Lekha Books

A+ A A-

ஒரு காலத்தில் மனிதனாக இருந்தான் - Page 6

oru kalathil manithanaga irunthan

அங்கு அவன் நிறுத்தவில்லை. அவனுடைய தலைவிதி. உடல் முழுவதும் வேதனை இருந்தது. படுக்க வேண்டும்... படுக்கக் கூடாது... தூங்க வேண்டும்... தூக்கம் வரவில்லை.... அதிர்ஷ்டசாலியான நீங்கள் சுகமாக உறங்குங்கள்..

தூக்கத்திற்கு மத்தியில் ஏதோ ஆரவாரத்தைக் கேட்டு கண் விழித்தேன். விளக்கை எரிய வைத்தேன்.

ஓ!

அன்மோலக் ராம் மதன்லாலின் கழுத்தைப் பிடித்திருந்தான். மதன்லால் முனகிக் கொண்டிருந்தான். இறுக நெரித்திருக்க வேண்டும். கண்களை அகல விரித்துக் கொண்டு அருகில் சென்றேன். மதன்லால் அன்மோலக்கின் கையை பலமாகப் பிடித்திருந்தான். திடீரென்று அன்மோலக் பிடியைத் தளர்த்தினான்.

"சைத்தான்...''

மதன்லால் உரத்த குரலில் கத்தினான். அன்மோலக் மிகவும் வெளிறிப்போயிருந்தான். தலையிலிருந்து கால் வரை நடுங்கிக் கொண்டிருந்தது. ஒரு வார்த்தைகூட பேசாமல் அவன் கட்டிலில் வந்து படுத்தான்.

"என்ன ஆச்சு?''

மதன்லால் நின்று கொண்டு மேலும் கீழும் மூச்சு விட்டான். அவனுடைய சிவந்த முகம் முழுமையாக நீல நிறத்தில் இருந்தது. நெற்றியில் வியர்வை அரும்பி விட்டிருந்தது.

அவன் சரியாக மூச்சு விட முடியாமல் விஷயம் என்ன என்பதைக் கூறினான். வெளியிலிருந்து வந்திருக்கிறான். எப்போதும் இந்த நேரத்தில்தான் வருவான். எங்கிருந்து என்பதைக் கூறவில்லை. ஆள் ஒரே தாவல்.. ஆள் தாவியதைப் பார்த்தான். அத்துடன் கழுத்தில் பிடி விழுந்து விட்டது. பிறகு, என்ன நடந்தது, என்ன தோன்றியது எதுவுமே தெரியாது. விளக்கு எரிய வைக்கப்பட்டு விட்டது அல்லவா? இல்லையென்றால் மரணம்தான்!

"சரி... தூங்கு...''

"எனக்கு பயமா இருக்கு!''

அன்மோலக் ராம் மீண்டும் முனக ஆரம்பித்தான். இடையில் முணுமுணுக்கவும் செய்தான். எதுவுமே தெளிவாக இல்லை.

"தூங்கலையா?''

"விளக்கை அணைக்க வேண்டாம்.''

"அது போதுமா?''

"எனக்கு பயமா இருக்கு''.

சற்று நேரம் அவன் நின்றான். நினைத்து ஞாபகம் வந்ததைப்போல இறுதியில் சொன்னான்:

"நான் போகிறேன்.''

"எங்கே?''

"பொழுது விடிவதற்கு முன்னால் வருகிறேன்''

"சரி...''

மறுநாள் காலையில் மதன்லால் தன்னுடைய கட்டிலை எடுத்து அடுத்த அறைக்கு மாற்றினான். பெருமாள் சண்டை போட்டான். "இந்தப் பிசாசு எனக்கு அருகில் படுக்க வேண்டாம்.''

"ச்சே...''

"என்ன சார்? என்னை அவன் கொன்னுட மாட்டானா?''

ஹவில்தார் மேஜர் விஷயத்தை அறிந்தான். அன்மோலக் ராமிடம் கேட்டான்.: “ஜீ... மை... மை... முத்தே தக்லீஃப் ஹை.. முத்தே நீம்த் நஹி ஆதீ..''

அவன் கையையும் காலையையும் ஆட்டிக் கொண்டே பதில் கூறினான். அவன் நாக்கால் விஷயத்தைக் கூறுவது இல்லை என்று தோன்றியது. இதயத்திலிருந்து சத்தம் உண்டாகி வருவதாக இருக்க வேண்டும். கண்கள்தான் பேசின. கண்களுக்கு அடுத்ததாக... முகத்திலிருந்த சதைகள்... வார்த்தைகளுக்கு, ஒவ்வொரு குரல் மாறுதல்களுக்கு, தனிப்பட்ட வகையில் சேர்க்க வேண்டிய ஒவ்வொரு உணர்ச்சிக்கு, வெளிப்பாட்டின் ஒவ்வொரு சிறு சிறு அம்சத்திற்கு... அன்மோலக் ராமின் பேச்சு அப்படித்தான். முகத்திலிருக்கும் ஒவ்வொரு சதையும் வெளிப்பாட்டின் ஒவ்வொரு சிறிய சிறிய விஷயத்திற்கும் வேண்டிய அளவிற்கு அசைந்தன. ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் அடங்கியிருந்த உணர்ச்சி கண்களில் தெரிந்தது. அவன் பேசுவது கேட்பதற்காக உள்ளது அல்ல, பார்ப்பதற்காக இருப்பது.

"நீ அவனைக் கொன்றிருப்பாயே!''

"அ... ஜி... அகர்..''

அன்மோலக் இருப்பதை அறுத்து துண்டாக்கிக் கூறினான். விளக்கு எரிந்ததே! அந்த ஒரே பிடியில் மதன்லாலின் கதை முடிந்திருக்குமே!

தூக்கத்திற்கு மத்தியில் ஆட்கள் எழுந்திருக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்று ஹவில்தார் மேஜர் சொன்னான். அது எவ்வளவோ உண்மை! அன்மோலக் ராமே பல நேரங்களில் எழுந்திருக்கிறான். அப்போதுதான் மதன்லாலைப் பிடித்து நெரித்ததும்...

"ஆட்கள் வெளியே போக வேண்டாமா?''

"மதன்லால் எழுந்து போகவில்லை...''

"என்ன?''

அன்மோலக் உறுதியான குரலில் சொன்னான். நள்ளிரவு வேளையில் ஒரு மனிதன் எதற்காக அறைக்குள் வர வேண்டும்? அது திருடுவதற்குத்தான். திருடனைத்தான் கழுத்தைச் சுற்றிப் பிடித்தது... எழுந்து வெளியே சென்று, திரும்பி வந்த நண்பனை அல்ல...

ஹவில்தார் மேஜருக்கு சந்தோஷம் உண்டானது. ஆனால், சந்தோஷப்பட முடியுமா? கோபம் வந்தது. கோபப்பட முடியுமா? ஆச்சரியம் இருந்தது...

"பெட் செக்கிங் நடந்ததா?''

"எனக்குத் தெரியாது!''

"யார் நேற்றைய ட்யூட்டி என்.ஸி.ஓ?''

"நாயக் நாராயணன் நாயர்!''

"நான் எங்கே படுப்பது?''

இடையில் பெருமாள் கேட்டான்:

"நம்ம தலையில்!''

அதிகமான கோபத்தில் இருந்த மேஜர் கத்தினான்.

பெருமாள் முழுமையாக எரிந்து விட்டான். எனினும், தைரியத்தை விட்டு விடக் கூடாது. அவனவனுடைய விஷயம் அது.

ஹவில்தார் மேஜர் அப்படி கூறலாம். மேஜர் தூங்குவது மிக மிக தூரத்தில், தன் மனைவியுடன். அங்கு போய் அன்மோலக் ராம் பிடரியைப் பிடிக்கப் போவதில்லை. பெருமாள் படுத்திருப்பது அவனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கட்டிலில்...

பிறகு அன்மோலக் ராம் எங்கே படுப்பான்?''

யாரும் வாய் திறக்கவில்லை.

"என்ன தன்ராஜ்?''

"என்னால் முடியாது?''

"சுப்பையா?''

"வேண்டாம்... வேண்டாம்... மேஜர் ஜி... நானும்...''

"நீயும்?''

"வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.''

தவறு நேர்ந்து விட்டதைப்போல சுப்பையா நின்று கொண்டு விரலைக் கடித்தான்.

"சங்கரன் நாயர்!''

நான் நின்று கொண்டு விழித்தேன். எனக்கு அந்த அளவிற்கு தைரியமெதுவும் இல்லை. ஒரு விஷயம் இருக்கிறது. தூங்கி விட்டால், பிறகு எழுந்திருப்பது பொழுது புலர்ந்த பிறகுதான். அதனால்

என்னுடைய கழுத்தின்மீது பாய்ந்து விழுவதற்கு வழியில்லை. நேரம் தவறி "பேரக்”கிற்குள் நுழைந்து வர வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.

"படுத்துக் கொள்ளட்டும்!''

அந்த வகையில் அன்மோலக் ராமின் கட்டில் எனக்கு அருகில் மாற்றிப் போடப்பட்டது.

அன்மோலக் ராம் யாரையும் "பாயி ஸாப்" என்றுதான் அழைப்பான். என்னை அழைப்பது "நாயக் ஸாப்" என்று.

"நான் சிக்னல் மேன் ஆச்சே!''

தவறு உண்டாகி விட்டதைப்போல அன்மோலக் நின்றான். நின்று கொண்ட இடத்திலிருந்தே சொன்னான்: "நீங்க... நீங்க ஒரு நாயக்கிற்குப் பொருத்தமான மனிதர்தான்.''

"ஷோல்ஜர் என்ற டைட்டிலுக்குப் பொருத்தமானவனாக இல்லை என்று ரெஸிஸாப் கூறுகிறார்!''

"கோன் ஓஸி?''

அவனுடைய முகம் சிவப்பாக மாறியது. கோபத்தை அடக்குவதற்காகவோ என்னவோ அவன் பெருமூச்சு விட்டுக் கொண்டே நின்றான்.

"உங்களை ஆட்சி செய்பவர்களுக்கு உங்களை மதிப்பீடு செய்வதற்கு முடியவில்லை. காக்காய் பிடித்தால், பதவி உயர்வு கிடைக்கும். அவனவனுடைய வேலையை ஒழுங்காக முடித்தால், அவர்களின் விருப்பப்படி ஆடக் கூடிய பெட்டியாக இருக்கலாம்.''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

சரசு

சரசு

March 9, 2012

பசி

பசி

May 7, 2014

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel