Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

நீலத்தாமரை - Page 8

neela-thaamarai

அவள் பதிலுக்குக் காத்திராமல் போகிறான். அவனின் சிகரெட் புகையோடு வார்த்தைகள் சேர்ந்து ஒலிக்கின்றன. அவள் ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் செயலற்று நிற்கிறாள்.

அவன் உண்டாக்கிய புகைப்படலம் பெரிதாகி அவளின் தலையைச் சுற்றி தெரிகிறது. பின்னர் அது காணாமல் போகிறது.

20

ன்று இரவு.

குஞ்ஞிமாளுவின் படுக்கையறை. அவள் அமர்ந்திருக்கிறாள். எங்கோ தூரத்தில் இருந்து ராக ஆலாபனை கேட்கிறது. அவள் விளக்கை அணைத்து படுக்கிறாள். உறங்கவில்லை. அவளின் முகத்தில் ஒருவித பதட்டம் தெரிகிறது.

மீண்டும் எழுந்து உட்காருகிறாள். என்ன செய்வது என்று தெரியாத நிலை.

அவள் என்னவோ தீர்மானித்ததுபோல் படுக்கிறாள். கண்களை மூடியபடி மெல்ல பிரார்த்திக்கிறாள்:

“கடவுளே!”

21

திகாலை நேரம்.

குளியலறையில் நீர் நிரப்பி விட்டு வெளியே வரும் குஞ்ஞிமாளு தனக்கு முன்னால் பிரஷ்ஷால் பல் துலக்கிக் கொண்டு நின்றிருக்கும் ஹரிதாசனைப் பார்த்து நிற்கிறாள். மேலே சொருகிய முண்டை கீழே இறக்கிவிட்ட அவள் தயங்கி நிற்க, அவளின் தோள் வழியே பார்த்து யாருமில்லை என்பது உறுதியானவுடன்-

ஹரிதாசன்: நீ ஏன் வரல?

அவள் பதட்டத்துடன் நின்றிருக்கிறாள். தலை குனிந்து கடந்து செல்லும்போது, பின்னால் இருந்து ஒரு வார்த்தை அவளின் முகத்தில்-

ஹரிதாசனின் குரல்:

“வரணும்...”

22

நீலத்தாமரை விரியக்கூடிய குளத்தின் பகுதி. மதிலையொட்டி குஞ்ஞிமாளுவும் அம்மிணியும். குஞ்ஞிமாளு குளித்து முடித்து விட்டாள். அம்மிணி குளிக்கப் போகிறாள்.

குஞ்ஞிமாளு:    ஒரு ரூபா என் கையில இருந்திருந்தா நான் இன்னைக்கு படி மேல வச்சு கடவுளை வணங்குறதா இருந்தேன்.

அம்மிணி: எதைத் தெரிஞ்சிக்கிறதுக்கு?

குஞ்ஞிமாளு:    இல்லாமலா அதைச் செய்வேன்?

அம்மிணி: சும்மா சோதிக்க வேண்டாம்.

குஞ்ஞிமாளு:    கடவுளை நான் சோதிக்கல,அம்மிணி. எனக்கு முக்கியமான ஒரு விஷயத்தைத் தெரிஞ்சிக்கணும்.

கேலிக் குரலில் அம்மிணி:

“யார்கிட்டயும் என்னன்னு சொல்ல முடியாத விஷயமா?”

குஞ்ஞிமாளு:    (உறுதியான குரலில்) இது அந்த மாதிரி எதுவும் இல்ல அம்மிணி...

அவள் நடக்கிறாள்...

கண்களை மூடி பிரார்த்தித்த பிறகு, அவள் திரும்பி நடக்கிறாள்.

ஆலமரத்தின் அருகில் வருகிறாள்.

நாணு ஆசானும், குஞ்ஞிமாளுவும். அவளுக்கு கிழவரிடம் என்னவோ சந்தேகம் கேட்கத் தோன்றுகிறது. கிழவரும் அதைப் புரிந்து கொள்ளாமல் இல்லை. கண்களில் ஒருவித பிரகாசத்துடன், புன்னகை தவழ, கிழவர் அவள் என்ன சொல்லப் போகிறாள் என்ற எதிர்பார்ப்புடன் அமர்ந்திருக்கிறார்.

கிழவர்:    என்னம்மா உன்னோட சந்தேகம்?

குஞ்ஞிமாளு:    ஒண்ணுமில்ல..

கிழவர்:    இருக்கு... உன் முகத்தைப் பார்க்கும்போதே தெரியுதே!

குஞ்ஞிமாளு பதைபதைப்புடன் நிற்கிறாள்.

குஞ்ஞிமாளு:    படியில பணம் வைக்க முடியாதவங்க பிரார்த்தனை செஞ்சா, பூ விரியாதா?

கிழவர்:    குழந்தை... இது அவங்கவங்களைப் பொறுத்தது. சிலருக்கு பதில் தாமரைக் குளத்துல கிடைக்கும். வேறு சிலருக்கு இந்த ஆலமரத்தோட இலைகள் பதில் சொல்லும். (அவளை உற்றுப் பார்த்துவிட்டு, புன்னகையுடன்) விஷயம் ரொம்பவும் முக்கியமானதோ?

அவள் நேராக பதில் எதுவும் கூறாமல் முகத்தைத் தாழ்த்தியவாறு ஆசானுடன் இதுவரை பேசிக் கொண்டிருந்ததே தவறு என்பது மாதிரி வேகமாக நடக்கிறாள்.

23

கல்.

மனதில் அமைதி இல்லாமல் இருக்கும் குஞ்ஞிமாளு தோட்டத்தில் பசுவிற்குத் தீனி போடுகிறாள். அவளின் சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கும் முகம்.

பசு அவளை உற்றுப் பார்க்கிறதோ என்று அவளுக்கு சந்தேகம். அவள் யாரிடம் என்றில்லாமல் முணுமுணுக்கிறாள்.

“எனக்குத் தெரியாது கடவுளே! நான் யார்கிட்ட சொல்லுவேன்?”

பசு பதில் கூறுகிற மாதிரி கத்துகிறது.

24

கோவிலுக்கு அருகில் பூசாரி, இரண்டு மூன்று கோவில் பணியாளர்கள். சட்டை போடாத நான்கைந்து ஊர்க்காரர்கள்.

ஒரு கிழவன்:   ராத்திரி கோவில்ல சுத்தி கலசம் இருக்கு. அப்போ பூ பூக்கும்.

நம்பூதிரி:  ஆனா, பூ பூக்க யாரும் பணம் வைக்கலியே!

இந்த மாதிரி விஷயங்களில் நம்பிக்கை இல்லாத ஒரு ஆள்:

“நான்தான் எப்பவும் சொல்றேனே, பணம் வைக்கிறதுக்கும் பூவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லைன்னு. தண்டும் வேரும் தண்ணிக்குள்ளேதானே இருக்கு! அப்போ அதுக்குன்னு நேரம் வர்றப்போ உண்டாகத்தான் செய்யும். அதுக்காக உலகத்துல இல்லாத விஷயத்தைச் சொல்லி கொண்டாடித் திரிய வேண்டாம்....”

அவன் கூட்டத்தை விட்டு வெளியே செல்கிறான்.

ஆலமரத்துக்குக் கீழே இருக்கும் கிழவர்.

கிழவர் சற்று தூரத்தில் பேசிக் கொண்டு நின்றிருக்கும் ஒரு சிறிய கூட்டத்தையே உற்றுப் பார்க்கிறார். பிறகு தனக்குத் தானே சிரித்துக் கொள்கிறார்.

சற்று தூரத்தில் நடந்து போகும் குஞ்ஞிமாளுவை அவர் கூப்பிடுகிறார். - உரத்த குரலில்.

“இங்கே வா!”

குஞ்ஞிமாளு தூரத்தில் நிற்கிறாள் - தயக்கத்துடன். பிறகு அதே தயக்கத்துடன் நெருங்கி வருகிறாள்.

கிழவர்:    கோவில் குளத்தைப் பார்த்துட்டுப் போ. நேற்று நீ கேட்ட கேள்விக்கு அங்கே பதில் இருக்கு.

அவள் வியந்து நிற்கிறாள். தொடர்ந்து புன்னகைக்கிறாள். நெருங்கி வருகிறாள். திரும்பி நடக்கிறாள்.

இப்போது அவள் வேகமாக காலடி எடுத்து வைத்து நடக்கிறாள். படு வேகமாக நடந்து ஆட்கள் யாரும் இல்லாத மதிலின் ஒரு ஓரத்தில் நின்றவாறு பார்க்கிறாள். கீழே குளம். குளத்தில் ஒர நீலப்பூ.

அவளையுமறியாமல் ஒரு பெருமூச்சு வெளிப்படுகிறது. அவள் திரும்பி நடக்கிறாள்.

மீண்டும் ஆலமரத்துக்குக் கீழே கிழவர் புன்னகை ததும்ப நின்றிருக்கிறார்.

“இப்போ சந்தேகம் தீர்ந்துடுச்சா, குழந்தை?”

குஞ்ஞிமாளு முகத்தைக் குனிந்தவாறு புன்னகைக்கிறாள்.

அந்த முகத்தில் குத்துவிளக்கின் எரிகின்ற திரியின் பிரகாசம். அவள் வீட்டு வாசலில் மாலை நேர விளக்கு ஏற்றி, உள்ளே போகும்போது, வாசலின் அருகில் ஹரிதாசன் நின்றிருக்கிறான். அவனுக்காக அவள் சுடர் விட்டுக் கொண்டிருக்கும் குத்து விளக்குடன் சற்று விலகி நிற்க, அவனின் உதடுகள் மெல்ல உச்சரிக்கின்றன:

“நீ வரணும்...”

25

ணி இருக்கும் அறையில் அமர்ந்து அம்மா ராமாயணமோ என்னமோ படித்துக் கொண்டிருக்கிறாள். அந்த அறையைக் கடந்து குஞ்ஞிமாளு ஏதோ ஒரு வேலைக்காக மேலே போகிறாள். அவள் தன் காலை மூன்றாவது படியில் வைக்கிறபோது, அது இலேசாக அசைகிறது.

அம்மா ஒரு நிமிடம் தான் படித்துக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, அவளைப் பார்க்கிறாள். மீண்டும் புத்தகம் வாசிப்பதில் ஈடுபடுகிறாள்.

மேலே அறையைப் பெருக்கி சுத்தம் செய்து விட்டு கீழே வரும் குஞ்ஞிமாளு. குஞ்ஞிமாளுவின் கால்கள் இந்த முறை ஏணியின் மூன்றாவது படியையே மிதிக்காமல் கடந்து மிதித்து எந்தவித பிரச்சினையும் உண்டாக்காமல் கீழே வருகின்றன.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version