
அனைத்து மனித முகங்களையும்
உன் முகத்தில் வைத்திரு.
அவற்றைக் குறித்து
எந்த முடிவையும் எடுக்காதே.
* * *
உன் வெறுப்புகளை
கண்ணாடியிடம் காட்டி விட்டு அழு.
அப்போதுதான்- உண்மையான கலை பிறக்கிறது.
உண்மையான படைப்பு ஆரம்பமாகிறது.
* * *
ஒரு தையல்காரன்
ஒரு கிழிந்த சட்டையைக் கட்டாயம்
வைத்திருக்க வேண்டும் -
தன் நிபுணத்துவத்தை
அவன் அனுபவரீதியாக பெறுவதற்கு.
* * *
பிச்சைக்காரனின் காதில்
ஒரு குரல்
ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
அது கூறுகிறது -
அருகில் வா.
இரக்கம் உன்னைத் தேடுகிறது!
* * *
நம் கண்ணீர் துளிகள்
பூமியை வளரச் செய்யும்.
வெட்கப்படாதது எதுவோ,
எந்த உண்மையையும்
பார்த்து அச்சப்படுவது
எதுவோ அதை கூர்ந்து பார்.
* * *
யாராவது உங்களுக்காக
தங்கத்தை எண்ணிக் கொண்டிருந்தால்,
கைகளையோ தங்கத்தையோ பார்க்காதீர்கள்.
தருபவரை மட்டுமே பாருங்கள்.
* * *
எகிப்து நாட்டைச் சேர்ந்தவனுக்கு
நைல் நதி இருத்தல் நிறைந்ததாக தெரியும்.
அதுவே ஒரு இஸ்ரேல் நாட்டுக்காரனுக்கு
தெளிந்த நீரோட்டமாக தெரியும்.
ஒருவனுக்கு ஒரு நெடுஞ்சாலையாக தெரிவதே
இன்னொருவனுக்கு பேரழிவாக தெரிகிறது.
* * *
ஒரு ஆணுக்கும்
ஒரு பெண்ணுக்கும்
ஒரு உண்மையான புனித நாள் -
அவர்கள் தங்களைத் தாங்களே
தியாகத்திற்குள் கொண்டு வரும்
அந்த நாள்தான்.
* * *
நான் உன்னுடன்
எப்போதும் இருப்பேன்
என்பதற்கு அர்த்தம் -
நீ கடவுளை எதிர்பார்க்கும்போது
உன் கண்களின் பார்வையில்
கடவுள் இருக்கிறார்.
* * *
தங்களின் கைகளை
வெறுமையில் கொண்டுபோய்
யார் இருக்கச் செய்தவர்களோ,
அவர்களுக்கு பொய் -
உண்மை மனம் -
ஆன்மா எதனுடனும் இனி தொடர்பில்லை.
* * *
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook