
சுராவின் முன்னுரை
கலீல் ஜிப்ரான் (Khalil Gibran) 1918 ஆம் ஆண்டில் எழுதிய ‘The Mad man’ என்ற அருமையான நூலை ‘பைத்தியக்காரன்’ என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்.
கலீல் ஜிப்ரானின் எழுத்துக்கள் மீது எனக்கு எப்போதும் தனிப்பட்ட ஒரு பிரியம் உண்டு.
குறைந்த வரிகளில் மிகப் பெரிய விஷயங்களைக் கூறும் அவருடைய அபார ஆற்றலைப் பார்த்து பலமுறை வியந்திருக்கிறேன். வாழ்க்கையின் பல சிக்கலான விஷயங்களுக்கு சர்வ சாதாரணமாக - போகிற போக்கில் இரண்டு அல்லது மூன்று வரிகளில் விளக்கம் கூறும் இவரின் சிந்தனைத்திறனை நான் மதிக்கிறேன். உலகம் என்பது புதிர் நிறைந்தது. மனித வாழ்க்கையில் இப்போது கோடிக்கணக்கான புதிர்கள்! அதை இங்குள்ள எத்தனைப் பேர் உணர்ந்திருப்பார்கள்! தாங்கள் கண்ணால் காண்பதுதான் வாழ்க்கை, உலகம் என்று இவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் பார்ப்பது எதுவும் உண்மையல்ல- உண்மையானதும் கண்டுபிடிக்க எவ்வளவோ தூரம் நாம் பயணம் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர்தான். அவர்களில் ஒருவர் கலீல் ஜிப்ரான். ‘பைத்தியக்காரன்’ என்ற இந்நூலை தமிழில் நான் மொழி பெயர்த்ததற்கு காரணமே அவர் மீது நான் கொண்டிருக்கும் இந்த அளவற்ற மதிப்புதான்.
மனிதர்கள் பிறப்பதும், இறப்பதும், நித்தமும் நடந்து கொண்டிருக்கின்றது. கலீல் ஜிப்ரானைப் போன்றவர்கள் தங்களின் படைப்புகள் மூலம் காலத்தைக் கடந்து வாழ்வார்கள். அதற்கு இந்த நூலும் ஒரு சாட்சி. அந்த எண்ணத்துடன் இந்த நல்ல நூலை தமிழ் மக்கள் முன் வைக்கிறேன்.
இந்த சிறந்த நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயம் கனிந்த நன்றி.
அன்புடன்,
சுரா(Sura)
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook