Lekha Books

A+ A A-

சோதனைக்கூடம் - Page 8

Sodhanaikoodam

"நான் இதைக் கேட்பதற்காக தவறாக நினைக்கக் கூடாது. எனக்கு மனோதத்துவம் படிப்பதில் ஆர்வம் உண்டு. அவர்களுக்கு எப்போதாவது அதற்கான அதிர்ஷ்டம் அமைந்ததா?''

"நான் அதைக் கூறுவதற்கு விரும்பவில்லை. ஆனால், நான் ஒரு புனிதமான பெண் அல்ல. அவர்களில் சிலரை எனக்கு நன்றாகத் தெரியும். உண்மையாக சொல்லப்போனால் இப்போதும்கூட அவர்களைப் பற்றி சிந்திக்கக் கூடிய ஒரு ஆசை எனக்குள் இருக்கிறது.''

"அவர்கள் சிறிது அதிகமான அளவில் இருந்தார்களோ?''

"இதயத்திற்கு ஆசை அதிகம் என்பது உங்களுக்குத் தெரியாதா? ரத்தத்திற்கும் சதைக்கும் அடியில் இதயம் தன்னுடைய நெருப்பை எல்லா நேரங்களிலும் எரிய விட்டுக் கொண்டே இருக்கும். சிறிய அளவில் ஊதினால்கூட போதும், அது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துவிடும். என்னுடைய ஆரம்பம் மிகவும் அசிங்கமாகத்தான் இருந்தது. அதனால் ஆட்களுடன் வெளிப்படையாகப் பேசுவதில் எனக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லாமலிருந்தது. எங்களைப் போன்ற பெண்கள் வாழ்நாள் முழுவதும் சந்நியாசிகளாக வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. கபடத்தன்மையைப் பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொண்டிருக்கும் மிகவும் கஷ்டமான வேலையை நாங்கள் தினமும் செய்து கொண்டிருக்கிறோம். திரௌபதிக்கும் குந்திக்கும் சீதையாகவும் சாவித்திரியாகவும் நடிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகவில்லையா? சவுதரி மசாய், உங்களிடம் என்னால் அதைக் கூறாமல் இருக்க முடியாது. ஒரு விஷயத்தை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இளம் வயதிலிருந்தே சரி எது, தவறு எது என்பதை அடையாளம் கண்டுபிடிக்கக்கூடிய அறிவு எனக்கு இல்லை. எனக்கு ஒரு குரு இல்லை என்ற உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் திடீரென்று நான் மோசமான செயல்களில் போய் விழுந்தேன். அதில் நான் சிரமமே இல்லாமல் நீந்தினேன். எந்த ஒரு விஷயத்தாலும் என்னைப் பிடித்து மேலே கொண்டு வர முடியவில்லை. எது எப்படியோ, என்னுடைய கணவர் இறந்தவுடன் என்னுடைய கெட்ட செயல்களும் அவருடைய சிதையில் எரிந்து சாம்பலானது. நான் சேர்த்து வைத்திருந்த பாவச் செயல்களை நான் இப்போது ஒவ்வொன்றாக எரித்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் புனித மனிதரின் நெருப்பு இப்போதும் இந்த சோதனைக் கூடத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.''

"அடடா! மிகுந்த தைரியத்துடன் நீங்கள் உண்மையை வெளிப்படையாகக் கூறுகிறீர்கள்!''

"உண்மையைக் கூறுவதைக் கேட்பதற்கு பொருத்தமான ஒரு மனிதரைச் சந்திக்கும்போது, அதைக் கூறுவது என்பது மிகவும் எளிதான ஒரு விஷயமாக இருக்கும். நீங்கள் வெளிப்படையான இயல்பைக் கொண்ட மனிதர்; புனிதமானவர்...''

"அப்போதைய அந்தக் காதல் கடிதங்களை எழுதிய இளைஞர்கள் இப்போதும் உங்களுடைய மனதில் முளைத்து நின்று கொண்டிருக்கிறார்களா?''

"அப்படித்தான் அவர்கள் என்னுடைய இதயத்தைப் புனிதமானதாக ஆக்கினார்கள். என்னுடைய செக் புத்தகத்தில் கண்களைப் பதித்துக் கொண்டு அவர்கள் என்னைச் சுற்றி குழுமியிருப்பதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பெண்களால் தங்களுடைய மனதில் இருக்கும் மோகத்தைக் கடந்து வாழ முடியாது என்று அவர்கள் நினைத்தார்கள். அந்த வகையில் என்மீது காதல் இருப்பதாகக் காட்டிக் கொண்டு என்னுடைய பணப் பெட்டிக்குள் நுழையலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். வறண்டு காய்ந்து போயிருந்த என்னுடைய பஞ்சாபி இதயத்திற்குள் எந்தவொரு உணர்ச்சிகளும் இல்லை என்று அவர்கள் கருதினார்கள். என்னுடைய சந்தோஷத்திற்காக சமூகத்தில் எல்லா வகையான சட்டங்களையும் காற்றில் பறக்கவிட என்னால் முடியும். ஆனால், என்னுடைய நம்பிக்கைகளுக்கு துரோகம் செய்ய என்னால் முடியாது. என்னுடைய சோதனைக் கூடத்திலிருந்து ஒரு பைசாவைக்கூட பெறுவதற்கு அவர்களால் முடியவில்லை. என்னுடைய இதயச்சுவரின் கருங்கற்களை வைத்துதான் என்னுடைய கோவில் வாசலை நான் பத்திரமாகக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். அந்த கற்களை அகற்றக் கூடிய சக்தி அவர்களுக்கு இல்லை. என்னை வாழ்க்கையின் பங்காளியாகத் தேர்ந்தெடுத்த அந்த மனிதருக்கு தவறு உண்டாகவில்லை. அவருடைய நினைவுகளுக்கு முன்னால் நான் தலைகுனிந்து நிற்கிறேன். அந்தத் திருடர்களின் காதை அடித்துக் கிழிக்க முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றுகூட நான் ஆசைப்படுகிறேன்.''

போவதற்கு முன்னால் அவர் சோஹினியுடன் சேர்ந்து அந்த சோதனைக் கூடத்தைச் சுற்றிப் பார்த்தார். "பெண்மைத்தனம் அதிக அளவில் நிறைந்திருக்கும் அறிவு இங்கு சேகரிக்கப்பட்டு பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. பிசாசுகளைச் சண்டியாக ஆக்கி வெளியேற்றப்பட்ட செயல்கள் நடந்திருக்கிறது.''- அவர் சொன்னார்.

"நீங்கள் விரும்பியபடி விளக்கம் அளிக்கலாம். அதைப் பற்றி எனக்கு எந்தவொரு கவலையும் இல்லை.'' - சோஹினி சொன்னாள்: "பெண்களின் அறிவுதான் கடவுளின் உண்மையான படைப்பு. நாங்கள் இளம் வயதில் எங்களுக்கு சக்தி இருந்தபோது, அது காட்டில் மறைந்திருந்தது. எங்களுடைய குருதி அமைதியாக ஆனபோது, அந்தப் பழமையான அன்னை கண்விழித்து எழுந்து நிற்கிறாள். ஆனால், அதற்கு முன்பே நான் இறந்து விடுவேன் என்பதுதான் என்னுடைய நம்பிக்கை.''

"கவலைப்பட வேண்டாம்! மரணத்திற்கு முன்பே உங்களால் உங்களுடைய திறமைகள் முழுவதையும் வெளியே கொண்டு வர முடியும் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.''-பேராசிரியர் சவுதரி சொன்னார்.

5

ரைத்த தலைமுடியைக் கறுப்பாக ஆக்கி, சோஹினி ஒரு தாவரவியல் பூங்காவிற்குச் சென்றாள். நீலமும் பச்சையும் கலந்து கரையிட்ட- வெண்ணிற பனாரஸ் புடவையை அந்த பெண் அணிந்திருந்தாள். இளம் மஞ்சள் நிறத்தில் இருந்த சோளி அவளுடைய புடவைக்கு அடியில் தெரிந்தது. நெற்றியில் குங்குமம் வைத்திருந்தாள். மை தடவி கண்களைக் கறுப்பாக்கி விட்டிருந்தாள். தலைமுடியை மிகவும் சுதந்திரமாக்கி ஒரு ரிப்பனை வைத்துக் கட்டியிருந்தாள். கறுத்த தோலில் சிவப்பு வெல்வெட் இணைத்து உண்டாக்கப்பட்ட செருப்பை அவள் அணிந்திருந்தாள்.

ரேபதி வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளை செலவிடக் கூடிய மரங்களுக்கு மத்தியில்தான் சோஹினி அவனைப் பார்த்தாள். நெற்றியை அவனுடைய பாதங்களில் முத்தமிடும் வண்ணம் வைத்து வணங்கி, அவள் அவன்மீது கொண்டிருக்கும் ஈடுபாட்டை வெளிக்காட்டினாள். அதிகமான பரபரப்புடன் ரேபதி வேகமாக எழுந்தான்.

சோஹினி சொன்னாள்: "மன்னிக்கணும்,குழந்தை. நீ ஒரு பிராமணன். நான் வெறும் ஷத்திரிய குலத்தில் பிறந்தவள். பேராசிரியர் சவுதரி என்னைப் பற்றி உன்னிடம் கூறியிருப்பார்!''

"ஆமாம்... ஆனால், உங்களுக்கு அமர்வதற்கு ஏற்ற ஒரு இடத்தை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.''

"இதோ... இங்கே ஒரு மென்மையான புல்வெளி இருக்கின்றதே! இதைவிட உட்காருவதற்கு சிறந்த இடம் எங்கு கிடைக்கும்? நான் இங்கே எதற்காக வந்திருக்கிறேன் என்பதை நினைத்து நீ ஆச்சரியப் பட்டிருக்கலாம். ஒரு சபதத்தை நிறைவேற்றுவதற்குத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். உன்னைப்போல வேறொரு பிராமணனை என்னால் எங்கும் கண்டுபிடிக்க முடியாது!''

"என்னைப்போல ஒரு பிராமணனையா?'' ரேபதி ஆச்சரியத்துடன் கேட்டான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel