Lekha Books

A+ A A-

ஆரூடம் - Page 3

aaruudam

இந்திரா:   (மனதில் உண்டான வெறுப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் சிரிப்பை வேண்டுமென்று வரவழைத்துக் கொண்டு) சமையல் வேலைகளை முடிச்ச பிறகு, நாம பழைய கதைகளை பேசிக்கிட்டு இருக்கலாமே!

அதில் மறைந்திருக்கும் கிண்டலைப் புரிந்து கொள்ளாத நாணியம்மா:

“மசால் அரைச்சாச்சு. காய்கறியும் நறுக்கியாச்சு. பத்தே நிமிஷம்தான்...”

அவள் உள்ளே சென்றதும், தற்காலிகமாக எடுத்து அணிந்த முகமூடியான சிரிப்பை நீக்கிவிட்டு இந்திரா:

“இங்கே பத்தடின்னு சொன்னா ரெண்டு கிலோ மீட்டர்னு அர்த்தம். பத்து நிமிஷம்னா எவ்வளவு நேரமோ?

வர்மா தேநீர் டம்ளரைக் கீழே வைத்துவிட்டு அவளைப் பார்த்து புன்னகைக்கிறான்.

உண்ணி உள்ளேயிருந்து ஓடிவந்தவாறு:

“ஆத்துல முதலை இருக்குமா அப்பா?”

வர்மா, ‘இருக்காது’ என்று தலையை ஆட்டுகிறான்.

இந்திரா:   உள்ளே ஓடி விளையாடாதே... எங்காவது மோதி கீழே விழுந்துறப் போற... கேர்ஃபுல் (வர்மாவிடம்) நாணியம்மா முன்னாடி இருந்தே இங்கே வேலை பார்க்குறாப்லயா?

வர்மா:    ம்... அந்தக் காலத்துல நெறைய வேலைக்காரங்க இருந்தாங்க.

இந்திரா:   அவுங்களோட பசங்களுக்கும் இங்கேதான் வேலையா?

அதைக் காதில் வாங்காதது மாதிரி கையை நீட்டி மகனைப் பிடித்து:

“உண்ணி குளிக்கட்டும். மத்தியானம் இவன் ஒண்ணும் சாப்பிடலியே! சீக்கிரம் இவனுக்குச் சாப்பாடு தரச் சொல்லு”

இந்திரா:   மத்தியானம் யாரு சாப்பிட்டது? ஆர்டர் பண்ணினது ஒண்ணு. கொண்டு வந்தது இன்னொண்ணு. யூஸ்லெஸ் ஃபெல்லோஸ்.

கோபாலன் நாயரின் குரல்:

“தாசப்பா...”

உள்ளேயிருந்து தலையை நீட்டி பார்க்கும் கோபாலன் நாயர்:

“கோவிந்தனை கடைக்கு அனுப்புறேன். தாசப்பா... உங்களுக்கு சிகரெட்டு, தீப்பெட்டி ஏதாவது வேணுமா?

வர்மா:    வேண்டாம்.

கோபாலன் நாயர்:    (இந்திராவிடம்) குழந்தைக்கு?

இந்திரா ‘எதுவுமே வேண்டாம்’ என்று தலையை ஆட்டுகிறாள்.

உண்ணி:  அந்த ஆளு எப்படிப்பா உங்களைக் கூப்பிட்டாரு?

வர்மா:    உன் வயசுல நான் இருக்குறப்போ, இங்கே உள்ள ஆளுங்க என்னை அப்படித்தான் கூப்பிடுவாங்க.

உண்ணிக்கு அது புதுமையான ஒரு விஷயமாக இருக்கிறது.

உண்ணி:  தாசப்பன்... அம்மா மிஸஸ் குழந்தை வர்மா.... மிஸஸ் குழந்தை!

இந்திரா:   (கொஞ்சம் கூட விரும்பாமல்) இனி பேரு மாத்துறது ஒண்ணுதான் பாக்கி. மற்றதெல்லாம் மாத்தியாச்சு. (கட்டளையிடும் குரலில்) கோ... வாஷ் அண்ட் சேஞ்ச் யுவர் ட்ரெஸ்....

உண்ணி சமையலறைப் பக்கம் போகிறான்.

6

மையலறைப் பகுதியில் கையையும் காலையும் முகத்தையும் கழுவிய உண்ணியின் உடம்பைத் துடைக்கிறாள் நாணியம்மா.

நாணியம்மா:    (மெதுவான குரலில்) அப்போ... அப்பா இனிமேல் திரும்பிப் போறதா இல்ல?

உண்ணி:  ம்... ம்...

தேவகியம்மா அப்போது அங்கு வருகிறாள். தேவகி நாணியம்மாவிடம்:

ராஜா மாதிரியான உத்தியோகம்னு பசங்களோட அப்பா சொன்னாரு. முன்னாடி கூட ஐயா இப்படித்தான் ஒவ்வொரு நேரத்துலயும் ஒரு மாதிரி பிடிவாதம் பிடிப்பாரு. குழந்தைக்கு இந்த இடம் ரொம்பவும் பிடிக்கும். பலாப்பழம் மாம்பழம் எல்லாம் இங்கே இருக்கு...

நாணியம்மா:    வேலையை விடுறப்போ ஒரு பெரிய தொகை கிடைக்கும்ல?

இந்திரா கதவிற்கப்பால் வந்து நின்று:

ராஜேஷ், எல்லாம் முடிஞ்சிருச்சா? அவனுக்கு எதுவுமே தெரியாது. உங்களுக்கு என்ன தெரியணுமோ, அதை நான் சொல்றேன் போதுமா?

தேவகியம்மா நாணியம்மாவை அர்த்தம் நிரம்பிய பார்வையுடன் பார்த்தவாறு உள்ளே போகிறாள்.

7

வீட்டின் முற்றம்.

வர்மா வெறுமனே உலாத்திக் கொண்டிருக்கிறான். அவனுடன் கோபாலன் நாயர்.

கோபாலன் நாயர்:    அவங்க எப்படி சம்மதிச்சாங்க?

வர்மா:    ம்... ரிட்டையர் ஆனபிறகு இங்கேதான் எப்படியும் வரணும்? வயசாகிறவரை காத்திருக்காம கொஞ்சம் சீக்கிரம் வந்தாச்சு. அவ்வளவுதான்.

ஆடைகளை மாற்றிய உண்ணியும் இந்திராவும் அங்கு வருகிறார்கள். இந்திரா குளித்துவிட்டு புடவை மாற்றியிருக்கிறாள்.

இந்திரா:   அந்த பாத்ரூம் கதவுக்கு தாழ்ப்பாள் இல்ல...

கோபாலன் நாயர்:    ஆசாரியை நாளைக்கு வரச் சொல்றேன். குளத்துல நெறைய தண்ணி இருக்கு. யாரும் பார்க்காம குளிக்கலாம்.

இந்திரா:   (செயற்கையான சிரிப்பை வரவழைத்துக் கொண்டு) நல்ல காத்து... நல்ல தண்ணி... இது எவ்வளவு பெரிய விஷயம்! பெரிய சம்பளத்தையும், ஏ க்ளாஸ் ஃப்ளாட்டையும் விட்டுட்டு இங்கே வர்றோம்னா சும்மாவா?

வர்மாவைப் பார்க்கிறாள். வர்மாவின் முகத்தில் எந்தவித உணர்ச்சி வேறுபாடுமில்லை.

கோபாலன் நாயர்:    நான் தாசப்பன்கிட்ட சொல்வேன்- என்ன இருந்தாலும் ஒவ்வொரு மாசமும் சம்பளத்தை எண்ணி வாங்குறதுன்றது லட்சுமி கடாட்சமான ஒண்ணுதான்.

இந்திரா:   (கேலியுடன்) லட்சுமி கடாட்சம்... ஆனா, அதுவே ஒருநாள் பிடிக்காமப் போறப்போ, வேலையையே ராஜினாமா பண்றதைத் தவிர வேற வழி? என்ன இருந்தாலும் நமக்கு ஆரோக்கியம்தானே முக்கியம்? பிறகு... (மிகவும் கவனமாக வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து - மெதுவாக) காலையில எழுந்து ஆஃபீஸுக்கு வேலைக்குப் போறதுன்றது ஒரு விதத்துல வேஷம் போடுற மாதிரி இல்லியா? அந்த ஆஃபீஸ் வேலை நடிப்பை விட மோசமானது. அதுதான் கஷ்டமே! மனசுல சந்தோஷம் இல்லைன்னா எது இருந்து என்ன பிரயோஜனம்? சொல்லுங்க...

வர்மா அமைதியாக இருக்கிறான்.

கோபாலன் நாயர்:    மனசுல சந்தோஷம். அதுதான் எல்லாத்தையும்விட முக்கியம். (வர்மாவிடம்) இப்பவும் கம்பெனி வெளிநாட்டுக்காரங்க கையிலதானே இருக்கு?

இந்திரா, வர்மா பதில் கூறுவான் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறாள். வர்மா அமைதியைப் பின்பற்றுகிறான்.

இந்திரா:   இல்ல... இப்போ மூணு அண்ணன் தம்பிகள் கையில கம்பெனி இருக்கு. சேட்டுகள்...

உண்ணி:  பன்ஸி பிரதர்ஸ்....

இந்திரா:   (கோபத்துடன்) யூ ஷட்டப்! (மீண்டும் சாந்தமான குரலில்) அவுங்க கொஞ்சம் சம்பளத்தைக் கூட்டினாங்க. வீட்டுக்கும் ஏகப்பட்ட வசதிகளைச் செஞ்சு தந்தாங்க. ஆனா, சொல்லி என்ன பிரயோஜனம்? படிப்பு இல்ல. (வர்மாவிற்கு நேராக முகத்தைக் காட்டியவாறு) படிப்பே இல்லாதவங்களை பொறுத்துக்கலாம். படிப்பிற்கு எதிரா இருக்குறவங்களை எப்படி பொறுத்துக்க முடியும்னு இவர்தான் அடிக்கடி சொல்வாரு. சரிதானே?

கோபாலன் நாயருக்கு ஒன்றுமே புரியவில்லை.

கோபாலன் நாயர்:    எல்லாம் நல்லதுக்குன்னுதான் நான் நினைக்கிறேன்.

இந்திரா:   இங்கே இருக்குறவங்க ஒவ்வொருத்தரும் கேக்குறப்போ பதில் சொல்றதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியதிருக்கு! அவுங்களுக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கிறது? வசதி அதிகமாகுறப்போ மனசுல டென்ஷன் அதிகமாகுது. டென்ஷனால், பால்பிட்டேஷன். நான் அப்படிச் சொன்னா... எனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்குன்னு மத்தவங்க சொல்லுவாங்க. இல்லையா கோபாலன் நாயர்? (சிரிக்கிறாள்)

வர்மா அமைதியாக இருக்கிறான்.

உண்ணி அவரையே பார்க்கிறான்.

வர்மா:    (இந்திராவிடம்) இஃப்!

இந்திரா உள்ளே போக முயலும்போது. பாத்ரூம் கதவு... மறந்துட வேண்டாம்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel