Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

லத்தியும் பூக்களும்

லத்தியும் பூக்களும்

உறூப்

தமிழில் : சுரா

 

டது பக்கமாக சாய்ந்த கையெழுத்தில் எழுதிய அந்த காதல் கடிதத்தை வாசித்து முடித்தபோது, எனக்கு என்னவோ தோன்றியது. அவள் எழுதியிருந்தாள்: ‘நீங்கள் என்னை மறந்து விட்டீர்களா? இனி எப்போதும் நினைக்க மாட்டீர்களா?’

உண்மை. நான் ஒரு இதயத்தில் சூனியம் நிறைந்தவனாக ஆகி விடுகிறேன்.

Last Updated on Thursday, 08 June 2017 14:05

Hits: 4389

Read more: லத்தியும் பூக்களும்

குளிர்பானம்

குளிர்பானம்

பி.கேசவதேவ்

தமிழில் : சுரா

 

குளிர்பானம் ... குளிர்பானம் .....’ தெருவின் ஒரு ஒடுங்கிய மூலையிலிருந்து தொடர்ந்து புறப்பட்டுக் கொண்டிருந்த அந்த குரல், சுட்டெரித்துக் கொண்டிருந்த வெயிலில் வியர்வை ஒழுக நடந்து கொண்டிருந்த ஜானுவை அந்தப் பக்கமாக ஈர்த்தது. சர்பத் நிறைக்கப்பட்டிருந்த சில புட்டிகளும் அந்த புட்டியின் வாய்ப் பகுதியில் ஒவ்வொரு எலுமிச்சம் பழமும் நான்கைந்து கண்ணாடி டம்ளர்களும் வரிசையாக வைக்கப்பட்டிருந்த ஒரு மேஜைக்குப் பின்னால் நின்றவாறு அஹம்மது கூறிக் கொண்டிருந்தான். !ஹாய்! ஹாய்! முதல் தரமான குளிர்பானம் .... ஒரு டம்ளர் குடித்து விட்டுச் செல்லுங்கள். குடிச்சிட்டுப் போங்க.. குளிர்பானம்.....குளிர்பானம்.....’

Last Updated on Thursday, 08 June 2017 11:29

Hits: 4106

Read more: குளிர்பானம்

ஆசாரிப் பெண்ணின் திருமணம்

ஆசாரிப் பெண்ணின் திருமணம்
எம். முகுந்தன்
தமிழில்: சுரா

சாரிப் பெண்ணின் திருமணத்திற்கு பொன் இல்லை. நான்கு ஆட்களிடம் கேட்டான். ஊரில் உள்ளவர்களிடம் கேட்டான். பொன் கிடைக்கவில்லை.

பெண்ணுக்கோ மார்பகம் வந்தது. திருமணம் செய்து கொடுப்பதற்கான வயது வந்தது. ஆசாரியால் பாதையில் இறங்கி நடக்க முடியவில்லை. குடும்பத்தில் உள்ளவர்களும் ஊரில் உள்ளவர்களும் கேட்பார்கள்:

Last Updated on Thursday, 30 June 2016 15:41

Hits: 3999

Read more: ஆசாரிப் பெண்ணின் திருமணம்

ஓர் இரவு

ஓர் இரவு
தகழி சிவசங்கரப்பிள்ளை
தமிழில்: சுரா

ரு சரியான வழியைக் கண்டு பிடிக்க வேண்டும். கண்டு பிடித்தே ஆக வேண்டும். அன்றே மருந்து வாங்கியாக வேண்டும். அதற்கும் மேலாக, மறுநாள் குழந்தைக்கான கல்விக் கட்டணத்தையும் கொடுக்க வேண்டும். அபராதத்தையும் சேர்த்து கட்ட வேண்டிய இறுதி நாள் அது. அந்த நகரத்திற்கு நான் இடம் மாற்றி வந்து, பதினைந்து நாட்களே ஆகியிருந்தன. தெரிந்தவர்கள் யாருமில்லை. மாதத்தின் மத்திய பகுதி. அதிகமாக எதுவும் வேண்டாம். இருபது ரூபாய் போதும்.

Last Updated on Thursday, 30 June 2016 15:38

Hits: 4111

Read more: ஓர் இரவு

சட்ட மீறல்

சட்ட மீறல்
தகழி சிவசங்கரப்பிள்ளை
தமிழில்: சுரா

ந்த பெரிய நகரத்திற்கு நான் வந்து சேர்ந்தது என்னுடைய மானத்தை விற்று வாழ்வதற்காக அல்ல. எந்தவொரு இளம்பெண்ணும் தன்னுடைய மானத்தை அப்படி மனதளவில் விட்டெறிவாள் என்றும் தோன்றவில்லை. தன்னுடைய மானத்தை ஒரு கடைச் சரக்காக ஆக்கி ஒருத்தி கூட விற்பனைக்கு வைத்துக் கொண்டு நடந்து திரிய மாட்டாள். மானத்தை இழந்து விட்டு, ஒருத்தி தன்னுடைய சரீரத்தை விற்பனைக்கு வைத்துக் கொண்டு நடந்து திரிகிறாள் என்று வரலாம். ஒரு பெண்ணின் மானம் ஒரே ஒரு தடவைதான் இழக்கப்படும்.

Last Updated on Friday, 03 June 2016 15:11

Hits: 3993

Read more: சட்ட மீறல்

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version