Lekha Books

A+ A A-

தாரா ஸ்பெஷல்ஸ் - Page 4

thara special

அது எனக்குத்தான்னு வச்சுக்கோ. இந்த நாலு லட்சத்தோட வியாபாரத்துல பங்கு சேர்ந்து லாபம் சம்பாதிக்க சாதாரண இருபதாயிரம் ரூபாய் போதுமா? சொல்லப்போனால், வரதட்சணை இரண்டு லட்சமாவது கொடுத்தாதான் சரியா இருக்கும். என்னோட அப்பா இந்த அளவுக்கு கேட்டாரா?''

"இல்ல...''

"இதுதான் பண்பாடுன்றது. தாரான்ற உன்னோட காதலியை நீ கல்யாணம் பண்றப்போ வரதட்சணையா உனக்கு எவ்வளவு கிடைக்கும்?''

"வரதட்சணையா எதுவும் கிடைக்காது. அவள் ஏழையாச்சே!''

"பொண்ணு யாரு?''

"ஒரு ஏழைத் தொழிலாளியோட மகள்.''

"என்ன தொழிலாளி?''

"ரிக்ஷா வண்டிக்காரன் பைலோ...''

"நம்மோட பொருளாளர் பைலோவா?''

"ஆமாம்...''

"அட டாகே!'' போளி பாப்பச்சனை உற்று நோக்கினான். தொடர்ந்து கூறினான்: "இதுனாலதான் நீ ரிக்ஷா தொழிலாளர்கள் போராட்டம் ஆரம்பிச்சதா? இதுனாலதான் பைலோவைப் பொருளாளரா போட்டதா? வர்ற காசு மாமனாரோட கையிலயே இருக்கட்டும்ன்றது உன்னோடு நினைப்பு. அதுக்குத்தானே என்னைத் தலைவரா போட்டது! அடே டாகோட டாகா! இந்த ஹ்யூமருக்கே ஒரு விருந்து தரணும்.''

கூறும்போது எல்லாவற்றையும்கூற வேண்டும் அல்லவா? பாட்டில் காலியாகிவிட்டது. அதற்காகக் கவலைப்பட அவசியமில்லை. போளி அலமாரியைத் திறந்து வேறொரு வண்ணத்தில் இருந்த ஒரு பாட்டிலை எடுத்து, டம்ளரில் பாதியை நிரப்பினான். வாயில் வைத்துக் குடித்தான். இந்த முறை மூக்கைப் பொத்தவில்லை. கடலையை எடுத்து வாயில் போடவில்லை. சார்மினாரை மட்டும் புகைத்தான். தண்ணீர் சேர்த்து ஒரு டம்ளர் உள்ளே இறக்கிய பாப்பச்சன் சொன்னான்: "தலை லேசா வலிக்கிற மாதிரி இருக்கு. வெறும் வயிறு. ஏதாவது சாப்பிடலாமா போளி?''

"நிச்சயமா...''

"ஒரு இடைவேளை'' என்று மனதில் நினைத்தவாறு அவர்கள் சாப்பிட அமர்ந்தனர். சப்பாத்தி, உருளைக் கிழங்கு கூட்டு, சாதம், மோர்- இத்தனையும் சாப்பிட்ட பிறகு சார்மினாரைப் புகைத்தவாறு அவர்கள் இரண்டு நாற்காலிகளில் அமர்ந்தார்கள். அப்போது போளி சொன்னான்:

"கோதுமை தாராளமா சாப்பிடணும். அரிசியைக் குறைச்சிக்கணும். இதுதான் போளி ஹவுஸின் கொள்கை. நீ இதைப்பற்றி என்ன நினைக்கறே?''

"சரிதான். சொல்றப்போ...''

"மனசுல என்ன தோணுதோ சொல்லு!''

"நாங்க ஏழைங்க. எங்களோட கொள்கை என்ன தெரியுமா? எது கிடைச்சாலும் சாப்பிட வேண்டியதுதான். போளி, கப்பைக் கிழங்கே மிகவும் கஷ்டப்பட்டுதான் எங்களுக்குக் கிடைக்குது. ஒவ்வொரு நாளும் மூணு நாலு கப்பைக் கிழங்கு எங்களுக்குக் கிடைக்குது. ஒவ்வொரு நாளும் துண்டுகளை வேக வைத்துச் சாப்பிட்டு தண்ணி குடிக்கிறோம். இதுதான் ஏழைகளாகிய எங்களோட நிலை. லட்சக்கணக்கான மக்களோட வாழ்க்கையின் உண்மையான நிலை இதுதான்.''

3

சிறிது நேர அமைதிக்குப் பிறகு போளி சொன்னான்:

"தொழிலாளிகள் பிரச்சினை இப்படி இருக்குறப்போ பணத்தை முதலீடு செய்து பண்ற பிசினஸ் அவ்வளவு நல்லதில்லை. நான்தான் சொன்னேனே, இங்கே எல்லாருமே தலைவர்கள்- எல்லாருமே மந்திரியாக நினைக்கிறாங்க. விருப்பப்படி பணத்தை மூட்டை அடிச்சு எப்படியாவது பணக்காரன் ஆயிடணும். உன் விஷயத்தையே எடுத்துக்கோ. கப்பைக் கிழங்கு வாங்கக்கூட உன் கையில காசு கிடையாது. ஆனால், உனக்கோ சிகரெட் ஃபாக்டரியோட மேனேஜிங் பார்ட்னராகணும். உன்னைப்போல கப்பைக் கிழங்கு சாப்பிடுகிற- ஒரு பார்க்கவே சகிக்காத ஏழைப் பெண்ணோட பேரை ஃபாக்டரிக்கு வைக்கணும். டேய் பாப்பச்சா, நீ சொல்லு- உலகம் எப்படிடா உருப்படும்? நாடு எப்படிடா வளரும்?''

இதைக் கேட்தும் பாப்பச்சனுக்கு கோபம் வந்துவிட்டது. பாப்பச்சன் சொன்னான்: "டேய் போளி... உன் கன்னத்துல பளார்னு அறையப்போறேன்.''

போளி கூறினான்:

"நாலு லட்சம் ரூபாய்க்குச் சொத்து. அது போகட்டும். பி.ஏ.பி.எல். பாசாயிட்டேன். அதுவும் போகட்டும். உன்னோட "படுக்கையறை" பத்திரிகைக்கு மூவாயிரம் ரூபாய் செலவழிச்சேன். சரி... அதுவும் போகட்டும். உன்னோட மாமனாரோட போராட்டத்துக்காக ஆதரவு தந்ததோடு நிற்காமல் தலைமை வேறு தாங்கினேன். அதுவும் போகட்டும்- பல தடவை சாப்பாடு...''

"டேய் போளி, நிறுத்து. நீ சொன்னது தப்பு. அவள் பார்க்கவே சகிக்க முடியாத தோற்றத்தைக் கொண்டவள் இல்லை. அழகிதான். அவள் கப்பைக் கிழங்கு மட்டும் சாப்பிடக்கூடியவள் இல்லை. கஞ்சியும் குடிக்கக் கூடியவள்தான். நீ தெய்வத்தை மறந்து இதை எல்லாம் சொன்னதால எனக்கு உண்மையாகவே கோபம் வந்திடுச்சு. கல்யாணம் செய்து கொடுக்க ரெண்டு சகோதரிங்க இருக்காங்க. சிகரெட் ஃபாக்டரி ஆரம்பிக்க எந்தத் தடையும் சொல்லாதே. பள்ளியோட ஃபாதர் தந்த சர்டிபிகேட் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டும் நம்மோட ஃபாக்டரியில் வேலை தந்தா போதும்.''

"நீ சொன்னது சரிதான். இருந்தாலும் நீ மன்னிப்பு கேக்கணும்.''

"என்னை மன்னிச்சிடுடா போளி.''

"சரி... இப்போ நான் சொல்றதைக் கேட்டுக்கோ. நீ என்கூட உட்கார்ந்து சாப்பிட்டிருக்கே. ஒண்ணா சேர்ந்து குடிச்சிருக்கே. என்கூட காரில் ஒண்ணா பயணம் செய்திருக்கே. இதுவரை உன்னோட குடும்பத்தோட கஷ்டங்களைப் பற்றி என்னைக்காவது என்கிட்ட சொல்லியிருக்கியா? ஏன்? நீ ஒரு சுத்த முட்டாள். நான் ஒரு கேப்பிட்டலிஸ்ட். ப்ளே பாய். உனக்கே இது தெரியும். ஆனால் நான் உன் நண்பன். நீ தகுந்த மாப்பிள்ளைகளைப் பார். உன் சகோதரிகளோட கல்யாணச் செலவை நான் பார்த்துக்கறேன்.''

பாப்பச்சன் இதைக் கேட்டதும் விக்கி விக்கி அழ ஆரம்பித்து விட்டான்.

போளி சொன்னான்:

"உன்னை சிகரெட் ஃபாக்டரியோட மேனேஜிங் பார்ட்னராக்குவது ஒரு வகை. உன்னை ஜெனரல் மேனேஜராக நியமிக்கலாம். சூழ்நிலையை அனுசரித்து பத்தோ இருநூறோ சம்பளமாகத் தரலாம். லாபத்தில் உனக்கு ரெண்டு பங்கு. என்ன சொல்ற?

"உன் விருப்பப்படி செய்.''

"சரி... இயந்திரத்தோட சொந்தக்காரன் யார்?''

"பிரேம்ரகு.''

"இயந்திரத்தை நீ பார்த்திருக்கியா?''

"இல்ல... நம்ம டிரான்சிஸ்டர் ரேடியோ, வாட்ச் ஆகியவற்றைக் கள்ளக் கடத்தல் செய்து விக்கிற மீசை ரப்பாயி சேட்டன் சொன்னார்.''

""அப்படின்னா... சிலோன்ல இருந்து வந்ததா இருக்கும். லட்சக்கணக்கான விலை இருக்கும். அவன் தருவானா?''

"அவனை பார்ட்னரா சேர்த்துக்கணும். மேனேஜிங் பார்ட்னர் போளி.''

"நாளைக்கே போயி அவனைப் பார்ப்போம். வீட்டை நாம கண்டுபிடிச்சிடலாம். இயந்திரத்தை வாங்க வேண்டியதுக்கான வழிமுறைகளை நான் பார்த்துக்கறேன்.''

பாப்பச்சனும் போளியும் அடுத்த நாள் காரில் கிளம்பினார்கள். நாற்பது மைல் கார் ஓட்ட வேண்டும். ஒரு கூலிங்கிளாஸ் இருந்தது. சாராய பாட்டில் விழுந்து அது உடைந்துபோனது. போனால் போகட்டும் போடா! போளி மெதுவாக காரை ஓட்டினான். பிரேம் ரகு போகிற நேரத்தில் வீட்டில் இருக்க வேண்டும். வழியில் விபத்து எதுவும் நடந்துவிடக்கூடாது.

 

+Novels

சபதம்

சபதம்

March 10, 2012

வேதகிரி

வேதகிரி

March 13, 2012

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel