Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
ஆகஸ்ட் ரஷ்
(அமெரிக்க திரைப்படம்)
இசைப் பின்னணியில் எடுக்கப்பட்ட காதல் கலந்த ஒரு அருமையான குடும்பக் கதை. படத்தின் கதை கிட்டத்தட்ட நம் இந்தியப் படங்களில் வரும் கதையைப் போலவே இருக்கும். எனினும், நம்மை படத்தில் தீவிரமாக ஒன்றச் செய்வது- படம் முழுக்க ஆட்சி செய்யும் இசையும், நடிகர்களின் அசாத்தியமான நடிப்பும், உணர்ச்சிகரமான காட்சிகளும், திடீர் திடீர் என்று உண்டாகக்கூடிய திருப்பங்களும், கவித்துவம் நிறைந்த காட்சிகளும் தான்.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
தன்மாத்ர
(மலையாள திரைப்படம்)
நான் பார்த்து வியந்த படம். மலையாளப் படவுலகில் ஒரு மிகப் பெரிய பரபரப்பை இப்படம் திரைக்கு வந்தபோது உண்டாக்கியது. படத்தின் கதாநாயகன் மோகன்லால். 2005 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படத்தின் இயக்குநர் ப்ளெஸ்ஸி. பி.பத்மராஜன் எழுதிய ‘ஓர்ம’ (ஞாபகம் அல்லது நினைவு என்று அர்த்தம்) என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.
அல்ஸெய்மர் ((Alzheimer) என்ற ஞாபக மறதி நோயை மையமாக வைத்து அமைக்கப்பட்டதே இப்படத்தின் திரைக் கதை.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
கத்தாம
(மலையாள திரைப்படம்)
என்னைப் பெரிதும் பாதித்த ஒரு சிறந்த படம் இது. வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை செய்யும் பெண்களை அரேபிய மொழியில் ‘காதிமா’ என்று அழைப்பார்கள். அதன் பேச்சு வழக்கு வார்த்தையே ‘கத்தாம’.
சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காகச் செல்லும் மலையாளியான ஒரு ஏழை இளம் பெண்ணை மையமாக வைத்து பின்னப்பட்டிருக்கும் கதை இது. அந்த ஏழை பெண்ணாக நடித்திருப்பவர் – மலையாளப் படவுலகில் கடந்த பத்து வருடங்களாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் காவ்யா மாதவன்.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
தி ஜப்பனீஸ் ஒய்ஃப்
(இந்திய ஆங்கில திரைப்படம்)
கவித்துவத் தன்மை நிறைந்த ஒரு அருமையான காதல் கதை. படத்தின் இயக்குநர் : அபர்ணா சென். ஆங்கிலப் படமாக இருந்தாலும், வங்காள மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள், வங்காள மொழியிலேயே இதில் பேசுவார்கள். ஜப்பான் மொழி உரையாடல்களும் இருக்கின்றன.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
ஒரே கடல்
(மலையாள திரைப்படம்)
ஷ்யாம பிரசாத் இயக்கும் படம் என்றாலே, மிகவும் மாறுபட்ட கதைக் கரு கொண்ட படமாகத்தான் இருக்கும் என்ற விஷயம் எல்லோருக்கும் தெரியும். 2007இல் திரைக்கு வந்த ‘ஒரே கடல்’ அத்தகைய ஒரு படம்தான். கயிறு மீது நடப்பதைப் போன்ற ஒரு நுணுக்கமான விஷயத்தை எடுத்து, அதை கவித்துவத் தன்மை நிறைந்த ஒரு வித்தியாசமான படமாக எடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதை மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றியிருக்கும் ஷ்யாம பிரசாத்தை நாம் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.