Lekha Books

A+ A A-

கண்ணால் பார்த்த சாட்சி - Page 2

kannaal-partha-satchi

 அது தன் தாய்க்கும் தந்தைக்கும் பிடிக்காத விஷயம் என்பது அவனுக்குத் தெரியும். நேற்றுதான் அவர்கள் பால்காரனைக் கொன்றார்கள். பால்காரன் சாளரத்தின் கதவுகளை வெளியே இருந்து திறந்து பார்த்திருக்க வேண்டியதில்லை. ஒரு வேளை, அவனை அவர்கள் கொன்றதற்கு அதுதான் காரணமாக இருக்க வேண்டும். பால்காரன் அவர்களைப் பார்த்த நாளன்று சாயங்காலம் வீட்டிற்கு சைக்கிளுடன் வந்தபோது, சிறுவன் சொன்னான்:

"பால்காரா! அவர்களைப் பற்றி போலீஸ்காரர்களிடம் சொல்லாதே. அவர்கள் நல்ல திருடர்கள் அந்த டின்களில் வைரக் கற்களும் தங்கத் தூளும் இருக்கு. நம்மை அவர்களுக்குப் பிடித்து விட்டால், அவர்கள் நமக்கும் கொஞ்சம் தருவாங்க."

ஆனால், பால்காரன் சைக்கிள் மீது ஏறிக் கொண்டே சிரித்தான்.

"பாபா, அந்த டின்களில் இருப்பது தங்கம் அல்ல. வேறு ஒரு பொருள். நான் அதன் பெயரைச் சொல்ல மாட்டேன்."

"ஓ! பால்காரா, நீஅதைத் திறந்து பார்க்கவில்லையே! பிறகு எப்படித் தெரிந்தது?"

"எனக்கு வாசனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும்."

ஆனால், பால்காரன் போலீஸ்காரர்களிடம்எ தையும் கூற மாட்டான் என்பது சிறுவனுக்குத் தெரியும். காரணம் போலீஸ்காரர்கள் மீது பால்காரனுக்கு வெறுப்பு இருந்ததுதான். அவன் பேருந்து நிலையத்தில் இரந்த குழாயைத் திறந்து நீர் எடுத்து கடைக்குக் கொண்டு செல்வதைப் பார்த்த ஒரு போலீஸ்காரன் அவனை மோசமான வார்த்தைகளில் திட்டிவிட்டான். அதற்குப் பிறகு பால்காரன் போலீஸ்காரர்களை 'மச்சான்கள்' என்றும் 'பெரிய வாயைக் கொண்டவர்கள்' என்றும் எப்போதும் கூறிக் கொண்டிருப்பான். சிறுவன் பெரியவனாகி ஒரு போலீஸ்காரனாக வந்தால், அவனுக்கு ஒரு துளி பால்கூட தரமாட்டேன் என்று அவன் கூறுவான். அதனால் பால்காரன் கூறியது பொய். அவன் எந்தச் சமயத்திலும் போலீஸ்காரர்களிடம் யாரைப் பற்றியும் புகார் கூறப் போவதில்லை. எனினும், பாண்டுரங்க் அவனைஏமாறற்விட்டான். உள்ளே பணத்தைக் காட்டி வரவழைத்துக்துக் கொன்றுவிட்டான். பால்காரனின் பாக்கெட்டில் இருந்த பர்ஸையோ அவனுடைய கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தங்கத்தால் ஆன பதக்கத்தையோ அவர்கள் எடுப்பதை சிகூனால் பார்க்க முடியவில்லை. அந்த நேரத்தில் அவன் வீட்டிற்குத் திரும்பி வர வேண்டியதிருந்தது. இரண்டாவதாக வெட்டியபோது, பதக்கம் தரையில் விழும் சத்தத்தை சிறுவன் கேட்டான். அது ஒரு அதிர்ஷ்டம் வாய்ந்த பதக்கம் என்றும், அதில் ராதையும் கிருஷ்ணனும் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அது முதல் தரமான வெள்ளித் தகட்டால் செய்யப்பட்டது என்றும் பால்காரன் அவனிடம் பல தடவைகள் கூறியிருக்கிறான். அதைத் தொடுவதற்குக்கூட அவனுக்கு எந்தச் சமயத்திலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவன் பால்காரனுடனோ சமையல்காரனுடனோசலவை செய்பவனுடனோ விளையாடுவதை அவனுடைய தாய் விரும்பவில்லை. அவர்களுடைய கெட்ட நாற்றம் சிறுவனின் ஆடையில் வந்து ஒட்டிக்கொள்ளும் என்று அவனுடைய தாய் கூறுவதுண்டு அது உண்மையாகக் கூட இருக்கலாம். பால்காரன் அருகில் வரும்போது, காய்ந்த மோரின் வாசனை... சமையல்காரனுக்கு முட்டைக்கோஸ் வேக வைத்த வாசனை... சலவை செய்பவனுக்கு சாணத்தின் ஒரு வாசனை... இப்படி இவர்கள் எல்லாரும் பெரிய கெட்ட வாசனை கொண்டவர்களாக இருந்தார்கள். அவனுடைய அன்னை ஒரு சிறிய புட்டியில் இருந்து கொஞ்சம் சென்ட்டை எடுத்து இரண்டு கைகளிலும் தேய்த்து புடவையில் தடவுவாள். அதற்குப் பிறகு, நீண்ட நேரம் அவனுடைய தாயைச் சுற்றிலும் ஒரு நறுமணம் பரவிக் கொண்டிருக்கும். ஒரு புட்டியில் இருந்த சென்ட் தீர்ந்துவிட்டால், உடனே அவனுடைய தாய் வெளியே சென்று இன்னொன்றை வாங்கிக்கொண்டு வருவாள். 'பேனல் 5' என்ற பெயரைக் கொண்ட சென்ட்டை மட்டுமே அவனுடைய தாய் பயன்படுத்துவாள். மாமாவைப் போல தன் தாய் ஏன் நீல நிற புட்டியில் இருக்கும் சென்ட்டை வாங்கவில்லை என்று சிறுவன் கேட்டதற்கு, ஒருநாள் அவனுடைய தாய் சொன்னாள்:

"என்னுடைய இந்த நீளமான மூக்கிற்கு பதிலாக ஒரு பெரிய மூக்கை வைத்துக் கொண்டு வந்தால், உனக்கு என்னை அடையாளம் தெரியுமா? தெரியாது அல்லவா? அதே மாதிரி நான் வேறு ஒரு சென்ட்டைப் பூசிக் கொண்டு வந்தால் உனக்கு என்னைத் தெரியாமல் போய்விடும்."

தாய் கூறியது உண்மைதான். சிறுவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது, காலையில் குளித்து முடித்துவிட்டு அவனுடைய அன்னை கட்டிலுக்கு அருகில் வருவாள். கண்களைத் திறப்பதற்கு முன்னால் அவன் தன் தாய் வந்திருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்வான். தாயிடம் இருக்கும் அந்த தனிப்பட்ட வாசனையின் மூலம்தான். அவனால் அதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. தாயின் காலை நேரத்து முகம் மிகவும் அழகாக இருக்கும்.

"நான் உன்னுடைய அம்மாவைத் திருமணம் செய்தது அவளிடம் இருக்கும் அறிவைப் பார்த்து அல்ல. அழகைப் பார்த்துதான்" என்று அவனுடைய தந்தை அவ்வப்போது கூறுவதுண்டு. அறிவு இல்லை என்று கேட்கும்போது கூட. அவனுடைய தாய் சிரித்துக் கொண்டிருப்பாள். அவனுடைய மாமா ஒரு நாள் சிறுவனிடம் சொன்னார்:

"உன்னுடைய அம்மாவின் தலையில் எதுவுமே இல்லை. மோகினிகளின் தலைகளைப் போல! மோகினிகளும் அழகிகள்தானே! அதனால்தானோ என்னவோ தலைக்குள் எதுவுமே இல்லை." தொடர்ந்து மாமா உரத்த குரலில் சிரித்தார். மாமா சிரிக்கும் போது சில நேரங்களில் அவருடைய கண்கள் ஈரமாவதுண்டு. அதற்கான காரணத்தைக் கேட்டதற்கு மாமா சொன்னார்.

"என்னுடைய சிரிப்பு அப்படித்தான் இருக்கும், மகனே. கொஞ்சம் அழுகையும் கொஞ்சம் சிரிப்பும்... அப்படியே ஒரு நாள் இந்தக் கிழவன் இறந்து விடுவான்."

மாமா இறந்தால், தான் மிகவும் கவலைப்படுவோம் என்று சிறுவனுக்குத் தோன்றும். ஆனால், அவன் அதைப் பற்றிக் கூறுவதில்லை. மாமா தான் ஒரு 'திருமணமாகாத ஆள்' என்று கூறுவதுண்டு. மனைவியும் குழந்தைகளும் இல்லாத ஒரு அதிர்ஷ்டசாலி என்று அதற்கு அர்த்தம் என்றும் மாமா கூறுவார். தான் பெரியவனாக ஆகும்போது ஒன்று- ஒரு திருமணமாகாத ஆளாக ஆவேன், இல்லாவிட்டால் ஒரு கடல் கொள்ளைக்காரனாகஆவேன் என்று மாமாவிடம் கூறியபோது, மாமா மீண்டும் விழுந்து விழுந்து சிரித்தார். இரண்டு மாதிரி ஆனாலும், பல ஆபத்துக்களையும் சந்திக்க வேண்டியதிருக்கும் என்று மாமா சொன்னார்.

"எனக்கு சந்தோஷமாக இருக்கிறது, டுக்காராம். உங்களைத் தவிர, இந்த மாதிரியான காரியங்களை இந்த அளவிற்கு அருமையாக யாரால் செய்ய முடியும்? இந்தப் பிள்ளைகளுக்கு ரத்தத்தைப் பார்த்தால் தலை சுற்றத் தொடங்கிவிடும்..."-  கறுத்த தொப்பி அணிந்திருந்த மனிதனின் வார்த்தைகளைக் கேட்டு, சிறுவன் சிந்தனைகளில் இருந்து விடுபட்டான்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

பழம்

பழம்

July 25, 2012

தேன் மா

தேன் மா

March 8, 2012

ஒட்டகம்

ஒட்டகம்

February 23, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel