Lekha Books

A+ A A-

வெளுத்த குழந்தை - Page 5

velutha kulanthai

பார்த்தியா? அந்த அருவிகள்ல வர்ற நீர் தலையில விழுந்துதான் யானைக்கு மதம் பிடிக்கிறது...''

அப்படியா?''

அலகுகள் இணைக்கப்பட்டு கோட்டைக் கதவுகளைப்போல நின்றிருந்த பிரம்மாண்டமான இரண்டு கோழிகளின் கழுத்திற்கு அடியில் அவர்கள் பயணம் செய்தார்கள். அவற்றின் பாதங்கள் பட்டு பூமியில் சிறுசிறு கிணறுகள் உண்டாயின.

அந்தக் கோழிகள் எப்பவும் கொத்திக் கொண்டே இருக்கும்...''

முழுவதையும் கேட்பதற்கு முன்பே அவர்கள் கோழிகளைத் தாண்டி நீண்ட தூரம் போய் விட்டிருந்தார்கள். எங்கும் இருட்டு பரவியது.

சைத்தானே!'' குஞ்ஞிமோன் அழைத்துச் சொன்னான். கண் கொஞ்சம்கூட தெரியல...''

மன்னிச்சிக்கோ.''

அவன் மன்னித்தான். அவர்கள் கீழ் நோக்கி இறங்கிக் கொண்டிருந்தார்கள். நீண்ட நேரம் அவர்கள் இருட்டினூடே கீழ் நோக்கிப் போன பிறகு, அவர்கள் வெளிச்சம் நிறைந்த ஒரு பூந்தோட்டத்தை அடைந்தார்கள்.

இனி இறங்கிக்கோ.''

குஞ்ஞிமோன் கீழே இறங்கினான். சுற்றிலும் பார்த்தான். மிக அழகான பூந்தோட்டம். ஏராளமான பூக்கள்... ஏராளமான பழங்கள்...

நீ இங்கே எங்கே வேணும்னாலும் நடக்கலாம். இதுதான் என் இடம்.''

குஞ்ஞிமோன் அருகில் நிறைய பூக்களுடன் நின்று கொண்டிருந்த ஒரு மரத்தை நோக்கி நடந்தான். அப்போது திடீரென்று ஒரு உரத்த சிரிப்புச் சத்தம் கேட்டது. அந்த மரம் நடந்து வந்து கொண்டிருந்தது. அது ஒரு எலும்புக்கூடு! அதன் தலையில் ஒரு ரத்தின கிரீடம் இருந்தது. அய்யோ!'' குஞ்ஞிமோன் திரும்பி ஓடினான். சைத்தான் அவனைத் தடுத்து நிறுத்தி அமைதிப் படுத்தினான். அது நம்மோட சக்கரவர்த்தி! அவர் ரொம்ப காலமா என் பிரியத்துக்குரிய ஆளா இருந்தாரு. அவருக்கு நான் ஒரு பெரிய கரை முழுவதையும் சொந்தமாக்கிக் கொடுத்தேன். கடைசியில் அவர் என் கூடவே இருந்துட்டாரு.'' எலும்புக் கூட்டை நோக்கித் திரும்பிய சைத்தான் கேட்டான்: என்ன, தலைவரே!'' அந்த எலும்புக்கூடு உரத்த குரலில் இடைவிடாது சிரித்துவிட்டு, தான் இருந்த இடத்திற்குப் போய் மரமாக நின்றது.

சைத்தான் நடந்தான். அவனுக்குப் பின்னால் குஞ்ஞிமோனும். வழியில் ஒரு உயரமான குன்று இருந்தது. அதன் சரிவில் அவர்கள் நடக்க வேண்டும்.

இது என்னன்னு தெரியுமா?''

தெரியாது.''

சைத்தான் தன் கையை அந்தக் குன்றை நோக்கி நீட்டினான். அது மனிதர்களின் மண்டையோடுகளாலானது. சைத்தான் சொன்னான்: பல போர்களில் ஈடுபட்ட வீரர்களின் மண்டை யோடுகள்...''

குஞ்ஞிமோன் இமைகளை மூடாமல் நின்றிருந்தான்.

வா...'' சைத்தான் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு முல்லைத் தோட்டத்தில் தன் கையை வைத்தான். அதோ, பூச் சூடியவாறு ஒரு எலும்புக்கூடு!

இவள் அரசாங்க நடன மங்கையாக இருந்தாள். ஒன்பது மன்னர்களைப் பதவியிலிருந்து இல்லாமற் செய்ய இவளால முடிஞ்சிருக்கு.''

இப்படி பலவற்றையும் பார்த்துக்கொண்டே அவர்கள் ஒரு பெரிய பாறைக்கு அருகில் வந்தார்கள். திடீரென்று கதவு திறந்தது. சைத்தானும் குஞ்ஞிமோனும் உள்ளே நடந்தார்கள். அங்கு சாப்பாடு, குடி, நடனம் எல்லாம் நடந்து கொண்டிருந்தன. எல்லாரும் முழு நிர்வாணமாக இருந்தார்கள்.

இதுதான் இடம்...''

பிரகாசமாக இருந்த அந்த இடத்தில் புத்துணர்ச்சி ஊட்டக் கூடிய ஒரு வாசனை பரவியிருந்தது. அருமையான வாசனை! குஞ்ஞிமோன் தன் மூக்கு துவாரத்தால் அந்த வாசனையை முகர்ந்தான்.

என்ன வேணுமனாலும், உன் கையை நீட்டு. கிடைக்கும்.''

இதைச் சொன்ன சைத்தான் பூக்கள் பரவிக் கிடந்த ஒரு பாறைமீது போய் மல்லாக்க விழுந்தான். கண்களை மூடி அவன் படுத்தான். அவலட்சணமான வாய்க்கு வெளியே பற்கள் துருத்திக்கொண்டு மின்னின. குஞ்ஞிமோன் அதையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான்.

மிகவும் களைப்பாக இருந்தது. அவன் தரையில் சாயலாம் என்று நினைத்தான். அப்போது உடலுக்குக் கீழே ஒரு பூ விரிப்பு மேல் நோக்கி வந்து கொண்டிருந்தது. குஞ்ஞிமோன் அந்த பூ மெத்தையில் படுத்தான். வெளிச்சம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. சிறிது நேரத்தில் இருட்டு மட்டுமே இருந்தது.

குஞ்ஞிமோன் கண்களை மூடியவாறு படுத்திருந்தான். ஆனால், தூக்கம் வரவில்லை. மனதில் பலவகைப்பட்ட சிந்தனைகளும் ஆக்கிரமித்திருந்தன. தன் தாய் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள்? தன்னைத் தேடி நெல் வயல்களில் அலைந்து கொண்டிருப்பாளோ? மிகவும் அமைதியாக இருக்கும் அந்த வயல் வெளிகளில் இருட்டைக் கிழித்துக்கொண்டு ஒரு குரல் கேட்டுக் கொண்டிருக்கும்: குஞ்ஞிமோனே! குஞ்ஞிமோனே!''

தன் தாயின் அழைப்பு காதுகளில் வந்து மோதுவதைப்போல் அவன் உணர்ந்தான். அவன் எழுந்து உட்கார்ந்தான். காதுகளைத் தீட்டிக் கொண்டு கேட்டான். இல்லை. மீண்டும் படுத்தான். வீடும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் முதலாளியும் முதலாளியம்மாவும் வரிசையாக மனதில் வந்துபோய்க் கொண்டிருந்தார்கள். மனதில் ஒரு போராட்டமே நடைபெற்றுக் கொண்டிருந்தது.

குஞ்ஞிமோன் கண் விழித்தவாறு படுத்துக்கொண்டு சிந்தித்தான். இங்கிருந்து தப்பிப்பதற்கு என்ன வழி? அவன் இரவு முழுவதும் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான். ஒரு வழியும் தெரியவில்லை.

அதிகாலைக் கதிர்கள் மெதுவாக அந்தக் குகைக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. குஞ்ஞிமோன் தலையை உயர்த்திப் பார்த்தான். கிழக்குப் பக்கத்திலிருந்து ஒரு படியின் வழியாக அந்த வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. வெளிச்சம் ஒரு நேர்கோட்டைப் போல தெரிந்தது. குஞ்ஞிமோன் தட்டுத் தடுமாறி எழுந்து அந்த வெளிச்சத்தின் வழியாக நடந்தான். அவன் அந்தப் படிகள் வழியாக மேல் நோக்கி ஏற ஆரம்பித்தான். தாமரைப் பூவின் மணம் கலந்த இளம் காற்று அந்தப் படிகள் வழியாக உள்ளே வந்து கொண்டிருந்தது. ஒரு மகிழ்ச்சி, ஒரு உற்சாகம்... அவன் வேகமாகப் படிகளில் ஏறினான்.

அந்தப் படிகள் விசாலமான ஒரு தளத்தில் போய் முடிந்தது. அங்கு நடுவில் ஒரு தாமரைப் பொய்கை இருந்தது. பாதி மலர்ந்த தாமரை மலர்கள் நிறைய அங்கு காட்சிளியத்தன. அந்தத் தளத்திற்கு மேற்கூரையில்லை. திறந்த இடம். அங்கிருந்து பார்த்தால் சூரியக் கதிர்கள் முத்தமிடும் உயர்ந்த குன்றுகள் தூரத்தில் தெரிந்தன.

பிரகாசம் திரைச்சீலையை நீக்கிவிட்டுப் புறப்படுகிறது. குஞ்ஞிமோன் பொய்கையையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். இந்த அளவிற்கு அருமையான ஒரு அதிகாலைப் பொழுதை அவன் பார்த்ததேயில்லை. இதயம் உற்சாகத்தில் துடித்துக் கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். பிரபஞ்சம் அவனுக்கு நேராகப் புன்னகைத்துக் கொண்டு நின்றிருந்தது.

திடீரென்று அவனுடைய தலைக்குள் சிறிது வெளிச்சம் நுழைந்ததைப்போல அவன் உணர்ந்தான். குஞ்ஞிமோன் சிரித்துக் கொண்டே வேகமாக எழுந்தான். அவன் உரத்த குரலில் சொன்னான்: ஒரு வழி பண்ணுறேன்.''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel