Lekha Books

A+ A A-

உன் நினைவாக... - Page 4

un-ninaivaga

அவள் பார்க்க மிகவும் அழகாக இருந்தாள். என் வகுப்பில் இருக்கும் சிறுமிகளைவிட அவள் அழகு என்பதென்னவோ உண்மை. பாட்டி அவளை உள்ளே அழைத்தாள். அவள் அதைக் கேட்காதது மாதிரி இருந்தாள். அருகில் சென்று கையைப் பிடித்ததுதான் தாமதம். அவள் அழ ஆரம்பித்துவிட்டாள். தொடர்ந்து அவள் அழைத்தாள்.

"டாடி..."

என் தந்தையின் அருகில் வந்து பாட்டியைச் சுட்டிக்காட்டியவாறு அவள் மெதுவான குரலில் என்னவோ சொன்னாள்.

அது எனக்குப் பிடிக்கவில்லை. அவள் பேசியது அல்ல. என் தந்தையுடன் மிகவும் நெருக்கமாக அவள் நின்றிருந்ததை நான் விரும்பவில்லை.

அன்று இரவு என் தந்தைக்கும் தாய்க்குமிடையில் மணிக்கணக்காக வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. எதற்காக என் தாய் என் தந்தையுடன் சண்டை போட வேண்டும்?

நான் எதிர்பார்த்ததைப் போல் வீட்டிற்குள் சூழ்நிலை விரும்பத்தக்கதாக இல்லை. ஆங்காங்கே ஒவ்வொருவரும் முணுமுணுப்புக் குரலில் பேசிக் கொண்டார்கள். தாங்கள் பேசுவதை என் தாய் கேட்டுவிடக் கூடாது என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்தது. எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் அந்தச் சிறுமிதான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

பக்கத்து வீட்டு பாருவம்மாவிடம் சித்தி மெதுவான குரலில் சொன்னாள்:

"பார்த்தா தெரியலியா?"

"தெரியாம என்ன?"

"அக்காவுக்குத் தெரிய வேண்டாம். இதுதான் மூத்த மகள்..."

விஷயம் கிட்டத்தட்ட எனக்கும் புரிந்து விட்டது. வீட்டிற்குள் இருக்கும் முணுமுணுப்புகளுக்கெல்லாம் மூல காரணமாக இருக்கும் விஷயம் ஒன்றே ஒன்றுதான். லீலா என் தந்தையின் மகள்!

என் தந்தையின் மகள்! அப்படியென்றால் என்னுடைய சகோதரி. நான் இவ்வளவு நாட்களும் மனதில் நினைத்திருந்தது தவறு என்பது புரிந்தது. எனக்கும் ஒரு சகோதரி இருக்கிறாள்!

அது உண்மையிலேயே ஒரு முக்கியமான விஷயம்தான் என்று நான் நினைத்தேன். இருந்தாலும் இதற்காக இவர்கள் எல்லோரும் ஏன் முணுமுணுக்க வேண்டும்?

அவள் பேசுவது எதுவும் எனக்குப் புரியவில்லை. அவளின் கூர்மையான பார்வையின் அர்த்தமும் விளங்கவில்லை. இருந்தாலும், அவளின் எந்தச் செயலையும் நான் எதிர்க்கவில்லை. காரணம்- அவள் என் சகோதரி ஆயிற்றே!

அவள் என்னுடைய தங்கையா, அக்காவா? சொல்வது சற்று கடினமான விஷயம்தான். என் தந்தையிடம் கேட்டால் உண்மை தெரிந்துவிடும். ஆனால் கேட்க முடியாதே! தங்கையாக இருப்பதற்கான வாய்ப்புத்தான் அதிகம். என்னுடைய மொழி அவளுக்குப் புரிந்து விட்டால் நான் அவளை 'தங்கை' என்றே அழைக்க ஆரம்பித்துவிடுவேன்.

தங்கையுடன் நெருங்கிப் பழக நான் முயற்சித்தாலும், நடைமுறையில் அது நடக்காமலே இருந்தது. அவள் எங்களைவிட்டு மிகவும் விலகி நின்றிருந்தாள். என் தந்தையுடன் மட்டுமே அவள் பேசுவாள். எப்போதும் அவளுக்கு 'டாடி' மட்டும் போதும். 'டாடி' என்றால் 'அப்பா' என்று பெரிய அண்ணன் தான் அர்த்தம் சொன்னார். பெரிய அண்ணனுக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும்

பகல் முழுவதும் அவள் அந்தத் தோல் பெட்டிக்கு மேலேயே உட்கார்ந்திருப்பாள். சாவிக்கொத்தை எப்போது பார்த்தாலும் சுண்டு விரலில் வைத்துக் கொண்டு சுழற்றிக் கொண்டே இருப்பாள். பெட்டியின் பக்கத்தில் யாராவது சென்றால் பாம்பைப் போல அவள் சீற ஆரம்பித்துவிடுவாள்.

அந்தப் பெட்டி நிறைய அவளுடைய ஆடைகள்தாம். அழகான துணியால் அமைந்த ஆடைகள். பெட்டியைத் திறந்தால் பாச்சா உருண்டையின் வாசனை 'குப்'பென்று வரும். அதோடு சேர்ந்து வேறு ஏதோவொரு அருமையான நறுமணமும்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் நான் அந்த ரப்பர் ஆந்தையைப் பார்த்தேன். அவள் பெட்டியைத் திறந்தபோது நான் பின்னால் நின்று மெதுவாக எட்டிப் பார்த்தேன். அப்போதுதான் அது என் கண்ணில் பட்டது. ஆடைகளுக்கு மத்தியில் அழகான ஒரு ரப்பர் ஆந்தை.

"அது என்ன?"

என்னால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை.

அவள் கண்களைச் சுருக்கி வைத்துக் கொண்டு ஒரு மாதிரி என்னைப் பார்த்தாள். நான் என்ன சொன்னேன் என்பது அவளுக்குப் புரியவில்லை போலிருக்கிறது-.

"அதோ இருக்கே அதைச் சொல்றேன்."

நான் கையால் சுட்டிக் காட்டினேன்.

அவள் அந்த ரப்பர் ஆந்தையை வெளியே எடுத்தாள். அதன் அழகை தனக்குள் ஒரு முறை ரசித்துவிட்டு அவள் என்னைப் பார்த்தாள். அவளின் மென்மையான விரல்கள் அந்த ரப்பர் ஆந்தைக்குப் பின்னால் இயங்கின. அடுத்த நிமிடம் ஆந்தையின் நீலக்கண்கள் அசைந்தன.

"நான் கொஞ்சம் பார்க்கட்டுமா?"

நான் வெட்கத்துடன் சொன்னேன். யாராவது நான் சொன்னதைக் கேட்டால் என்னைக் கேலி பண்ணுவார்களோ என்ற பயம் வேறு.

மீண்டும் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் அவள் என்னைப் பார்த்தாள். பிறகு என்ன நினைத்தாளோ மெதுவாக அந்த ரப்பர் ஆந்தையை பெட்டிக்குள் வைத்து பத்திரமாகப் பூட்டினாள். அதைப் பார்த்து எனக்கு என்னவோ போலாகிவிட்டது. என்னுடைய தந்தையின் மகள்தான் என்றாலும் அவள் பயங்கர பிடிவாதக்காரிதான். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

அந்த ரப்பர் ஆந்தை மீது எனக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது என்பதை அவள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவள் ஏன் அவ்வப்போது பெட்டியைத் திறந்து அந்த ரப்பர் ஆந்தையை நான் பார்க்கும்படி காண்பித்து என்னை வெறுப்படையச் செய்ய வேண்டும்?

அவளுடைய அந்தப் போக்கை பொதுவாகவே நான் விரும்பவில்லை. என் தந்தையிடம் இந்த விஷயத்தைச் சொன்னால் அதே போல ஒன்றை எனக்கு அவர் வாங்கித் தராமல் இருக்க மாட்டார். அப்படி ஒன்று என் கைக்கு வந்தால் நான் அதை என் வகுப்பறைக்குக் கொண்டு சென்று என் நண்பர்கள் முன்னால் வைத்து கண்களை அசையச் செய்யலாம்; வயிறைத் திறக்கச் செய்யலாம்.

என் தந்தையிடம் சொன்னால் என்ன?

அவரிடம் நெருங்க எனக்கு சற்று தயக்கமாக இருந்தது. விஷயமொன்றுமில்லை. அவளைப் போல 'டாடி' என்று அழைத்தவாறு ஓடிச் சென்று அவருடைய மடியில் போய் உட்கார எனக்கு என்னவோ போல் இருந்தது.

என் தந்தை அதிகம் பேசக்கூடியவர் இல்லை. தூரத்தில் நின்று கொண்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அவரையே நான் பார்த்துக் கொண்டிருப்பேன். தடித்த ஃப்ரேமைக் கொண்ட அந்த கண்ணாடி அவர் முகத்தைத் திருப்பும் போது பிரகாசமாகத் தெரிவதைப் பார்ப்பதற்கே சுவாரசியமாக இருக்கும்.

ஒருமுறை மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரிடம் கேட்கலாம் என்று தீர்மானித்து விட்டேன். லீலாவின் முன்னால் கேவலமான மனிதனாக நான் இருந்துவிடக்கூடாது அல்லவா? அவரின் அருகில் சென்று நின்றபோது அவர் கேட்டார்:

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel