Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

நீலத்தாமரை - Page 20

neela-thaamarai

64

ரிதாசன் மனதில் கலவரத்துடன் மெதுவாக நடந்து கோவில் பகுதியை அடைகிறான். தூரத்தில் கோவில் குளத்தின் அருகில் ஆட்களின் கூட்டம் தெரிகிறது. எதிரே வந்த ஒரு ஆள் அவனைப் பார்த்து நிற்கிறான்.

“ராத்திரி விழுந்திருக்கணும். அப்படின்னாத்தான் இப்போ பிணம் நீருக்கு மேல வர முடியும்!”

ஹரிதாசன் தளர்ந்து போய் நிற்கிறான்.

தளர்ச்சியையும் பதைபதைப்பையும் வெளியே காட்டிக் கொள்ளாமல், என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றிருக்கும் ஹரிதாசனிடம்:

அந்த ஆள்:     எங்கே போறீங்க?

ஹரிதாசன்:     எங்கேயும் இல்ல.

அந்த ஆள்:     ஷாரடிக்கும் வாரஸ்யார்க்கும் அறிவே இல்ல. இல்லாட்டி அம்மிணி இப்படி ஒரு காரியத்தைச் செய்திருப்பாளா?

ஹரிதாசன்:     அம்மிணியா?

அந்த ஆள்:     ஷாரத்தெ வீட்டு அம்மிணிதான்.

அவன் போகிறான்.

ஹரிதாசன் உடல் சோர்வடைந்து நிற்கிறான். முதலில் ஒரு சிறு சிரிப்பின் அலை அவனின் முகத்தில். பிறகு... எதற்கு என்றே தெரியாமல் கையைத் தலையில் வைத்தவாறு அவன் மெதுவான குரலில் தேம்பித் தேம்பி அழுகிறான்.

ஆலமரத்துக்குக் கீழே கவலையுடன் நின்றிருக்கும் குஞ்ஞிமாளு, கிழவர். குஞ்ஞிமாளுவின் முகத்தில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்கிறது.

கிழவர்:    ம்... உன்னோட சினேகிதி போயிட்டா.

குஞ்ஞிமாளு:    நானும் இங்கேயிருந்து போகப் போறேன்.

கிழவர்:    எங்கே?

குஞ்ஞிமாளு:    வீட்டு படியில ஏறக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. கிழக்கும்பாட்டு வீட்டைப் பூட்டிட்டு போறாங்க. எங்கேயாவது போக வேண்டியதுதான். வேலைக்காரிகளைத் தேவைப்படுற ஏதாவதொரு வீடு இல்லாமலா போகும்?

கிழவர்:    (கவலையுடன்) எனக்குன்னு ஒரு வீடும் இல்ல, மகளே. எனக்கு இருக்குறதே இந்த ஆலமரத்தோட அடிதான் (சோகத்துடன் புன்னகைக்கிறார்).

குஞ்ஞிமாளு நடக்கிறாள்.

65

வள் வாசலை அடையும்போது அம்மா, ரத்னம், ஹரிதாசன் மூவரும் புறப்படுவதற்குத் தயாராக இருக்கிறார்கள். முற்றத்தில் கூலிக்காரன் நின்றிருக்கிறான். பின்னால் அச்சுதன்நாயர்.

அம்மா:    உன்னோட சாமான்கள் சமைலறைக்கு வெளியே இருக்கு.

அவள் ஒன்றுமே பேசாமல் அமைதியாக நிற்கிறாள்.

ரத்னம் அவளின் அருகில் வந்து கஷ்டப்பட்டு சிரிப்பை வரவழைத்து:

ரத்னம்:    நான் வரட்டுமா, குஞ்ஞிமாளு?

குஞ்ஞிமாளு கண்ணீருடன் புன்னகைக்க முயற்சிக்கிறாள். அப்போதுதான் அவள் பார்க்கிறாள்- அப்புக்குட்டன் வந்து கொண்டிருக்கிறான். புறப்பட்டுக் கொண்டிருக்கும் அவர்களைப் பார்த்த அவன், ஓரளவுக்கு விஷயத்தைப் புரிந்து கொண்டு நிற்கிறான்.

அவன் ஹரிதாசனைப் பார்த்துச் சிரிக்கிறான்.

ஹரிதாசனுக்கு எரிச்சல் உண்டாகிறது.

ஹரிதாசன்:     அப்போ நீ ரொட்டி வேலைக்குப் போகல!

அப்புக்குட்டன்:  (பணிவுடன்) இல்ல. நாட்டுல அழுக்கைச் சரி பண்ண யாராவது ஆள் இருந்தாகணும்ல...

ஹரிதாசனின் முகத்தில் தெரியும் உணர்ச்சியின் வெளிப்பாடு-

அவர்கள் புறப்படுகிறார்கள்.

ஆள் இல்லாத வீட்டின் முன்னால் அவளும், அப்புக்குட்டனும் மட்டும்.

அப்புக்குட்டன்:  உன்னோட சாமான்கள் எங்கே?

அவள் சிலை போல மவுனமாக நின்றிருக்கிறாள்.

66

மீண்டும் கிராமத்திற்கு வரும் ஒற்றையடிப்பாதை.

சிறிய ஒரு சுமையுடன் குஞ்ஞிமாளு நீண்டு போகும் அந்த கிராமத்தின் ஒற்றையடிப்பாதை வழியே நடந்து போகிறாள்.

அவள் போவதையே பார்த்தவாறு நின்றிருக்கிறான் அப்புக்குட்டன்.

அவனும் அவளுக்குப் பின்னால் நடக்க ஆரம்பிக்கிறான்.

அப்போது ஆற்றைக் கடந்து இன்னொரு வயதான கிழவியும், ஒரு இளம்பெண்ணும் வந்து கொண்டிருக்கிறார்கள். அவள்கள் வழியில் பார்த்த ஒரு கிராமத்து மனிதனிடம் கேட்கிறார்கள்:

“கெழக்கினியாத்து வீட்டுக்கு எப்படி போகணும்?”

கிராமத்து ஆள்: நேரா நடந்து கோயிலுக்குப் பக்கத்துல போய் விசாரிங்க. சொல்லுவாங்க.

மற்றொரு தாசி கிராமத்திற்குள் நுழைகிறாள்- மற்றொரு வீட்டிற்கு.

Page Divider

 
CTRL + Q to Enable/Disable GoPhoto.it

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version