Lekha Books

A+ A A-

ஆரூடம் - Page 2

aaruudam

இந்திரா:   (வெறுப்பை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு) நீங்க சொல்றது சரிதான். அதுக்காக கஷ்டப்பட்டுத்தான் தீரணும். சாதாரணமா இப்படியொரு காரியத்தைச் செய்ய தைரியம் வராது. (விஷயத்தை மாற்றுவதற்காக) வண்டி எதுவும் இல்லையா?

கோபாலன் நாயர்:    இதோ... பக்கத்துலதான். நடந்தா பத்தடி தூரம் கூட வராது.

இந்திரா:   (வர்மாவிடம்) டாக்ஸி கிடைக்காதா?

வர்மா அதைக் காதில வாங்காதது மாதிரி இருக்கிறான்.

கோபாலன் நாயர்:    டாக்ஸியெல்லாம் இருக்கு. ஊரு முன்னாடி மாதிரி இல்ல. ஆனா, நாம நடக்க வேண்டியதே பத்தடி தூரம்தான்.

கோபாலன் நாயர், வர்மா, உண்ணி ஆகியோர் முன்னால் நடக்க, அவர்களுக்கு முன்னால் கூலியாள் நடக்கிறான்.

இந்திரா எல்லோருக்கும் பின்னால் ஹை ஹீல் செருப்பைப் போட்டுக் கொண்டு நடக்க முடியாமல் நடக்கிறாள். நடக்கும்போது அவளுக்கு வெறுப்பு தோன்றுகிறது.

இந்திரா:   (யாரிடம் என்றில்லாமல்) டென்ஷனே இல்லாத வாழ்க்கைக்கு டாக்ஸி தேவையில்லை. வசதிகள் தேவையில்லை. காட்டு மூலையிலே அமைதியா உட்கார்ந்து தவம் இருக்கலாம்.

வர்மாவும், உண்ணியும், கோபாலன் நாயரும் பார்க்கிறார்கள்.

கோபாலன் நாயர்:    (உண்ணியிடம்) குழந்தைக்கு நடக்க கஷ்டமா இருந்தா, நான் வேணும்னா தோள்ல தூக்கிக்கிறேன் . (குனிந்து) என்ன பேரு?

உண்ணி:  ராஜேஷ் பி.வர்மா

வர்மா:    உண்ணின்னுதான் கூப்பிடுறது.

கோபாலன் நாயர்:    என் தோள்ல உட்கார்ந்து ஆற்றைக் கடந்த விஷயம் ஞாபகத்துல இருக்கா தாசப்பா?

உண்ணி:  ஆறு எங்கே இருக்கு?

கோபாலன் நாயர்:    நான் காட்டுறேன்.

இந்திரா பின்னால் வந்து கொண்டிருக்கிறாள். வர்மா திரும்பிப் பார்க்கிறான்.

இந்திரா:   (வர்மாவிடம்) நடந்துதான் போகணும்னு முன்னாடியே சொல்லியிருக்கணும்ல? நான் செருப்பை எடுத்திட்டு வந்திருப்பேனே!

நடந்து செல்லும் உண்ணி வண்டியின் கூக்குரல் கேட்டு திரும்பி நிற்கிறான்.

தூரத்தில் கிராமத்தை விட்டு புறப்பட்ட வண்டி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கண்களை விட்டு மறைகிறது.

5

ழைய பெரிய வீட்டின் படியை அடைந்த வர்மாவும் கோபாலன் நாயரும் நிற்கிறார்கள்- இந்திரா வரட்டுமென்று எதிர்பார்த்து.

இலேசாக வியர்வை அரும்பிய சிவந்த முகத்துடன் மேல் மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு இந்திரா அருகில் வந்ததும்-

கோபாலன் நாயர்:    நான் சொன்னேன்ல. கொஞ்ச தூரம்தான் கஷ்டமொண்ணும் இல்லையே!

இந்திரா:   (சிரமத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஒரு மூலையில் ஒதுக்கி வைத்துக் கொண்டு) சேச்சே... அதெல்லாம் ஒண்ணுமில்ல... (கோபத்தை மறைத்துக் கொண்டு) இதுவும் ஒரு வகையில சுகமான அனுபவம்தான்...

உள்ளே வாசலில் காத்து நிற்கும் கோபாலன் நாயரின் மனைவியும் வேலைக்காரப் பெண்ணும் கேட்டை நோக்கி வருகிறார்கள்.

கோபாலன் நாயர்:    சாமான்களை எந்தவித கேடும் வராம எடுத்து வைங்க...

(வேலைக்காரியிடம்) நாணியம்மா, சாயாவுக்கு தண்ணி கொதிக்க வை.

கோபாலன் நாயர் கையிலிருந்த பொருட்களை தன்னுடைய மனைவியிடம் தருகிறார். வேலைக்காரி வர்மாவின் கையிலிருந்த பெட்டியை வாங்கிக் கொண்டு மரியாதையுடன் - அதே நேரத்தில் மகிழ்ச்சியான குரலில்:

“இப்பவாவது இங்கே வரணும்னு உங்க எல்லாருக்கும் தோணிச்சே!”

வர்மா புன்னகைக்கிறான்.

