Lekha Books

A+ A A-

திலகன் என்ற மகாதிலகம் - Page 11

thilakan endra magaathilagam

திலகன் புகழ் பாடும் சுந்தர் சி., பார்த்திபன், ‘ஜித்தன்’ ரமேஷ்

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

தமிழில் : சுரா

ரணத்தைத் தழுவிய நடிகர் திலகன் (77) நிறைய தமிழ் படங்களில் நடிக்காமல் போயிருக்கலாம். ஆனால், தமிழ் திரைப்பட ரசிகர்களிடம் அவர் உண்டாக்கியிருக்கும் பாதிப்பு, அவர்களின் ஞாபகங்களில் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும்.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்த மிகச் சிறந்த நடிகரை தமிழ்ப் படவுலகிற்கு தன்னுடைய ‘மேட்டுக்குடி’ (1996) திரைப்படத்தின் மூலம் கொண்டு வந்த இயக்குனர் சுந்தர் சி ‘அந்தப் படத்தில் இடம் பெற்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தை எழுதும்போதே, திலகனைத் தவிர வேறு யாருமே என்னுடைய ஞாபகத்தில் வரவில்லை. அந்தப் படத்தில் மொத்தம் 12 பாசிட்டிவ் கதாபாத்திரங்கள் இருந்தன. இருந்த ஒரே ஒரு நெகட்டிவ் கதாபாத்திரம்தான் அவர்கள் எல்லோருக்கும் ஈடுகொடுக்க வேண்டும். திலகன் சார் அதைச் செய்தார்’ என்றார்.

அந்த மிகச் சிறந்த மலையாள நடிகர் இப்போதும் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த ‘சத்ரியன்’ (1990) படத்தில் ஏற்று நடித்த அருமைநாயகம் என்ற கதாபாத்திரத்திற்காக எல்லோராலும் நினைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். பிறகு அவர் நடித்த தமிழ் படங்கள் நீ வேணும்டா செல்லம் (2006), அலிபாபா (2008).

‘திலகன் ஐந்தரை அடி உயரமே உள்ள மனிதராக இருந்தாலும், திரையில் தோன்றும்போது, அவர் மற்ற எல்லோரையும் ஆட்சி செய்ய ஆரம்பித்து விடுவார்’ என்று கூறும் சுந்தர் சி. மேலும் கூறுகிறார்: ‘அவருடைய தோற்றத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்டாக இருப்பது அவருக்கென்றே இருக்கக் கூடிய தனித்துவம் கொண்ட குரல்தான். சில தமிழ் படங்களில் அவருக்கு வேறு யாரோ குரல் தந்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தபோது, மிகவும் வருத்தமாக இருந்தது. படங்களில் நடிக்கும்போது, அவர் காட்டிய ஒத்துழைப்பை கட்டாயம் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். படப்பிடிப்பு நேரம் சற்று நீண்டு சென்றாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அதை ஏற்றுக் கொண்டு அவர் உடனடியாக ஒத்துழைத்து நடிப்பார். அவர் ஒரு பிறவி நடிகர்... அவர் இயக்குனர்களை சந்தோஷப்படுத்தக் கூடியவர். இன்னும் சொல்லப் போனால்- அவர் நடிப்பதில்லை. அவர் அவராகவே இருப்பார். இயக்குனர்கள் மனதில் என்ன கற்பனை பண்ணி வைத்திருக்கிறார்களோ, அதை மனதில் வாங்கிக் கொண்டு, இரண்டு மடங்கு அழுத்தம் கொடுத்து அதை வெளிப்படுத்தக் கூடியவர்.

அவரை அதிகமான படங்களில் பயன்படுத்தாமல் போய்விட்டது உண்மையிலேயே தமிழ்த் திரையுலகம் செய்த தவறுதான்.’

‘அரவிந்தன்’ (1997) படத்தில் திலகனுடன் நடித்திருக்கும் பார்த்திபன், ‘மறைந்த அந்த மாபெரும் நடிகரிடமிருந்துதான் தொடர்ந்து கடுமையாக உழைப்பது எப்படி என்பதை நான் கற்றுக் கொண்டேன்’ என்று கூறுகிறார்.

பார்த்திபன் மேலும் கூறுகிறார்: ‘நான் சமீபத்தில் கேரளத்திற்குச் சென்றிருந்தபோது, திலகனின் மகன்களில் ஒருவரிடம் அவருடைய தந்தையின் உடல் நலத்தைப் பற்றி விசாரித்தேன். கலைஞர்களைப் பொறுத்த வரையில், மரணம் என்பது உடல் ரீதியானது மட்டுமே. திலகன் சார் படவுலகிற்கு ஆற்றியிருக்கும் பங்கு காலத்தைக் கடந்து நிற்கும்.’

‘ஜித்தன்’ படத்தின் மூலம் மக்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் ரமேஷ், ‘நீ வேணும்டா செல்லம்’ படத்தில் திலகனுடன் இணைந்து நடித்திருக்கிறார். ‘நாங்கள் அந்தப் படத்தின் படிப்பிடிப்பை நடத்தியபோது, திலகன் சாரால் அதிகமாக நடக்க முடியாது. ஆனால், அவரால் எந்த அளவிற்கு சிறப்பாகச் செய்ய முடியுமோ, அந்த அளவிற்கு அந்த பாத்திரத்தில் சிறப்பான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். படப்பிடிப்பு முடிந்தபிறகு, அவர் எங்களுடன் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு, மிகவும் சாதாரணமாக படங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார். அவரிடமிருந்து நான் எவ்வளவோ விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறுகிறார் ரமேஷ்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel