
நானும் சாக முயற்சித்தேன். அப்போது எனக்கு அதற்கான தைரியம் வரவில்லை.
கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு நான் வீட்டை விட்டு வெளியேறினேன். பல இடங்களிலும் பல வருடங்கள் சுற்றித் திரிந்தேன். கடைசியில் உங்களைப் பார்த்தேன். உங்களின் அறிமுகம் கிடைத்தது. உங்களைக் காதலித்தேன். பின்னர் மறக்க முயற்சித்தேன். எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் மரத்துப்போய் கிடந்த என் மனதில் மீண்டும் உணர்ச்சிகளை உண்டாக்கியது நீங்கள்தான். நான் போகிறேன். ஆனால் நினைவு! நினைவு!
என் மனம் இதோ தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறது. சூடான என்னுடைய கண்ணீர்த் துளிகளால் குளிப்பாட்டித்தான் இந்தக் கடிதத்தையே நான் உங்களுக்கு எழுதுகிறேன். நான் உங்களைக் காதலிக்கிறேன். அதனால் நான் மரணத்தைத் தழுவுகிறேன்.
நான் இனி வாழ விரும்பவில்லை. உலகம் எரிந்து கொண்டிருக்கும் ஒரு தீச் தீச்சூளை. குளிர்ச்சியான அகன்ற கடல் இதோ எனக்காகக் காத்திருக்கிறது.
மீண்டும் ஒரு முறை சினேகிதனே... இறுதியாக விடை பெற்றுக் கொள்கிறேன். உங்களை நினைத்துக்கொண்டே நான் மரணத்தைத் தழுவுகிறேன்.
உங்களின்,
சசினாஸ்
பின்குறிப்பு : புதிதாக மலரும் பூவைப் பார்க்கிறபோது என்னை நினைத்துக் கொள்ளுங்கள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook