Lekha Books

A+ A A-

நீலத்தாமரை - Page 10

neela-thaamarai

அச்சுதன் நாயர்: மத்தவங்களைப் போலவா இங்கேயுள்ள விஷயம்? இங்க இருக்குறதே ஒரே ஒரு ஆண் பிள்ளைதான். வேலை பார்த்து மாச சம்பளம் கட்டாயம் வாங்கணும்ன்ற நிலைமை எல்லாம் இங்கே இல்ல. அதுனாலதான் அப்பு மேனன் இந்த அளவுக்கு அவசரப்படுறாரு.

அம்மா:    வேலை விஷயமா நீ ஏதாவது ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்கியா தாசா?

ஹரிதாசன்: என் நண்பன் ஒருத்தனோட அப்பாக்கிட்ட சொல்லி வச்சிருக்கேன். முதல்ல ரிசல்ட் வரட்டும்மா. அதுதான் இப்போ எனக்கு பயமே.

அம்மா:    டைஃபாயிடா கெடந்து முழுசா குணமாகுறதுக்கு முன்னாடியே பி.ஏ. எழுதினியே! அப்போ உனக்கு ஒரு சந்தேகமும் இல்லியே!

ஹரிதாசன்:     (பத்திரிகையை திண்ணையில் வைத்துவிட்டு) அன்னைக்கு எனக்கு பயமே இல்ல. இப்போ ஒரு பேப்பரைப் பற்றி நான் ரொம்பவும் கவலையா இருக்கேன்.

(வெளியே செல்கிறான்)

அம்மா:    (கணக்குப் பிள்ளையிடம்) இவனுக்கு எப்பவுமே சந்தேகம்தான். ஆனா, ரிசல்ட் வர்றப்போ பாருங்க முதல் வகுப்புல பாஸ் பண்ணியிருப்பான். இவனோட குணமே இதுதான். மனசுல கொஞ்சம்கூட உறுதி கிடையாது. பாவம்!

29

ரவு.

ஹரிதாசனின் படுக்கையறை. சிறிது நேரம் அங்கு இருந்த பிறகு குஞ்ஞிமாளு தன்னுடைய இடத்திற்குப் போவதற்குத் தயாராக இருக்கிறாள். அறையில் இலேசான வெளிச்சம் இருக்கிறது. அவன் ஒரு துண்டு மட்டும் கட்டிக் கொண்டு படுத்திருக்கிறான். அவள் தனக்கு கொஞ்சம் கூட தகுதியில்லாத இடத்தில் இருப்பது போல மனதில் நினைத்துக் கொண்டு ப்ளவுஸின் கடைசி பட்டனைப் போட்டுக் கொண்டிருக்கிறாள். மெதுவான குரலில் குஞ்ஞிமாளு:

“பரீட்சையைப் பற்றி ஏன் இந்த அளவுக்கு பயம்?”

ஹரிதாசன்:     (தாழ்ந்த குரலில்) ஒரு பேப்பர் ரொம்பவும் கஷ்டமா இருந்துச்சு.

குஞ்ஞிமாளு:    கவலைப்படாதீங்க. நீங்க பயப்படுற மாதிரி எதுவுமே நடக்காது.

ஹரிதாசன் அவளை வியப்புடன் பார்க்கிறான்.

குஞ்ஞிமாளு:    சந்தேகம் இருந்தா, நான் அதைத் தீர்க்குறேன்.

அவன் எதுவுமே பேசாமல், சிரிக்கிறான்.

குஞ்ஞிமாளு:    (மிடுக்காக) சிரிக்காதீங்க... நான் சும்மா விளையாட்டுக்குச் சொல்லல. இதை முன் கூட்டியே தெரிஞ்சிக்கிறதுக்கு வழி இருக்கு.

ஹரிதாசன்:     நீதான் போர்ட் ஆஃப் எக்ஸாமினர்ஸ் போலிருக்கு?

குஞ்ஞிமாளு:    என்ன சொல்றீங்க?

ஹரிதாசன்:     மார்க் போடுறது நீதானோன்னு கேட்டேன்.

குஞ்ஞிமாளு:    நான் போட வேண்டாம். எல்லாம் தெரிஞ்ச ஒரு ஆள் இருக்கானே?

அவள் மிடுக்காக வெளியே நடந்து செல்கிறாள். அவன் திரும்பிப் பார்க்கிறான். தலையணையில் அவள் தலை வைத்து படுத்த பகுதியை அவன் முகர்ந்து பார்க்கிறான். முழுமையான மனநிறைவுடன் அடுத்த நிமிடம் கண்களை மூடி உறங்கி ஆரம்பிக்கிறான்.

30

மையலறைப் பகுதி.

மாலை நேரம். சிறிய ஒரு துண்டைத் தோளில் இட்டவாறு உள்ளே இருந்து வந்த குஞ்ஞிமாளு செறுமி பெருக்கிக் கூட்டி வைத்திருக்கும் குப்பைகளை நெருப்பில் போட்டு எரிக்கிறாள். அதைப் பார்த்தவாறு நின்றிருக்கும் அம்மாவின் அருகில் வந்து குஞ்ஞிமாளு (தயங்கியவாறு):

எனக்கு ஒரு ரூபா வேணும்...

அம்மா:    வீட்ல இருந்து யாராவது வந்திருக்காங்களா என்ன?

குஞ்ஞிமாளு:    யாரும் வரல. இது... இது கோவில்ல வழிபாடு நடத்துறதுக்கு...

அம்மா:    சில்லறையை போட்டு வைக்கிற டப்பாவுல இரண்டு ரூபாயும் கொஞ்சம் சில்லறையும் இருக்கு. அதுல இருந்து எடுத்துக்கோ.

அவள் சென்ற பிறகு, அம்மா வேலைக்காரியிடம்:

“வண்ணாத்திப் பொண்ணுன்னாங்க. இருந்தா என்ன? நல்ல குணம்... கடவுள் பக்தி... ஒரு குறையும் சொல்றதுக்கு இல்ல. பாவம்...”

செறுமி:   அந்த மீனாட்சி பாட்டி கஞ்சியும் சோறும் தர்றப்போ, என் கையில செலவுக்கு ஏதாவது தருவாங்க. இது அப்படியெல்லாம் எதுவும் தர்றதில்ல...

31

கோவிலில் இருந்து கொட்டும், பாட்டும் கழிந்து மாராரும் மற்றவர்களும் வெளியே வருகிறார்கள். கூட்டத்தில் குஞ்ஞிமாளுவும், அம்மிணியும் இருக்கிறார்கள். அம்மிணியுடன் பன்னிரெண்டும் எட்டும் வயதான இரண்டு சிறுமிகள்.

சிறுமிகள் பலர் கூட்டமாக ஆலமரத்திற்கு அருகில் அமர்ந்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கு முன்னால் அம்மிணியும் குஞ்ஞிமாளுவும்.

அம்மிணி: என்கிட்ட கூட சொல்ல மாட்டியா?

குஞ்ஞிமாளு:    இதை மட்டும் சொல்லவே மாட்டேன்.

அம்மிணி: பணம் வச்சு சாமி கும்பிடுறேன்னா, நிச்சயம் இது சின்ன விஷயமா இருக்காது. (சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு) நான் சொல்லட்டுமா?

‘சொல்லு...’ என்று சொல்வது மாதிரி சற்று பயத்துடன் குஞ்ஞிமாளு தலையை ஆட்டுகிறாள்.

அம்மிணி: குஞ்ஞிமாளு, உன்னை யாரோ பொண்ணு கேட்டிருக்காங்க. இந்த விஷயத்தை யாரோ உன்கிட்ட வந்து சொல்லி இருக்காங்க. இது நடக்குமா நடக்காதான்னு தெரிஞ்சிக்கணும்னு நீ நினைக்கிறே. அதுக்காகத்தான் நீ பணம் வச்சு, கடவுள்கிட்ட வேண்டி நிக்கிறே. என்ன - நான் சொன்னது உண்மைதானா? சொல்லு...

குஞ்ஞிமாளு:    (சிரித்தவாறு) இல்ல... இல்ல... உன்னால நிச்சயம் இதைக் கண்டுபிடிக்கவே முடியாது. (குரலை மாற்றி) இங்க பாரு... பின்னாடி நான் உனக்கு நிச்சயம் இதைச் சொல்வேன். கட்டாயம்... இப்ப நீ இதைப் பற்றி என்கிட்ட கேட்காதே. என்ன?

32

றுநாள்.

பகல். ஹரிதாசனின் அறை.

அவன் ஒரு டிரான்சிஸ்டர் ரேடியோவின் பாகங்களை முழுமையாக கழற்றி எடுத்து, மீண்டும் அவற்றைப் பொருத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறான்.

அப்போது குஞ்ஞிமாளு கடந்து வருகிறாள்.

ஹரிதாசன்:     (அவளைப் பார்த்து இதுவும் ஒரு சந்தர்ப்பமாக இருக்கமா என்ற எண்ணத்துடன்) அம்மா என்ன பண்றாங்க?

குஞ்ஞிமாளு:    (மெதுவான குரலில்) சமையலறையில் இருக்காங்க. இங்க பாருங்க.... பரீட்சையைப் பற்றி நீங்க இனி கவலைப்படவே வேண்டாம்! தெரியுதா? இனிமேல் நீங்க எது நினைச்சாலும் நடக்கும், இந்தாங்க....

அவள் கையில் இருந்த பேப்பர் பொட்டலத்திற்குள் ஒரு இலையில் சுற்றப்பட்டிருந்த நீலத்தாமரை அடங்கியிருந்த கோவில் பிரசாதத்தை அவனிடம் தருகிறாள்.

ஹரிதாசன்:     என்ன இது?

குஞ்ஞிமாளு: இந்தச் சந்தனத்தை எடுத்துக்கங்க. பிரசாதம். நான் கும்பிட்டதுக்கு, நிச்சயம் பலன் கிடைக்காமல் போகாது.

அவன் பிரசாதத்தையும், கள்ளம் கபடமற்ற அவளின் முகத்தையும் பார்க்கிறான். பிறகு இலையை அவளிடமிருந்து வாங்குகிறான்.

33

குஞ்ஞிமாளு கீழே அம்மாவுக்கு அருகில் சமையலறையில்-

அம்மா:    நான் அடுப்பைப் பார்த்துக்குறேன். நீ வைத்தியரைப் போய்ப் பார்த்து களிம்பு வாங்கிட்டு வா. சீக்கிரம். அச்சுதன் நாயர் நாளைக்குத்தான் வருவாரு.

குஞ்ஞிமாளு வெளியே செல்ல முயலும்போது திரும்பி-

“மேலே சாயா கொடுக்கணுமே...”

அம்மா:    நான் கொடுத்துக்குறேன்...

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel