Category: சிறுகதைகள் Written by சுரா
பெண் விரிவுரையாளர் (பஞ்சாபி கதை)
அஜீத் கவுர்
தமிழில் : சுரா
கல்லூரின் 'ஸ்டாஃப் ரூமில்' திருமதி பட்நாகர், திருமதி.பாண்டே, செல்வி. துபே, திருமதி, சுத் ஆகியோர் ஏதோ ரகசிய விஷயத்தை விவாதித்துக் கொண்டிருந்தார்கள். நான்கு பேரும் மேஜையின் மீது கைகளை ஊற்றிக் கொண்டு முன்னோக்கி நகர்ந்து அமர்ந்திருந்தார்கள். அவர்களுடைய கண்களில் உற்சாகம் நிறைந்திருந்தது.
Category: சிறுகதைகள் Written by சுரா
அந்த பூ மொட்டு மலரவில்லை
பாறப்புரத்து
தமிழில் : சுரா
பச்சுலியின் முதல் நினைவு நாளன்றுதான் என்னுடைய முற்றத்திலிருந்த சிறிய பூந்தோட்டத்தில் 'டேலியா' பூத்தது. வெள்ளையும் சிவப்பும் கலந்த இதழ்களைக் கொண்ட ஒரே ஒரு பூ மட்டும்! லில்லியும் ஸினியாவும் பாப்பியும் மலர் மொட்டுகளை நீட்டிக் கொண்டிருந்தன. அவ்வளவுதான்...
Category: சிறுகதைகள் Written by சுரா
இருப்பவர்கள், இறந்தவர்கள்
எம்.முகுந்தன்
தமிழில் : சுரா
சிப்பாய் கிட்டு கூறித்தான் சந்திரசேரன் இறந்த தகவலே எனக்கு தெரிய வந்தது. என்ன உடல் நலக்கேடு என்ற விஷயம் கிட்டுவிற்குத் தெரியவில்லை. இனி தெரிந்து கொண்டு பிரயோஜனமில்லையே! இறந்த சந்திரசேகரன் திரும்பி வரப் போவதில்லை. எனக்கு வருத்தம் உண்டானது. நேற்றைக்கு முந்தைய நாள் சாயங்காலம் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து குடித்து விட்டு, கடற்கரைக்குச் சென்று வள்ளிக்காட்டிலிருக்கும் கவுசல்யாவைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். காற்றிற்கு ஈரம் உண்டாகி, கடற்கரை யாருமில்லாமற் போனதும், எழுந்தவாறு சந்திரசேகரன் சொன்னான்:
Category: சிறுகதைகள் Written by சுரா
ராதா - ராதா மட்டும்
எம்.முகுந்தன்
தமிழில் : சுரா
ராதா கல்லூரியை விட்டு, வீட்டை நோக்கி நடக்கும்போது பேருந்து நிறுத்தத்தில் சுரேஷ் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவனைப் பார்த்தவுடன் அவளுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டானது. நேற்று சாயங்காலம் அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து கடற்கரையில், உப்பின் வாசனை நிறைந்த காற்றை சுவாசித்தவாறு, சிப்பிகள் சிதறிக் கிடக்கும் மணல் வழியாக மேல் நோக்கி ஒரு மணி நேரம் நடந்தார்கள்.
Category: சிறுகதைகள் Written by சுரா
யமுனை ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது
பி.கேசவதேவ்
தமிழில் : சுரா
மறைத்தால் மறையாத அளவிற்கு அந்த காதல் எல்லோருக்கும் தெரிந்ததாகி விட்டது. மறைக்க வேண்டிய அவசியமோ, மறைக்க வேண்டும் என்ற ஆசையோ அவர்களுக்கு இல்லை. அந்த காதல் கல்லூரியின் கட்டுப்பாட்டை மீறவில்லை. சமூகச் சட்டங்களை அது தாண்டவுமில்லை. மரியாதையின் எல்லைகளுக்குள், மதிப்பை உண்டாக்கிக் கொண்டு, அந்த காதல் தலையை உயர்த்திக் கொண்டு நின்றது.
Last Updated on Thursday, 04 February 2016 16:59
Hits: 4897