Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

கரையைத் தொடாத அலைகள்

karaiyai-thodatha-alaigal

பீம்சிங் போட்ட பாதையில் செஞ்சி கிருஷ்ணன் வாழ்ந்தார் !

சுரா

1982ஆம் ஆண்டு. அப்போதுதான் நான் படவுலகிற்குள் நுழைந்து பி.ஆர்.ஓ.வாக பணியாற்ற தொடங்கியிருந்தேன். விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த ‘சாதிக்கொரு நீதி’ என்ற படத்திற்கு முதல் முறையாக நான் பி.ஆர்.ஓ.வாக அமர்த்தப்பட்டேன். ஒரு நாள் காலையில் தி.நகரில் நான் தங்கியிருந்த அறையில் என் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, என்னைப் பார்க்க சைக்கிளில் ஒருவர் வந்திருந்தார். வயது சுமார் ஐம்பது இருக்கும். முதிர்ச்சியான தோற்றம். குள்ளமான உருவம். வழுக்கைத் தலை. பேன்ட், சட்டை அணிந்திருந்தார். அவரை இதற்கு முன்பு வேறு எங்கும் பார்த்ததாக எனக்கு நினைவு இல்லை.

Last Updated on Monday, 04 February 2013 13:28

Hits: 5922

Read more: கரையைத் தொடாத அலைகள்

சத்யஜித் ரே

satyajit ray

1

குடும்பம்

1934ஆம் ஆண்டு. கல்கத்தாவிலிருந்த பாலிகஞ்ச் அரசாங்க உயர்நிலைப் பள்ளி தன்னுடைய வருடாந்திர பரிசு அளிக்கும் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தது. அந்த விழாவிற்காக எப்போதும் செய்யக் கூடிய வழக்கமான கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் ‘இசை - ஓவியம்’ என்றொரு வித்தியாசமான நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார்கள். ஒரு சிறுவன் ஒரு குறிப்பிட்ட காட்சியை விளக்கி, ஒரு பாடலைப் பாடுவான். இன்னொரு சிறுவன் அந்த காட்சியை மிகவும் வேகமாக அந்த பாடலைப் பாடிக் கொண்டிருக்கும்போதே, ஓவியமாக வரைவான். இதுதான் அந்த நிகழ்ச்சி.

Last Updated on Thursday, 07 February 2013 10:41

Hits: 5478

Read more: சத்யஜித் ரே

குரு தத்

guru dutt

அறிமுகம்

குரு தத் 1925ஆம் வருடம் ஒரு சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை பர்மா ஷெல் நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் க்ளார்க்காக பணி புரிந்தார். அவர் ஆங்கில இலக்கியம் படித்தவர். கவிதைகள் எழுதினார். ஆனால், அவை பிரசுரமானது இல்லை. குரு தத்தின் தாய் தன்னுடைய கணவருடன் மிகவும் தொல்லைகள் நிறைந்த ஒரு உறவைக் கொண்டிருந்தார்.

Last Updated on Thursday, 07 February 2013 10:41

Hits: 3322

Read more: குரு தத்

திலகன் என்ற மகாதிலகம்

thilakan endra magaathilagam

 சுராவின் கண்ணீர் அஞ்சலி...

நான் மிக உயர்வாக மதிக்கும்

நடிப்புக் கலையின் சிகரத்தைத் தொட்டு

நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு

தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களுக்கு

Last Updated on Thursday, 14 February 2013 11:30

Hits: 5956

Read more: திலகன் என்ற மகாதிலகம்

கனவு ராஜாக்கள்

kanavu-rajaakkal

அன்று கதாநாயகன்! இன்று ஸ்டண்ட் நடிகர்!

சுரா

திரைப்படத் துறைக்குள் நூறு பேர் நுழைந்தால், ஒருவர் மட்டுமே வெற்றி சிம்மாசனத்தில் கால் மேல் கால் போட்டு அமர முடியும். முடியாமல் போனவர்களின் நிலைமை அதற்குப் பிறகு எப்படி இருக்கும்?

அப்படிப்பட்ட ஒரு நண்பரின் பெயர்-  ரமேஷ்.

இவர் மோசஸ் திலக், கராத்தே மணி ஆகியோரிடம் கராத்தே பயிற்சி பெற்றவர். எனவே தன் பெயரை 'கராத்தே ரமேஷ்' என்று வைத்துக் கொண்டார். நான் அவரைச் சந்தித்தது 1982 ஆம் ஆண்டில்.

Last Updated on Tuesday, 03 February 2015 14:39

Hits: 8822

Read more: கனவு ராஜாக்கள்

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version