மணலும் நுரையும் - Page 5
- Details
- Category: தத்துவம்
- Published Date
- Written by சுரா
- Hits: 8932
வாழ்க்கை
அவர்கள் என்னுடன் சேர்ந்து பாடுகிறார்கள்.
கையிலிருக்கும் ஒரு கிளி
காட்டிலிருக்கும் பத்து கிளிகளைவிட
மதிப்புள்ளது என்று
ஆனால், நான் கூறுகிறேன் :
காட்டிலிருக்கும் ஒரு கிளிக்கோ, ஒரு இறகுக்கோ
கையிலிருக்கும் பத்து கிளிகளைவிட
மதிப்பு இருக்கிறதே என்று.
நீங்கள் அந்த இறகுக்காகத் தேடி அலைந்து
திரிவதுதான் வாழ்க்கை.
இறகுகள் முளைத்த கால்களைக் கொண்ட
வாழ்க்கை என்றல்ல-
அந்த இறகுதான் வாழ்க்கையே.
*****
மாறுபாடு
நம்முள் சிலர் மையைப் போல.
நம்முள் சிலர் தாளைப் போல.
நம்முள் சிலர் அவர்களின் கருப்பின்
ஆதிக்கம்கொண்டு
ஊமையாக்கப் படுகிறார்கள்.
நம்முள் சிலர் அவர்களின் வெளுப்பின் ஆதிக்கம் கொண்டு
குருடர்கள் ஆக்கப்படுகிறார்கள்.
*****
புரிதல்
நேற்றுவரை நான் என்னைப் பற்றி நினைத்திருந்தது
வாழ்க்கை என்ற கிரகத்தில்
ஓசையின்றி செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு
துண்டு என்றுதான்.
இப்போது எனக்குத் தெரியும்
நான்தான் அந்தக் கிரகம் என்பதும்
வாழ்க்கை முழுவதும் எனக்குள்... எனக்குள்
ஓசையுடன் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு துண்டு என்பதும்.
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,