அனாதை பிணம்
- Details
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 4537
அனாதை பிணம்
தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில் : சுரா
ம
க்கார் அப்படித்தான் இறந்தான். இறப்பதற்குத்தான் ஊர்ந்து ... ஊர்ந்து அவன் மருத்துவமனைக்குச் சென்றான். அந்த பயணத்தில் அவன் நகரத்திலிருக்கும் பல முக்கிய வீடுகளின் வாசற்படிக்குச் சென்றான். அங்கு கிடந்து இறப்பதற்காக அல்ல... நாழி கஞ்சி நீருக்காக.... நான்கு விரல்கள் அளவிற்கு அகலம் கொண்ட துணிக்காக .... மழை நிற்கும் வரை அமர்ந்திருப்பதற்கு மட்டும் ... எல்லா இடங்களிலிருந்தும் அவன் விரட்டியடிக்கப்பட்டான். அப்படி விரட்டியடித்தவர்களை குறை கூற வேண்டிய அவசியமில்லை. வீட்டின் முன் பகுதியில் ஒரு அனாதை பிணம் கிடப்பது என்பது எந்த அளவிற்கு தொல்லை அளிக்கக் கூடிய ஒரு விஷயமாக இருக்கும்!