கோபாலன் நாயர்:    எல்லா வேலைகளும் சீக்கிரம் ஆகட்டும், தேவகி... (இந்திராவிடம்) இது என்னோட பொஞ்சாதி (மனைவியைக் காட்டி)... எல்லாம் சரியா இருக்கான்னு தேவகி பார்த்துக்குவா.

அளவுக்கும் அதிகமாக சாமான்களைக் கட்டிக் கொண்ட தேவகியம்மா சிரிக்கிறாள்.

அவள் மூன்னறைக்கு நகர்கிறாள். உண்ணியின் பார்வையில் வீடு. முன்னறை.

முன்னறை.

அங்கிருக்கும் பழைய நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்து இந்திரா புடவைத் தலைப்பால் தன்னைத் தானே வீசிக் கொள்கிறாள். அவளின் பார்வை பழைய வயரிங்கையும், பல்பையும் நோக்கி போகின்றது.

இந்திரா:   இங்கே ஃபேன் எதுவும் இல்லையா?

கேள்வி வர்மாவிடம்.

கோபாலன் நாயர் சாமான்களை உள்ளே கொண்டு போவதற்கு இடையில்-

“இங்கே அதுக்கு அவசியமே இல்லையே! எந்த மாசமாக இருந்தாலும் இங்கே சூடுன்றதே இருக்காது. சாயங்காலம் வந்துட்டா ஆத்துல இருந்து ஜிலுஜிலுன்னு காத்து வீச ஆரம்பிச்சிடும்...”

இந்திரா:   அதுவும் சரிதான்.

உண்ணி:  ஆறு எங்கே இருக்குப்பா?

கோபாலன் நாயர்:    நான் காண்பிக்கிறேன். பிறகு... உண்ணி, நீ வேற என்னென்ன பார்க்கணும்?

நாயரின் மனைவி தேவகி இந்திராவிடம்:

காப்பியா? சாயாவா? நீங்க என்ன குடிப்பீங்க? குழந்தைக்கு பாலு காய வச்சிருக்கேன்...

இந்திரா:   எது வேணும்னாலும் இருக்கட்டும். ராஜேஷுக்கு எதுவும் வேண்டாம். (எதையோ நினைத்து)... நான் வர்றேன்.

இந்திரா தேவகியம்மாவுடன் சமையலறைக்குள் நுழைகிறாள்.

உண்ணி எழுந்து விசாலமாக இருக்கும் முன்னறையைச் சுற்றிப் பார்த்தவாறு உள்ளே இருக்கும் அறைக்குள் போகிறான்.

மாடியில் இருந்து சில கூடைகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

சுவரில் கொண்டை போட்டிருக்கும் ஒரு வயதான பெரியவரின் பழைய ஆயில் பெயிண்டிங். வேறு சில படங்கள். காதில் கல் வைத்த கடுக்கனும், கழுத்தில் புலி நகம் கோர்த்த மாலையும் அணிந்து மேலே சட்டை இல்லாமல் இருக்கும் பெரியவரின் படத்தையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தவாறு நின்றிருக்கிறான் உண்ணி.

வர்மா:    (அருகில் வந்து நின்று) இது யார் தெரியுமா உண்ணி?

உண்ணி ‘தெரியாது’ என்று தலையை ஆட்டுகிறான்.

வர்மா:    “உன்னோட தாத்தா”

உண்ணி சந்தேகத்தை தீர்க்கும் குரலில்-

“யுவர் டாட்?”

வர்மா ‘ஆமாம்’ என்பது மாதிரி தலையை ஆட்டுகிறான்.

காதில் பெரிய ஒரு நகையையும் உடலில் ஏகப்பட்ட நகைகளையும் அணிந்து காட்சியளிக்கும் ஒரு பெண்ணின் படத்தைப் பார்த்து வர்மா:

“தேட் ஈஸ் மை மம்மி. உன்னோட பாட்டி.”

வேலைக்காரி வந்து உண்ணிக்கு டம்ளரில் ஹார்லிக்ஸும் வர்மாவிற்கு தேநீரும் தருகிறாள். வர்மா தேநீரை வாங்கிக் குடித்தவாறு!

“நாணியம்மா, உன்னோட பசங்க என்ன பண்றாங்க?”

நாணியம்மா:    அப்புக்குட்டன் கோயம்புத்தூர்ல இருக்கான். அவன் இருக்குறதும் இல்லாததும் ஒண்ணுதான். பத்மாவதியும் அவளோட பசங்களும் இங்கேதான் இருக்காங்க. அவ புருஷன் எப்போ பார்த்தாலும் போதையிலேயே இருக்கான்.

வர்மா:    கடைசில உனக்கு ஒரு மக இருந்தாளே! பேரு சுபத்ரான்னு நினைக்கிறேன்.

நாணியம்மா:    (மகிழ்ச்சியுடன்) பேரைக்கூட நீங்க மறக்கலையே! அவ தோட்டத்துல இருக்கா. ஆனைமலைல இருக்குற தோட்டத்துல அவளோட புருஷனுக்கு வேலை.

இந்திரா அப்போது அங்கு வருகிறாள்.

நாணியம்மா:    பத்மாவது ரெண்டாவது பொண்ணு. அவளுக்கு அஞ்சு நாளைக்கு முன்னாடி அய்யா பொறந்தாரு.

(இந்திராவிடம்) இவர் அவிட்டம். அவ ரேவதி.

உண்ணி உள்ளே போகிறான்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel