
மொழி பெயர்ப்பாளரின் முன்னுரை
மிக சாதாரண சூழ்நிலையில் பிறந்த ஒரு மனிதன் நினைத்தால் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், தொடர் முயற்சிகளாலும் முன்னுக்கு வர முடியும். அதற்கு உதாரணம்தான் சார்லி சாப்ளின். வறுமை சூழ்ந்த குடும்பத்தில் பிறந்து, எந்தவிதமான வசதிகளையும் அனுபவிக்க வாய்ப்பில்லாமல் ஒவ்வொரு நாளும் பசி, பட்டினி ஆகியவற்றை மட்டுமே பார்த்த அவர் எப்படி வாழ்க்கையில் முன்னுக்கு வந்து உலகமெங்கும் தெரியக் கூடிய மனிதராக ஆனார் என்பது நாம் எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமே.
வாய்ப்புகள் சாப்ளினைத் தேடி வந்திருக்கலாம். அதே நேரத்தில் தன்னுடைய முயற்சிகளாலும், திறமையாலும் அவர் வாய்ப்புகளை உருவாக்கினார் என்பதும் உண்மை. அப்படி உருவாக்கப்பட்ட வாய்ப்புகள்தான் அவரை உச்சத்தில் கொண்டு போய் உட்கார வைத்தன. வறுமையின் பிடியிலிருந்து விலகி ஓட வேண்டும், எல்லோருக்கும் தெரியக் கூடிய ஒரு மனிதனாக ஆக வேண்டும் என்ற சாப்ளினின் உள்ளுணர்வும் வேட்கையும்தான் அவரின் உயர்நிலைக்கான உண்மைக் காரணங்கள்.
சார்லி சாப்ளினின் வாழ்க்கை முன்னுக்கு வர துடிக்கும் ஒவ்வொருவருக்கும் பாடம். அவரின் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளும் ஒவ்வொருவரும் நிச்சயம் தானும் அதே மாதிரி முன் நிலைக்கு வர வேண்டும் என்ற உத்வேகத்தைப் பெறுவார்கள் என்பது மட்டும் உண்மை.
மிக உயர்ந்த நிலைக்கு முயற்சியாலும் உழைப்பாலும் முன்னேறிய அந்தக் கலைமேதையின் வாழ்க்கைக் கதையை மொழி பெயர்க்க வாய்ப்பு கிடைத்ததற்காக மனதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
அன்புடன்,
சுரா
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook