Lekha Books

A+ A A-

நீலத்தாமரை - Page 3

neela-thaamarai

அம்மா:    மாசம் முடிஞ்சவுடனே கணக்குப் பிள்ளை மூலம் இவளோட சம்பளப் பணத்தைக் கொடுத்தனுப்புறேன். இங்கே இவளுக்கு எந்தக் கஷ்டமும் இருக்காது.

கிழவி:    (எழுந்து நின்றபடி) நான் புறப்படுறேன். குஞ்ஞிமாளு, ஏற்கனவே நான் சொல்லி இருக்கேன்ல! அதை ஞாபகத்துல வச்சுக்கிட்டு ரொம்பவும் கவனமா இருக்கணும். நல்லா நடந்து நல்ல பேரு வாங்கினா பொதுவா எல்லோருக்குமே நல்லது. (அம்மாவிடம்) நான் புறப்படுறேன். சின்னப்பிள்ளை குணம் இன்னும் இவளை விட்டுப் போகல. எல்லாம் காலப்போக்குல சரியாயிடும்.

அம்மா:    இடையில வாங்க.

கிழவி மெதுவாக எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் நடக்கிறாள். நடந்து செல்லும் கிழவியை ஒரு நிமிடம் பார்த்தவாறு நின்ற குஞ்ஞிமாளு, அடுத்த நிமிடம் வாசலை நோக்கி நடக்கிறாள்.

அம்மாவைத் தொடர்ந்து வீட்டுக்குள் குஞ்ஞிமாளு நடக்கிறாள். நாம் அவர்களைப் பின் தொடர, வீட்டின் உட்புறத் தோற்றம் தெரிகிறது.

ஏணி இருக்கும் இடத்தில் நின்றவாறு அம்மா ஒரு அறையைக் காட்டுகிறாள்.

அம்மா:    நான் இங்கேதான் படுப்பேன். நீ அங்கே படுக்கலாம். ராத்திரி கூப்பிட்டா கேக்குற மாதிரி இடமா பார்த்து படு.

அம்மா நடக்கிறாள்.

சமையலறைக்குப் பக்கத்தில் இருந்தவாறு-

அம்மா:    சமையலுக்கு இந்தக் கிணத்துலதான் தண்ணி எடுக்கணும். எங்கோ இருந்து தண்ணி கொண்டு வரணும்ன்ற அவசியம் இல்ல. செறுமன் (தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஆண்) வந்து விறகு பொளந்து தருவான்.

அவள் சமையலறைக்கு அருகில் வருகிறாள். அங்கு நின்றவாறு-

அம்மா:    இங்கே எல்லாமே சுத்தமா இருக்கணும். போன கோடை கால விடுமுறையில ஹரிதாசன் இங்கே வந்தப்போ, சோத்துல ஒரு முடியைப் பார்த்துட்டான். அவ்வளவுதான் - மூணு நாளா சாப்பாடே வேண்டாம்னுட்டான். உன்னோட சாமான்களை எல்லாம் வடக்கே இருக்குற சின்ன அறையில வச்சுக்கோ.

அவள் சமையலறை பக்கமிருந்து, சிறிய அறையை நோக்கி நடக்க, அம்மா வாசலை நோக்கி நடக்கிறாள்.

5

ம்மா முன் வாசலில் நின்றிருக்கிறாள்.

கணக்குப்பிள்ளை அச்சுதன் நாயர் மடியில் இருந்து பணத்தை எடுத்து அம்மாவின் கையில் தருகிறார்.

அச்சுதன் நாயர்: அந்த ஆளு தரவேண்டியதை முழுசா தரல. இன்னும் இருபது ரூபாய பாக்கி தரணும். நாளைக்கு தோட்ட வேலைக்கு ரெண்டு ஆம்பளைகளை வரச் சொல்லி இருக்கேன்.

பணத்தை வாங்கி அம்மா மடியில் வைக்கிறாள்.

அம்மா:    அக்கரையில இருந்து ஒரு வண்ணாத்திப் பொண்ணு வீட்டு வேலை செய்ய வந்திருக்கா. நெய்கன் சொன்னானாம்.

அச்சுதன் நாயர்: அப்படியா? நெய்கன்கிட்டயும் நான் சொல்லியிருந்தேன். ஆள் எப்படி?

அம்மா: இப்போத்தானே வந்திருக்கா? கூப்பிடுறதுக்கும் சொல்றதுக்கும் வீட்டுக்குள்ளே ஒரு ஆளு இருக்கே! அதுதானே இப்போ முக்கியம்! (குரலைச் சற்றுத் தாழ்த்தி) பார்க்குறதுக்கு வண்ணாத்தி மாதிரியே இல்ல. அதுனால இதை நாமும் யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்.

அச்சுதன் நாயர்: சரி... நல்லது நடக்கட்டும்.

அம்மா:    பாக்குக்காரன் நாளைக்குத்தான் பணம் தர்றதா சொன்னான்.

அச்சுதன் நாயர்: நாளைக்கு நான் போய் பாக்குறேன். (இலேசான தயக்கத்துடன்) ஒரு அஞ்சு ரூபா வேணும்.

அம்மா:    அதை எடுத்துட்டு மீதியைக் கொடுத்திருக்கலாமே! (மடியில் இருந்து பணத்தை எடுத்து அதில் மிகவும் கவனமாக ஒரு ஐந்து ரூபாய் நோட்டை உருவி எடுத்து அச்சுதன் நாயரின் கையில் தருகிறாள்.) விளக்கு வைக்கிற நேரமாயிடுச்சே, அச்சுதன் நாயரே!

அந்த நிமிடத்தில் உள்ளேயிருந்து குஞ்ஞிமாளுவின் குரல்:

“விளக்கு... விளக்கு...!”

குஞ்ஞிமாளு குத்து விளக்குடன் வாசலுக்கு வருகிறாள். கிழக்கு நோக்கி விளக்கைக் காட்டியவாறு வாசலின் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு உள்ளே போகிறாள்.

அச்சுதன்நாயர் அவளையும் விளக்கையும் பார்த்து, பின்னர் அம்மாவைப் பார்க்கிறார். அம்மாவின் முகத்தில் ‘பெண் எப்படி?’ என்ற கேள்வி தெரிகிறது.

அச்சுதன்நாயர்:  தப்பா சொல்றதுக்கு இல்ல. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் வயசு அதிகமா இருக்குற மாதிரி ஒரு வேலைக்காரியைப் பார்த்திருக்கலாம்.

6

ரவு.

அம்மாவின் கால்களைப் பிடித்துவிட்டவாறு கட்டிலுக்குக் கீழே குஞ்ஞிமாளு.

அம்மா:    உனக்குக் கீழே உள்ளவங்க படிக்கிறாங்களா?

குஞ்ஞிமாளு:    தம்பிங்க ரெண்டு பேரும் படிக்கிறாங்க.

அம்மா:    உன்னோட அப்பா எதுவும் தரமாட்டாரா?

குஞ்ஞிமாளு:    (கண்களை இலேசாக தாழ்த்தி) முதல்ல கொடுத்துக்கிட்டு இருந்தாரு. இப்போ... தம்பிங்க ரெண்டு பேரையும் அனுப்பிப் பார்த்தோம். ஒண்ணும் கொடுத்து விடல.

(காலைப் பிடித்து விடுவது தொடர்கிறது.)

அம்மா:    பாவம்

குஞ்ஞிமாளு:    இப்போ அவர் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.

அம்மா:    (யாரிடம் என்றில்லாமல்) ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும், தலையெழுத்து நல்லா இருக்கணும். (அமைதி) சரி... நீ வௌக்க அணைச்சிட்டு ஒரு பக்கம் போய் படு.

அவள் வெளியே செல்கிறாள்.

குஞ்ஞிமாளு மங்கலான இருட்டில் பாயும், தலையணையும் போட்டுவிட்டு சில நிமிடங்கள் என்னவோ சிந்தனையில் இருக்கிறாள். அவளின் முகத்தில் சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

அவளின் முகத்தில் புலர் காலைப்பொழுதின் ரேகைகள்-

7

ங்கலான வெளிச்சமுள்ள அதிகாலைப் பொழுது.

குஞ்ஞிமாளு நடந்து வாசலுக்கு வருகிறாள். கையில் இருந்த சிறிய பாத்திரத்தில் இருந்த தண்ணீரால் முகத்தைக் கழுவுகிறாள். தொங்கிக் கொண்டிருக்கும் டப்பாவில் இருந்து உமிக்கரியை எடுத்து பல் துலக்க ஆரம்பிக்கிறாள்.

முற்றத்தில் அவள் பல் துலக்கியவாறு நின்றிருக்க, தோட்டத்தில் சூரியனின் முதல் ஒளிக் கீற்றுகள் தெரிகின்றன.

கொஞ்ச நேரத்தில் சூரியனின் ஆக்கிரமிப்பு அதிகமாகிறது.

தொழுவத்தில் இருந்த பசுவின் குரல்-

அவள் சமையலறையின் அருகில் இருக்கும் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து பாத்திரத்தில் நிறைக்கிறாள். தொடர்ந்து அடுப்பில் தீ மூட்டுகிறாள்.

மீண்டும் பசுவின் குரல்.

அம்மா:    அதைக் கொஞ்ச நேரம் அவிழ்த்துக் கட்டு. சில நேரங்கள்ல ஆளுகளைப் பார்த்தா, அது ஏதாவது குறும்புத்தனங்கள் செய்யும். கவனமா இருக்கணும்.

குஞ்ஞிமாளு:    தண்ணி கொதிக்கிறப்போ, நான் கொஞ்சம் குளிச்சிட்டு வந்திடட்டா?

அம்மா மெதுவாக தலையை ஆட்டுகிறாள் - சம்மதிக்கிற மாதிரி.

வெளியே தொழுவத்திற்கு முன்னால் நின்றவாறு குஞ்ஞிமாளு பசுவையே வைத்த கண் எடுக்காது பார்க்கிறாள். பசு கொம்புகளை ஆட்டியவாறு அவளையே பார்க்கிறது.

குஞ்ஞிமாளு:    நீ ஆளுகளை மிதிப்பியா? கொம்பால குத்துவியா?

பசுவின் பதில் செயல்-

குஞ்ஞிமாளு கள்ளங்கபடமில்லாமல் சிரித்தவாறு நின்றிருக்கிறாள்.

குஞ்ஞிமாளு:    என்னைக் கீழே விழ வைக்கலாம்னு நினைச்சா, பிறகு... நான் கஞ்சி, தண்ணி எதுவும் உனக்குத் தர மாட்டேன். வைக்கோல்கூட போட மாட்டேன். முடிஞ்சா நான் உன்னை உதைக்கக்கூட செய்வேன்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel