Lekha Books

A+ A A-

சோசலிசமும் மனிதனும் - Page 4

socialisamum manidhanum

சார்ந்திருக்கும் நாடுகளின் மீதுள்ள எதிர்ப்பு காரணமாக மிகப் பெரிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளிக்கு, தொழிலாளிவர்க்க சர்வ தேசத்துவம் எப்படி இல்லாமற் போகிறது என்பதைப் பற்றியும் மிகப் பெரிய நாடுகளைச் சேர்ந்த பொதுமக்களின் போராட்ட ஆர்வம் இதனால் எப்படி நசுக்கப்படுகிறது என்பதைப் பற்றியும் விவாதம் செய்ய வேண்டியது இங்கு சூழ்நிலைக்கேற்றது என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்தக் குறிப்புகளின் இலக்கிலிருந்து தூரத்திலிருக்கும் ஒரு விஷயம் இது.

எது எப்படி இருந்தாலும், வெற்றிக்கான பாதை அபாயங்கள் நிறைந்தது என்பது மட்டும் உண்மை.எனினும், சரியான தகுதிகளைக் கொண்ட ஒருவன் இலட்சியத்தை அடைய வேண்டுமென்றால், அவற்றையெல்லாம் தாண்டிச் செல்வது என்பது சாத்தியமான ஒன்றுதான். தூரத்தில் அதோ, அதற்கான பரிசு காத்திருக்கிறது. அந்த இடத்திற்குச் செல்லும் பாதை யாரும் இல்லாமல் காலியாகத்தான் இருக்கிறது. அது மட்டுமல்ல- அங்கு ஓநாய்கள் ஏராளமாக இருக்கின்றன. மற்றவர்களுடைய தோல்வியில் மட்டுமே ஒருவன் வெற்றியைப் பெற முடியும்.

சோசலிசத்தை உண்டாக்குவது என்ற ஆச்சரியமும் உயிரோட்டமும் நிறைந்த நாடகத்தின் நடிகனான தனி மனிதனை, தனிமைப்படுத்தப்பட்டவனாகவும் சமூகத்தின் உறுப்பினராகவும் இரட்டை நிலைகளில் இருக்கும் தனி மனிதனை, நான் இனிமேல் விளக்க முயற்சிக்கிறேன்.

அவனுடைய முழுமையற்ற தன்மை, முற்றிலும் முடிவடையாத உற்பத்திப் பொருள் என்ற நிலை ஆகியவற்றைப் புரிந்து கொள்வது என்பது முயற்சியால் முடியக் கூடியதுதான். கடந்த காலத்தின் மத பிரசங்கங்கள் தனி மனிதனின் சுய உணர்வு மூலமாகத்தான் நிகழ்காலத்திற்கு மாற்றம் செய்யப்படுகின்றன. அவற்றை முழுமையாக அழிக்க வேண்டுமென்றால், அதற்கு நிரந்தரமான கடின உழைப்பு தேவைப்படுகிறது. இந்தச் செயலுக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒன்று - வெளிப்படையாக தெரியும்படியும் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாகவும் கற்றுத் தரப்படும் கல்வி வழியாக சமூகம் செயல்படுகிறது. இரண்டாவது- தனிமனிதன் தன்னைத் தானே சுய உணர்வுடன் கல்வி கற்கச் செய்து கொள்வது.

உருவாகும் புதிய சமூகத்திற்கு கடந்த காலத்துடன் பலமாக போராட வேண்டியதிருக்கும். தனிமனிதனின் சுய உணர்வில் கடந்த காலம் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தனி மனிதனை தனியாகப் பிரித்து ஒதுக்கும் விதத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட கல்வியின் பிரிவுகளுக்கு அதில் இப்போதும் செல்வாக்கு இருக்கவே செய்கிறது. கடந்த காலத்தின் சந்தை உறவுகள் இப்போதும் நிலை பெற்று நின்று, மாறிக் கொண்டிருக்கும் கட்டத்தின் குணத்திலும் அதன் பாதிப்பு வெளிப்படத்தான் செய்கிறது. முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார மூலம்தான் சரக்கு.அது இருக்கும் வரையில் உற்பத்தியின் கூட்டுச் செயல்களிலும் அதைத் தொடர்ந்து உணர்விலும் அதன் அடையாளங்கள் கலந்திருப்பதை நாமே பார்க்கலாம்.

சொந்த முரண்பாடுகளால் அழிக்கப்பட்ட ஒரு நாட்டின், முதலாளித்துவ அமைப்பின் வெடிப்பிற்கு நிகரான மாற்றத்தின் விளைவாக உண்டான காலகட்டமாகத்தான் மார்க்ஸ் இடைப்பட்ட காலத்தைக் கருதுகிறார்.எது எப்படியிருந்தாலும் மிகப் பெரிய நாடுகளின் பிடியில் இருக்கும் பலமற்ற சிறு நாடுகள்தான் முதலில் தகர்கின்றன என்பது வரலாற்று ரீதியான ஒரு உண்மை. இதை லெனின் ஆரம்பத்திலேயே கண்டிருக்கிறார்.

இந்த நாடுகளில், முதலாளித்துவம் அதன் விளைவு ஒரு விதத்தில் இல்லாவிட்டால் வேறொரு விதத்தில் உண்டாகும் வண்ணம் வளர்ந்து விட்டிருக்கிறது. எனினும் சொந்த உள் முரண்பாடுகள் காரணம் அல்ல. அந்த நிலை இங்கு இல்லாமல் இருப்பதற்கு. அதற்கான சாத்தியங்கள் அனைத்தும் இல்லாமல் போயிருக்கின்றன. ஒரு வெளிநாட்டு ஆக்கிரமிப்பிற்கு எதிராக உண்டாகும் விடுதலைக்கான போராட்டம், போரைப் போன்ற அசாதாரண சம்பவங்கள் கொண்டு உண்டாக்கப்பட்ட துயரம் (அதன் சுமையை பாதிக்கப்பட்டவர்களின் தலையில் வைத்துக் கட்டத்தான் சிறப்பு உரிமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் வர்க்கங்கள் முயற்சி செய்யும்) புதிதாக உண்டாக்கப்பட்ட காலனி ஆட்சி அமைப்புகளை ஒழித்து ஒன்றுமில்லாமல் ஆக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கும் விடுதலை அமைப்புகள்- இப்படிப்பட்ட எதிர்பாராத சம்பவங்களுக்கு சாதாரணமாக இருக்கக்கூடிய காரணங்கள் இவை தான். சுய உணர்வு கொண்ட செயல்பாடும் இருக்கும் பட்சம் எல்லாம் சரியாக இருப்பது மாதிரிதான்.

இந்த நாடுகளில் சமூக உழைப்பைப் பற்றிய முழுமையான கல்வி இனியும் உண்டாக்கப்படவில்லை.சொத்தின் உரிமைக்கான வழி என்று பார்த்தால் பொதுமக்களின் கையிலிருந்து இன்னும் எவ்வளவோ தூரத்தில் இருக்கிறது சொத்து. ஒரு பக்கம் சிறிது வளர்ச்சி நிலையும் இன்னொரு பக்கம் மூலதனத்தின் கட்டுப்பாடற்ற நடமாட்டமும் தியாகங்களால் உண்டாக வேண்டிய ஒரு மாற்றத்தை இல்லாமற் செய்கின்றன. பொருளாதார அடித்தளத்தைச் சரி பண்ணுவதற்கு இன்னும் எவ்வளவோ தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. வேகமான வளர்ச்சிக்கான செயல்பாட்டின் அடித்தளம் மக்கள் நலன்தான் என்ற கொள்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

மரத்தைப் பார்த்துவிட்டு, காட்டைப் பார்க்கவில்லை என்ற ஆபத்து இருக்கிறது. நம்மை முதலாளித்துவத்துடன் தொடர்பு படுத்தும் பழைய கருவிகளைக் கொண்டு (சரக்குதான் பொருளாதாரத்திற்கு அடிப்படை அதை அசைப்பதற்கான சக்தி- லாபம்.அதாவது- தனி மனிதனின் சம்பாத்தியம்) சோசலிசத்தை அடையலாம் என்ற கற்பனையான வாதத்தை வைத்திருப்பது நம்மை இலட்சியத்தில் கொண்டு போய் சேர்க்காது.

அது மட்டுமல்ல- அங்கிருந்து நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்கள். நிறைய திருப்பங்களையும் சந்திப்புகளையும் கடந்து செல்கிறீர்கள். அதன் மூலம் எந்த இடத்தில் உங்களுக்கு பாதை தவறியது என்பதைத் தெரிந்து கொள்வது உங்களுக்கே கஷ்டமான ஒரு விஷயமாக ஆகி விடுகிறது. செயல் வடிவத்திற்கு வந்த பொருளாதார அடித்தளம் அறிவு வளர்ச்சியைத் தலைகீழாக கவிழ்ப்பது என்ற வேலை எப்போதோ செய்து முடிக்கப்பட்டு விட்டது கம்யூனிசத்தை நிர்மானிக்க புதிய மனிதனை வார்த்தெடுக்க வேண்டும். புதிய பொருளாதார அடித்தளத்தை உண்டாக்க வேண்டும்.

அதனால் மக்களை தட்டியெழுப்பி அணிவகுக்கச் செய்வதற்கு சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் முக்கியமான அவசியத் தேவையாகிறது. அடிப்படையாகச் சொன்னால், இந்தப் பாதை தார்மீக குணம் கொண்டது. அதே நேரத்தில் அதன் வெளிப்படையான செயல்பாட்டை, குறிப்பாக-சமூகக் குணத்தை தேவையான அளவிற்கு பயன்படுத்திக் கொள்வதில் சிறிதும் அசட்டை காட்டக் கூடாது.

நான் முதலில் கூறியதைப் போல வீழ்ச்சியின் நாட்களில் பலமான, தார்மீகமான எதிர்ப்பைக் காட்டுவது என்பது எளிதானது.ஆனால் அவற்றின் விளைவை நிலை நிறுத்துவதில் அறிவின் வளர்ச்சி மிகவும் முக்கியமானது. இதில் மூலங்களுக்கு ஒரு புதிய முன்னுரிமை இருக்கவே செய்கிறது. மொத்தத்தில் சமூகத்தை ஒரு பெரிய பள்ளிக் கூடமாக மாற்ற வேண்டியிருக்கிறது.

முதல் கட்டத்தில் முதலாளித்துவ உணர்வு வடிவமெடுத்த அதே விதத்தில்தான் இந்த விஷயமும் என்று மொத்தத்தில் கூறலாம்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel