செல்போனுக்குள் இருந்த ரகசிய ரெக்கார்டர் தனக்குள் பதிவு செய்து கொண்டது. “கொலை முயற்சிக்கும் தண்டனை உண்டு. போலீஸ் உங்க மேல கேஸ் பதிவு செய்யும். சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது” ரகுநாத் கிளம்பினார்.

“மதனோட மனைவி பத்மினி கொலையான தேதியும், கணேஷ் இறந்து போன தேதியும் வேறுபடுது. ஸோ, குற்றவாளி லிஸ்ட்ல இருந்து கணேஷ் நீக்கப்படுறான். அடுத்தது சுந்தர். பத்மினியைக் காதலித்தவன். அவனைப் பற்றி சேலத்துல விசாரிக்க சொல்லி இருந்தேன். என்ன ஆச்சுன்னு தெரியலேயே?” யோசித்தவரை ஸெல்ஃபோன் அழைத்தது.

“ஹலோ ரகுநாத் ஹியர்.”

“ஸார், சேலம் ஜி2. போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து இன்ஸ்பெக்டர் குரு பேசறேன். நீங்க சொன்ன தகவல்கள்படி சுந்தர்ங்கற ஆளை ட்ரேஸ் பண்ணோம் ஸார்.”

“ஆள் கிடைச்சுட்டானா?”

“இல்லை ஸார். அவன் ஈரோடுல ஒரு பெரிய பணக்காரரோட பொண்ணைக் காதலிக்கறதா சொல்லி... அந்தப் பொண்ணை இழத்துக்கிட்டு ஓடிட்டானாம் ஸார். ஏகப்பட்ட பணம், நகைகளோட அந்தப் பொண்ணும் அவன் கூட ஓடிப் போயிட்டாளாம். ஈரோடு ஸ்டேஷன்ல இந்தக் கேஸ் ரெக்கார்ட் ஆகி இருக்கு. அவனை இப்ப ஊட்டியில பிடிச்சுட்டாங்க ஸார்.”

“அப்பிடியா குரு? இங்கே மதனோட மனைவி கொலை முயற்சி நடந்தப்ப அந்த சுந்தர் எங்கே இருந்தான். அவனுக்கு இந்தக் கேஸ்ல சம்பந்தம் இருக்கா என்னங்கறதைப் பத்தி விசாரிங்க.”

“ஊட்டி போலீஸ்ல அவனைக் கைது பண்ணி... கூப்பிட்டுக்கிட்டு வராங்க ஸார். வந்ததும் டீடெய்லா விசாரிச்சு... மறுபடியும் உங்க செல்போனுக்குக் கூப்பிடறேன்.”

“ஓ.கே. குரு தாங்க்யூ.”

மற்ற விசாரணைகளை ரகுநாத் ஒரு பக்கம் நடத்திக் கொண்டிருந்தார். ஹாஸ்பிடலில் மருத்துவக் குழுவினர் பத்மினியைப் பிழைக்க வைப்பதற்காக போராடிக் கொண்டிருக்க, உயிர்ப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பத்மினிக்கு நினைவு திரும்பிய தகவலை ரகுநாத்துக்குத் தெரிவித்தனர்.

தகவல் தெரிந்ததும் ரகுநாத் உஷார் ஆனார். மருத்துவமனை தலைமை டாக்டரை போன் மூலம் தொடர்பு கொண்டார்.

“ஹலோ ரகுநாத் ஹியர். டாக்டர் ராமகிருஷ்ணனா?”

“போலீஸ் கேஸ், பத்மினிக்கு நினைவு திரும்பி இருக்கற விஷயத்தை மதனுக்கு சொல்லிட்டீங்களா?”

“உங்களுக்கு சொன்னதும்... மதனுக்கும் சொல்லிட்டோம் ஸார். அவர் இப்பக் கிளம்பி வர்றதா சொன்னார்.”

“மை காட்! ஒரு ஹெல்ப் பண்ணுங்க டாக்டர். நான் வர்ற வரைக்கும் பத்மினியை பார்க்க மதனை அனுமதிக்காதீங்க.  இதோ நான் அங்கே வந்துடறேன்.”

“ஓ.கே. ரகுநாத் நீங்க வாங்க.”

“பத்மினியோட நிலைமை?”

“முகம் முழுக்க ஏற்பட்டுள்ள காயங்களுக்கு பாண்டேஜ். ஒரு காது போச்சு. ஒரு கண்ணும் கூட, உடம்பு உள்ள பல எலும்புகள் நொறுங்கிடுச்சு. அவங்களுக்கு நினைவு மட்டும்தான் திரும்பி இருக்கு. உயிர் பிழைச்சாலும் கூட ஊனமுற்ற ஒரு குழந்தை போலத்தான் அவங்க வாழ முடியும். இருபத்திநாலு மணி நேரமும் ஒருத்தரோட உதவி தேவை.”

“த்சு... த்சு... பாவம்... ஓ.கே. டாக்டர். நான் இப்ப அங்க வரேன்.” ரகுநாத், ஜீப்பில் போனால் தாமதமாகி விடும் என்று தன் பைக்கில் வேகமாய் பறந்தார்.

17

ருத்துவமனைக்குள் பரபரப்பாக ஓடி, பத்மினியின் அறைக்குள் போனார். மதன் வந்திருக்கவில்லை. ரகசிய டேப் ரெக்கார்டரை மறைவான ஒரு பகுதியில் பொருத்தினார். குண்டூசி விழும் ஒலியைக் கூட துல்லியமாகப் பதிவு செய்யும் சக்தி பெற்றது அந்த ரெக்கார்டர்.

அறையை விட்டு வெளியே வந்தார். தலைமை டாக்டர் ராமகிருஷ்ணனின் அறையை நோக்கி நடந்தார்.

அவர் போன சில நிமிடங்களில் மதன் வந்தான். தலைமை நர்ஸ் அவனை உள்ளே அனுமதித்தார்.

“ஸார்... சீக்கிரமா வந்துடுங்க. அதிகமா பேச்சுக் குடுக்காதீங்க.”

“சரி.”

படுக்கையில வலது கண்ணும், உதடுகளும் தவிர மற்ற இடங்கள் முழுக்க பாண்டேஜ் மூடி இருக்க, ட்யூப்கள் செருகப்பட்டிருந்த பத்மினி கிடந்த நிலை, அவன் மனதை உருகியது. கண்கள் கலங்கியது.

அவள் தலையருகே குனிந்தாள்.

“பத்மினி” கூப்பிட்டான்.

அவனது அழைப்பிற்கு வெளியில் தெரிந்த வலது கண் மட்டுமே அசைந்தது.

“பத்மினி உனக்கு ஒரு பிரச்சினைன்னா என்கிட்ட சொல்லக் கூடாதா? நான் உனக்கு உதவி செஞ்சிருக்க மாட்டேனா?”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel