Lekha Books

A+ A A-

ஓ.வி. விஜயன் ஓர் அறிமுகம் - Page 8

o-v-vijayan-oor-arimugam

ஓ.வி. விஜயனுடன் ஒரு சந்திப்பு

‘இதிகாச’த்தில் வரும் பாத்திரப் படைப்புகளைப் பார்க்கிறபோது ரவியின் பாத்திரப் படைப்பு ஒரு விதத்தில் இருக்க, நாயகிகளாக ஐந்து அல்லது ஆறு பேர் வருகிறார்கள். ரவியை அந்த மாதிரி படைத்ததற்காக உங்களுக்குக் குற்ற உணர்வு உண்டாகிறதா?

 இது என்ன கேள்வி? எது நடக்க வேண்டுமோ அது நடந்திருக்கிறது. எல்லாம் கடவுள் கையில் இருக்கிறது. கடவுளுக்கு முன்னால் எழுத்தாளன் ஒரு சாதாரண பிராணி. அவ்வளவுதான்.

 உங்களுக்கு இருக்கும் இன்றைய மனநிலையில் ‘இதிகாசம்’ எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த சுதந்திரத்தை அனுமதிப்பீர்களா ?

 நிச்சயமாக இல்லை.

 எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?

 நான் மாறியிருக்கிறேன்.

 ரவியின் வாழ்க்கைப் பயணத்தில் கவரப்பட்ட ஒரு தலைமுறைக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

 இட் ஈஸ் ஆல் லீலை. லீலை மட்டுமே.

 நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் ரவியைப் பின்பற்றிய அந்தத் தலைமுறைக்கு இந்தப் பதில் போதுமானதாக இருக்குமா?

 நான் அவர்களை அன்புடன் அழைக்கிறேன். என்னுடைய உணர்வுகளில் அவர்களையும் பங்கு சேரக் கூப்பிடுகிறேன்.

 ஒரே நேர்கோட்டில் போகிற ஒரு கதை இதிகாசத்தில் இல்லை என்று பொதுவாகக் கூறுவார்கள். இதற்கு உங்களின் பதில்?

 அவர்கள் சொல்வது சரிதான். ‘இதிகாச’த்தின் முக்கிய விஷயமே அதில் வரும் துணைக் கதைகள்தாம். சிறிய மனிதர்கள், சிறிய உயிர்கள், சிறிய இடங்கள். இந்த துணைக்கதைகள்தாம் கஸாக்கிற்கு சிறப்பு சேர்க்கின்றன.

 இந்த துணை கதைகள் ‘இதிகாச’த்தை ஒரு கார்ட்டூன் நாவலாக மாற்றி விடுகிறது என்று சொல்லலாமா?

 ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அதை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக ‘இதிகாச’த்தைப் படிக்கிறபோது, அதன் அடிநாதமாக இருக்கும் உயிரோட்டத்தைத்தான் பார்க்க வேண்டும். ஆனால், ஒரு விஷயம். கஸாக்கின் ‘ட்ராமட்டீஸ் பெர்சனே’யில் கிராமப்புறங்களில் நாம் சாதாரணமாகக் காணும் கேலி, கிண்டல், திருவிழா, கொண்டாட்டங்கள், சந்தோஷப் பெருவெள்ளம் போன்ற எல்லாவற்றையும் பார்க்கலாம். வாழ்க்கையை நாம் ரசித்து எப்படி வாழ வேண்டுமோ, அதே மாதிரி ஒரு கதையை மிகவும் ஈடுபாட்டுடன் ரசித்துப் படிப்பதற்குக் கூட ஒரு பயிற்சி வேண்டும். இல்லையென்றால் ஒரு கதை யாருக்காக எழுதப்படுகிறது, எதற்காக எழுதப்படுகிறது என்ற தேவையில்லாத சர்ச்சைகளில் நாம் போய் சிக்கிக் கொள்வோம். எந்தக் கதையாக இருந்தாலும், அதை நம் அறிவின் அளவு கொண்டே அளக்கிறோம். உதாரணத்திற்கு ஒரு கதையைச் சொல்கிறேன். அது ஒரு மீனைப் பற்றியது. மீன் ஒன்று ஒரு சிறிய தங்க வளையத்தை விழுங்கி விடுகிறது. அதற்குப் பிறகு உண்டாகும் போராட்டங்களும், சம்பவங்களும்தான் கதை. கதையின் பெயர் - சாகுந்தலம்!

‘கஸாக்கின் இதிகாச’த்தில் முழுமையான ஒரு காதல் கதை இல்லை என்ற குற்றச்சாட்டை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே இருக்கும் காதலைவிட ரவிக்கும் மாதவன் நாயருக்குமிடையே இருக்கும் நட்பு மிகவும் ஆழமானது. ‘இதிகாசம்’ எழுதப்பட்ட காலத்தை மனதில் வைத்துக்கொண்டு கேட்கிறேன். கஸாக்கின் பூமியில் பெண் பாத்திரங்களின் நிலை என்ன?

என்னைப் பொறுத்தவரை பெண்மைத்தனத்தின் ஒரு முழுமையான அடையாளம்தான் மைமூனா. அவள் மற்ற சாதாரண கதாபாத்திரத்துடன் கலந்து பேசுவதைக் கூட நான் பொதுவாக விரும்புவதில்லை. மைமூனாவை ஒரு ஃபெமினிஸ்ட்’டாக நினைக்க முடியாது. அப்போது அவள் யார்? குஞ்ஞாமினாவின் இளம் பருவத்துக் காதலிலும், பத்மாவின் நிராசையிலும் இந்தக் கேள்விக்கு நமக்கு விடை கிடைக்கிறது.

ரவியின் ஒரு பெரிய சாயல் ‘குருசாகர’த்தில் வரும் குஞ்ஞுண்ணியில் இருக்கிறது என்று சொல்லலாமா?

சரிதான். இருவருமே தேடலில் இருப்பவர்கள்தாம். குஞ்ஞுண்ணி குருவைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். பதில்களையும்தான். ஆனால், ரவியைப் பொறுத்தவரை - அவனைச் சுற்றிலும் இருப்பது வெறும் கேள்விகளே!

 ஆனால், ரவி போய்ச் சேர்வது ஆத்மாவே இல்லாத ஒரு நகரத்தை அல்ல. உயிரோட்டம் நிறைந்த ஒரு கிராமத்தை. ரவிக்கு இயற்கையால் கூட பதில் தர முடியவில்லையா என்ன?

 நாம் அந்த அளவிற்கு இயந்திரத்தனமாகப் போக வேண்டியதில்லை.

மொழி என்பது பலமான ஒரு ஆயுதம். அதைக் கட்டுப்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்கள் வரும் பட்சம்...?

 நான் யாருக்கும் உபதேசம் கூற விரும்பவில்லை. ஆனால், நான் ஒரு சிறிய விஷயத்தைக் கூற விரும்புகிறேன். அதுவும் - என்னுடைய இலக்கியச் சகோதரர்களின் அனுமதியுடன், வெறும் வார்த்தைகளை மறந்து விடுங்கள். வாசகர்களின் மனதில் மகிழ்ச்சி உண்டாக்கக் கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். ஈகோ - அதாவது ஆணவம் கட்டாயம் அடக்கப்பட வேண்டிய ஒரு எதிரி என்பதை உணருங்கள்.

 எழுத்தாளனுக்குக் கட்டாயம் ஒரு குரு தேவையா?

 பாரதத்தின் இதிகாசப் படைப்புகளில் எல்லா காலங்களுக்கும் காரணமாக இருக்கும் ஒரு குரு இருக்கவே செய்கிறான்.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel