Lekha Books

A+ A A-

வெறும் ஒரு இனிப்புப் பலகாரம் - Page 2

verum-oru-inippu-palakaram

முந்தாநாள் நடனம் ஆடும்போது, என்னுடைய காலின் மீது ஒரேயொரு மிதி! இப்போதுகூட அந்த விரலின் வேதனை போகவில்லை.'

"உங்களுக்கு நடனம் ஆடத் தெரியாதா?" வக்கீல் கேட்டார்.

"தெரியாது."

"அப்படின்னா, கற்றுக் கொள்ள வேண்டும், விமலாதேவி அதற்குப் பிறகு நான் உங்களுடன் சேர்ந்து நடனம் ஆட வேண்டும். ஒரு நாள் சாயங்காலம் என்னுடைய வீட்டின் டான்ஸ் ஹாலில் அது நடக்க வேண்டும்."

"விமல், இங்கே வந்து உட்காரு. இங்கே உனக்கு மேலும் கொஞ்சம் காற்று கிடைக்கும்." என்னை அழைத்திருந்தவர் உரத்த குரலில் சொன்னார்.

"நீங்கள் மிகவும் மோசமானவர், மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி." வக்கீல் சொன்னார்:

"நான் அவளைத் தத்து எடுத்திருக்கிறேன், ராய். நான்தான் அவளின் காப்பாளன். அதனால் அவள் எனக்கு அருகில் அமர்ந்திருப்பது தான் எனக்குப் பிடிக்கும்."

"விமலாவின் அதிர்ஷ்டம். விமலாவிற்கு எத்தனை காப்பாளர்கள்!" மிஸ் இந்திரா ராவ் சொன்னாள்.

"மிஸ் ராவ், நீங்கள் சீக்கிரமாக யாரையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும்." பொருளாதார நிபுணர் சொன்னார். "அப்போது உங்களையும் தத்து எடுப்பதற்கும் கொஞசுவதற்கும் பலர் இருப்பார்கள்."

"என்னை தத்து எடுப்பதற்கு யாரும் இல்லையே!" மகாராணி சொன்னாள்: "என்னுடைய பிள்ளைகள் எல்லாரும் வளர்ந்து திருமணம் முடிந்து போய்விட்டார்கள். இப்போது என்னைத் தத்து எடுப்பதற்கு யாராவது வந்தால் உபயோகமாக இருக்கும். எனக்கு நேரம் போகவில்லை."

"மகாராணி, உங்களை நான் இன்றைக்கே தத்து எடுக்கிறேன்." அருண் சொன்னார்: "உங்களை மட்டுமல்ல. உங்களுடைய வீடுகளையும் வாகனங்களையும்ள வைர மாலைகளையும்... எல்லாவற்றையும்..."

"நீங்கள் ஆண்கள். உங்களை யார் நம்புவார்கள்?" மகாராணி சொன்னாள். அவள் தன்னுடைய காலி குவளையை பணியாளின் கையில் கொடுத்துக் கொண்டே தாழ்வான குரலில் சொன்னாள்: "மிஸ்கியும் ஜஸும் மட்டும். சோடாவும் நீரும் வேண்டாம்."

"உங்களை நான் முந்தாநாள் திரைப்பட அரங்கத்தில் பார்த்தேன்." மார்வாடி கிழவர் மிஸ். ராவிடம் சொன்னார்: "உங்களுடன் வேறொரு பெண்ணும் இருந்தாள்."

"அப்படியா? எனக்கு ஞாபகத்தில் இல்லை. நான் திரைப்படத்திற்குப் போகாத நாள் இல்லை. எனக்கு பொழுதைப் போக்குவதற்கு வேறொரு வழியும் தெரியவில்லை. சாயங்கால நேரம் வந்துவிட்டால் நிம்மதியாக இருக்கிறது. அதற்குப் பிறகு ஏதாவது பார்ட்டிகள் இரக்கும். அதுவரை..."

"நீங்கள் மதிய நேரத்தில் தூங்குவதில்லையா?" பொருளாதார நிபுணர் கேட்டார்.

"எனக்கு மதிய நேரத்தில் தூக்கம் வராது."

"மதிய வேளையில் தூங்காமலே நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். அப்போ பகல் நேரத்தில் தூங்க ஆரம்பித்தால், நீங்கள் எந்த அளவிற்கு பேரழகியாக இருப்பீர்கள்?" அருண் கேட்டார்.

"அருண், என்ன இது?" சிந்துராணி கேட்டாள்:

"உங்களுடைய மனதிற்கு எந்தவொரு நிலையான தன்மையும் இல்லையா?"

"நீங்கள் அதைச் சொல்லக்கூடாது, சிந்துராணி." அருண் சொன்னார்: "நான் நிலையற்ற மனதைக் கொண்டவன் என்பதை வேறு யாராவது கூறட்டும். ஆனால், நீங்கள்..."

"இந்தக் காதல் திருவிளையாடல்களை இங்கே நடத்த வேண்டுமா?" கிருஷ்ணமூர்த்தி கேட்டார். "இவை எல்லாருக்கும் தெரியும்படி நடத்த வேண்டிய காரியங்கள் அல்ல."

"விமலாதேவி, கொஞ்சம் அந்தப் பக்கம் தள்ளி உட்காருங்க." வக்கீல் எனக்கு அருகில் வந்து கொண்டே சொன்னார்: "நானும் இங்கு உங்களின் இரண்டு ஆட்களுக்கும் அருகில் உட்காருகிறேன். என்னால் தனியாக அந்த ஸோஃபாவில் இருக்க முடியவில்லை. எனக்குத் தனியாக இருப்பது சிறிதும் பிடிக்கவில்லை."

"என் குவளையில் இரக்கும் விஸ்கியைப் பாருங்க." சிந்துராணி சொன்னாள்: "சூரியனை எடுத்து ஒரு எலுமச்சம் பழத்தைப் பிழிவதைப் போல பிழிந்து, சாறை எடுத்து கண்ணாடிக் குவளையில் ஊற்றி வைத்திருப்பதைப் போல¬ தோன்றும். இந்த ஜூலை மாதத்தின் சூரியன்தான் என் குவளையில்... நான் சூரியனைக் குடிக்கிறேன்."

"இதைக் குடித்தால் என்னுடைய உடல் குளிர்ச்சி அடைவதுதான் எப்போதும் நடப்பது." மகாராணி சொன்னாள்: "அதனால் இது உண்மையாகவே சந்திரன்தான். ஒரு குவளை நிலவு வௌச்சம்."

"உங்களை நான் சென்ற வாரமும் பார்த்தேன்." மார்வாடி கிழவர் மிஸ். இந்திரா ராவிடம் தாழ்ந்த குரலில் சொன்னார்: "உங்களடன் இன்னொர பெண்ணும் இருந்தாள்."

"நீங்கள் இந்திராவிடம் தனிப்பட்ட முறையில் என்ன சொன்னீர்கள்?" கிருஷ்ணமூர்த்தி கேட்டார்.

"அப்படியா?" இந்திரா கேட்டாள்: "எங்கு இருக்கும்போது?"

"ரேஸ் கோர்ஸில் இருக்கும் போது."

"ஆ... அது உண்மைதான்." இந்திரா தன் குரலை மேலும் சற்று உயர்த்தியவாறு சொன்னாள்: "என்னுடன் த... ராஜா இருந்தார். அவர் காலையில் ஆறரை மணிக்கு ஃபோன் பண்ணினார். "உங்களுடன் சேர்ந்து ரேஸுக்குப் போனதாகக் கனவு கண்டேன்." என்று சொன்னார். கொஞ்சம் பணம் கிடைத்ததாகவும் சொன்னார். அதற்குப் பிறகு, என்னால் போக முடியாது என்று கூற முடியவில்லை. போனேன். அவருடைய இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் கையை விட்டுப் போகவும் செய்தது. ஹ... ஹ... ஹ...'து

"எனக்கு இந்த மாதிரியான சொஸைட்டி பேச்சுக்களைக் கேட்பதற்கே விருப்பமில்லை." வக்கீல் என்னுடைய காதில் முணுமுணுத்தார்: "எப்போதும் ராஜாக்களைப் பற்றிய பேச்சுத்தான்."

"எனக்கு விருப்பம்." நான் சொன்னேன்: "நான் வசதி படைத்த வீட்டிலொன்றும் பிறக்கவில்லையே! அதனால் இவர்களின் வாழ்க்கை எனக்கு சுவாரசியமாக இருக்கும்."

"விமலா ராணி, உங்களுக்கு எதற்குப் பணம்? உங்களுக்கு..."

"சொந்த விஷயங்களைப் பேசுவதை நிறுத்த வேண்டும்." அருண் உரத்த குரலில் சொன்னார்.

"அவர்களை வெறுமனே விடுங்க..." சிந்துராணி சொன்னாள்: "என்னுடைய கணவருக்கு விமலா மீது உண்மையிலேயே காதல் இருக்கிறது. இந்த அளவிற்கு புனிதமான காதலுக்கு முன்னால் பொறாமைக்கும் கோபத்துக்கும் தலையை உயர்த்தவே முடியாது. அவர்கள் ஜோடிக்குருவிகள்..."

என்னை அழைத்திருந்தவர் அப்போது எனக்கு நேராகத் திரும்பிக் கொண்டு கேட்டார்:

"விமல்... நீ வராந்தாவில் இருக்கும் படி மீது உட்கார வேண்டுமா? அதுதானே நீ எப்போதும் இருக்கக் கூடிய இடம்?"

"உண்மைதான். அப்படியென்றால்தான் நான் தோட்டத்தையும் பார்க்க முடியும்." நான் எழுந்து வராந்தாவின் படியில் போய் உட்கார்ந்தேன். கீழே, புல்வெளியில், என்னுடைய மகன் ஒரு பூனையுடன் விளையாடியவாறு மல்லாக்கப் படுத்திருந்தான்.

"அழகு என்றால் என்ன?" பொருளாதார நிபுணர் கேட்டார்: "மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி, நீங்கள் எதை அழகு என்று அழைக்கிறீர்கள்?" அவருடைய கண்கள் சிவக்க ஆரம்பித்திருந்தன.

"அழகு..." மார்வாடி கிழவர் தாழ்ந்த குரலில் முணுமுணுத்தார்: "ஹா... அழகு...!" தொடர்ந்து இந்திராவின் பக்கம் திரும்பியவாறு சொன்னார்:

"நான் சென்ற வருடம் டார்ஜிலிங்கிற்குச் சென்ற போது, அங்கு உங்களைப் பார்த்தேன். உங்களுடன்..."

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel